வரமாக வந்தவள் நீயடி!

Jul 09, 2026,01:02 PM IST
- உடுமலைப்பேட்டை அமிர்தம் ரமேஷ்

வானிலை
அறிக்கையில் கூட
அறிவிக்கவில்லையே
ஏன் இந்த
திடீர் மாற்றம்..!

வான் மேகங்கள்
பரவசமாக
பாய்ந்தோட...!
கண் கொள்ளாக்
கடல் கொந்தழிக்க...!

அலைமேல் அலை 
விடாது ஆர்ப்பரிக்க...!
சற்றே
சிந்தித்தேன்...!

ஆஹா
வியந்தேன்...!
என்ன அழகு
விக்கித்தேன்...!

என்னவளை
கண்டதால்
வந்த மாற்றங்களாயிது...!



அவளை நான்
நோக்க
வெட்கத்தில்
அவள் நிலம் நோக்க...!

கூந்தல் காற்றில்
அலைபாய
இருமலரின்
வாசம் நாசி தழுவிச்செல்ல...!

இதுவரை கண்டதில்லை
இப்படி ஓர்
அதிசயத்தை...!

அதனால் தானோ
இயற்கையும்
இதமாக  
இடம் மாறுகிறது...!

பொன்னும் வேண்டாம் 
மணியும் வேண்டாம்
உன் 
புன்னகைப் போதுமடி...!

என்னவள்
எனக்கானவள்
என்னுயிரானவள்
இதயத்தை
இதமாக தந்துவிட்டால்
உயிராய்
எனக்குள்
நுழைந்து விட்டாள்

தாய்போல் உன்னை
தாங்கிடுவேன்
தாரமாக வந்திடடி
தவப்பயனை
இருவரும்
சுகமாக வாழ்ந்திடலாம்
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Poem: குமூகத்தில் போலி மனிதர்கள்

news

அமைச்சர் மரியா வில்சன் புதுச்சேரி கோர்ட்டில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு

news

வரமாக வந்தவள் நீயடி!

news

தவெக எம்எல்ஏ-விடம் பேரம் : சிங்கப்பூரில் இருக்கும் நபருக்கு லுக் அவுட் நோட்டீஸ்

news

அதிமுக ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்த ஓசூர் எம்எல்ஏ பாலகிருஷ்ணன் ரெட்டி

news

கரூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலைக்கு எதிரான மனு: விசாரிக்க கோர்ட் மீண்டும் மறுப்பு

news

தனுஷின் அரசியல் கட்சிக் கொடி சர்ச்சை : இயக்குநர் சுப்ரமணிய சிவா விளக்கம்

news

2 மாசம்தான் டைம்.. காலி பண்ணிட்டுக் கிளம்புங்க .. வாடகை வீட்டு துயரங்கள்!

news

98% விழுக்காட்டைத் தாண்டியது.. இந்தியாவின் 6-வது ‘முழு எழுத்தறிவு’ பெற்ற மாநிலம் உத்தரகாண்ட்!

அதிகம் பார்க்கும் செய்திகள்