டெல்லி: இந்தியாவின் மெகா கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் 3 பிள்ளைகளுக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தில் மாதச் சம்பளம் தரப்பட மாட்டாதாம். அதற்குப் பதில் போர்டு மீட்டிங், கமிட்டி மீட்டிங்குகளுக்கு வரும்போது அதற்கான செலவுத் தொகை மட்டுமே தரப்படுமாம்.
அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் மற்றும் மகள் இஷா (இருவரும் இரட்டையர்கள், வயது 31), இளைய மகன் ஆனந்த் (28 வயது) ஆகியோர் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் இயக்குநர்களாக உள்ளனர். தந்தை முகேஷ் அம்பானிக்கு தற்போது 66 வயதாகிறது. அவர் கடந்த 2020ம் ஆண்டிலிருந்தே சம்பளம் வாங்குவதில்லை. இந்த நிலையில் தனது பிள்ளைகளுக்கும் சம்பளத்தை நிறுத்தி விட்டார் முகேஷ். இதுதொடர்பான தீர்மானமும் போடப்பட்டுள்ளது.
இதேபோலத்தான் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி போர்டு இயக்குநராக கடந்த 2014ம் ஆண்டு நியமிக்கப்பட்டபோதும் சம்பளம் இல்லாதவராக நியமிக்கப்பட்டார். அவருக்கும் பீஸ் மட்டும்தான். அதேசமயம், கடந்த 2022-23 நிதியாண்டில் அவர் பீஸாக ரூ. 6 லட்சமும், கமிஷனாக ரூ. 2 கோடியும் சம்பாதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}