டெல்லி: இந்தியாவின் மெகா கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் 3 பிள்ளைகளுக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தில் மாதச் சம்பளம் தரப்பட மாட்டாதாம். அதற்குப் பதில் போர்டு மீட்டிங், கமிட்டி மீட்டிங்குகளுக்கு வரும்போது அதற்கான செலவுத் தொகை மட்டுமே தரப்படுமாம்.
அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் மற்றும் மகள் இஷா (இருவரும் இரட்டையர்கள், வயது 31), இளைய மகன் ஆனந்த் (28 வயது) ஆகியோர் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் இயக்குநர்களாக உள்ளனர். தந்தை முகேஷ் அம்பானிக்கு தற்போது 66 வயதாகிறது. அவர் கடந்த 2020ம் ஆண்டிலிருந்தே சம்பளம் வாங்குவதில்லை. இந்த நிலையில் தனது பிள்ளைகளுக்கும் சம்பளத்தை நிறுத்தி விட்டார் முகேஷ். இதுதொடர்பான தீர்மானமும் போடப்பட்டுள்ளது.
இதேபோலத்தான் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி போர்டு இயக்குநராக கடந்த 2014ம் ஆண்டு நியமிக்கப்பட்டபோதும் சம்பளம் இல்லாதவராக நியமிக்கப்பட்டார். அவருக்கும் பீஸ் மட்டும்தான். அதேசமயம், கடந்த 2022-23 நிதியாண்டில் அவர் பீஸாக ரூ. 6 லட்சமும், கமிஷனாக ரூ. 2 கோடியும் சம்பாதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}