ஆனந்த மகிந்திரா "பிளான்" இதுதானாம்.. ஓபனா சொல்லிட்டார்.. உங்க கமென்ட் என்ன?

Aug 29, 2023,12:01 PM IST
மும்பை: செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு தார் ஜீப் பரிசளிக்க திட்டமிட்டிருந்த மகிந்திரா அன்ட் மகிந்திரா நிறுவனத்தின் அதிபர் ஆனந்த் மகிந்திரா தற்போது தனது திட்டத்தை மாற்றிக் கொண்டு, பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு எக்ஸ்யூவி இவி  கார் பரிசளிக்க திட்டமிட்டுள்ளாராம்.

செஸ்  உலகின் புதிய மன்னராக பிரக்ஞானந்தா முடி சூட்டப்படு நேரம் வெகுவாக நெருங்கி விட்டது.  உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஜஸ்ட் மிஸ்ஸாக பட்டம் பறி போனாலும் கூட இரண்டாவது இடத்தைப் பிடித்து அசத்தி விட்டார் பிரக்ஞானந்தா.



அவருக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து கொண்டுள்ளன. விரைவில் உலக அளவில் பல்வேறு சாதனைகளை பிரக்ஞானந்தா படைப்பார் என்ற நம்பிக்கை நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இந்த நிலையில், பிரக்ஞானந்தா குறித்து ஒரு டிவீட் போட்டுள்ளார் ஆனந்த் மகிந்திரா.

அந்த டிவீட்டில் ஆனந்த் மகிந்திரா கூறியிருப்பதாவது:

பிரக்ஞானந்தாவுக்கு தார் பரிசளிக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். அதை நான் பாராட்டுகிறேன், வரவேற்கிறேன். ஆனால் என்னிடம் இன்னொரு ஐடியா இருக்கிறது.

தங்களது பிள்ளைகளை செஸ்ஸில் அறிமுகப்படுத்தி அவர்களுக்கு ஆதரவாக இருந்து, எல்லாவற்றையும் செய்துள்ள பெற்றோரை பாராட்ட , கெளரவிக்க நான் விரும்புகிறேன்.  இந்த பூமியின் சிறந்த எதிர்காலத்திற்கு இது சிறந்த முதலீடு. எலக்ட்ரிக் வாகனங்கள் போலத்தான் இதுவும். எனவே பிரக்ஞானந்தாவின் பெற்றோர் நாகலட்சுமி, ரமேஷ்பாபுவுக்கு நான் எக்ஸ்யூவி 400 இவி வாகனத்தை பரிசளிக்க முடிவு  செய்துள்ளேன்.. உங்க கருத்து என்ன. என்று கேட்டுள்ளார் ஆனந்த் மகிந்திரா.

இது செமையான ஐடியா மற்றும் வியாபார உத்தியாக நமக்குத் தோன்றுகிறது.. உங்களுக்கு எப்படி தோணுது வாசகர்களே!

சமீபத்திய செய்திகள்

news

இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு.. 452 வாக்குகள் பெற்று வெற்றி

news

தவெக தலைவர் விஜய் சுற்றுப் பயணம்.. சனி, ஞாயிற்றை தேர்வு செய்ய இதுதான் காரணமா?

news

மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

news

செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?

news

மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!

news

Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?

news

பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?

news

நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!

news

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது

அதிகம் பார்க்கும் செய்திகள்