- புலவர். ப.ஈஸ்வரநாதன்
சிந்திய உழைப்பால்
உயர்வேஅடைந்திடு
சிந்தனை செய்தே
சிறப்பாய்வாழ்ந்திடு
அன்பை பெருக்கியே
ஆதரவு தந்திடு
ஒற்றுமை உணர்ந்து
உலகம் சிறந்திடு ...
உழைப்பை நம்பியே
சிகரம் தொட்டிடு .
உள்ளம் சிறக்க
உயர்ந்து வாழ்ந்திடு
பஞ்சம் தீர்ந்திடவே
விவசாயம் காத்திடு
பசியும் பட்டினியும்
ஒழிக்க போராடிடு
அளவாய் உறங்கிடு
அனலாய் கிளம்பிடு
திறமை வளர்த்தே
தாயகம் காத்திடு ...
புதியென புதியதாக
பிறக்கட்டும் விடியலாக
இயற்கை வளமாக
இரவும் விடியட்டுமே ..
(புலவர் ப.ஈஸ்வரநாதன். சென்னை. தமிழ் இலக்கியம் பயின்று பி.லிட் பட்டம் பெற்றவர். இலக்கிய பற்றாளர், பேச்சாளர். கவிஞர். பல இலக்கிய மன்றத்தில் நடுவர். மற்றும் நெறியாளர்)
நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்
Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!
ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?
ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்
ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்
சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!
ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா
ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!
மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்
{{comments.comment}}