- அமிர்தம் ரமேஷ்
அன்பே
அழகே
அற்புதமே
ஆரமுதே
அழகின்
அதிசயமே
உன் நகைமுகம்
கண்டு
மயங்குது
உள்ளமது
கள்ளமில்லா
புன்னகையுனது

உன்
பூமுகம்
கண்டாலே
மனது
தோகை
விரித்தாடுதே
தீட்டி வைத்த
சிற்பமொன்று
வயலோரம்
சிங்கார
நடைபயிலுதோ
பசும்புல் நுனியெல்லாம்
பனிமுத்துக்கள்
படர்ந்திடுதே
குளிரோடைதனில்
வயலோரம்
வரப்பு மீது
நீ பாதம் பதிக்க
உன் அழகு
நடையில்
அன்னமும்
மயங்குமே
அன்னக்கிளியே
உன் அழகை
கண்ட நெற்பயிர்களும்
மகிழ்வில்
கூத்தாடுதே
வண்ணமயிலே
வாகாய் அசைந்து
வரும் தேரே
தெம்மாங்கு
படித்திடவா
உன் நளினமான
நடையழகைக்
கானும்
உள்ளங்களுக்குள்
எத்தனை எத்தனை
இன்பம்
கவிஞர்
நெஞ்சில்
கற்பனை
ஊற்றாய்
பொங்கும்
"வீட்டிலிருந்தபடியே ஓபி சீட்": அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்அப் மூலம் முன்பதிவு
TET ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளுக்கு இடைக்காலத் தடை: ஐகோர்ட் அதிரடி!
ஆரோக்கியா பால் மற்றும் தயிர் விலை திடீர் உயர்வு - நாளை முதல் அமல்!
அனைத்து தகுதியான பயனாளிகளுக்கும் நலத்திட்ட உதவிகள் : முதல்வர் விஜய் உத்தரவு
கரூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை...அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு!
செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு: சென்னை உயர் நீதிமன்றத்தில் பிற்பகலில் விசாரணை!
Wayanad: வயநாடு நிலச்சரிவிற்கு இது தான் காரணம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்!
பூமியில் புதைந்த பூலான்தேவி
Tamil Poem: புதிய விடியல்
{{comments.comment}}