ஆனந்த மகிந்திரா "பிளான்" இதுதானாம்.. ஓபனா சொல்லிட்டார்.. உங்க கமென்ட் என்ன?

Aug 29, 2023,12:01 PM IST
மும்பை: செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு தார் ஜீப் பரிசளிக்க திட்டமிட்டிருந்த மகிந்திரா அன்ட் மகிந்திரா நிறுவனத்தின் அதிபர் ஆனந்த் மகிந்திரா தற்போது தனது திட்டத்தை மாற்றிக் கொண்டு, பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு எக்ஸ்யூவி இவி  கார் பரிசளிக்க திட்டமிட்டுள்ளாராம்.

செஸ்  உலகின் புதிய மன்னராக பிரக்ஞானந்தா முடி சூட்டப்படு நேரம் வெகுவாக நெருங்கி விட்டது.  உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஜஸ்ட் மிஸ்ஸாக பட்டம் பறி போனாலும் கூட இரண்டாவது இடத்தைப் பிடித்து அசத்தி விட்டார் பிரக்ஞானந்தா.



அவருக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து கொண்டுள்ளன. விரைவில் உலக அளவில் பல்வேறு சாதனைகளை பிரக்ஞானந்தா படைப்பார் என்ற நம்பிக்கை நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இந்த நிலையில், பிரக்ஞானந்தா குறித்து ஒரு டிவீட் போட்டுள்ளார் ஆனந்த் மகிந்திரா.

அந்த டிவீட்டில் ஆனந்த் மகிந்திரா கூறியிருப்பதாவது:

பிரக்ஞானந்தாவுக்கு தார் பரிசளிக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். அதை நான் பாராட்டுகிறேன், வரவேற்கிறேன். ஆனால் என்னிடம் இன்னொரு ஐடியா இருக்கிறது.

தங்களது பிள்ளைகளை செஸ்ஸில் அறிமுகப்படுத்தி அவர்களுக்கு ஆதரவாக இருந்து, எல்லாவற்றையும் செய்துள்ள பெற்றோரை பாராட்ட , கெளரவிக்க நான் விரும்புகிறேன்.  இந்த பூமியின் சிறந்த எதிர்காலத்திற்கு இது சிறந்த முதலீடு. எலக்ட்ரிக் வாகனங்கள் போலத்தான் இதுவும். எனவே பிரக்ஞானந்தாவின் பெற்றோர் நாகலட்சுமி, ரமேஷ்பாபுவுக்கு நான் எக்ஸ்யூவி 400 இவி வாகனத்தை பரிசளிக்க முடிவு  செய்துள்ளேன்.. உங்க கருத்து என்ன. என்று கேட்டுள்ளார் ஆனந்த் மகிந்திரா.

இது செமையான ஐடியா மற்றும் வியாபார உத்தியாக நமக்குத் தோன்றுகிறது.. உங்களுக்கு எப்படி தோணுது வாசகர்களே!

சமீபத்திய செய்திகள்

news

சாதாரண வேலையில், அசாதாரண சேவை.. மர மனிதன் யோகநாதன்!

news

நீரின்றி உயிரில்லை.. நீரை சேமிக்கப் பழகுவோம்.. World Water Day

news

தண்ணீரை சேகரித்து.. அடுத்த தலைமுறைக்கு சேமித்துத் தர வேண்டும்.. மாணவர்களுக்கு அறிவுரை

news

நிலத்தடி நீரை உயர்த்துவோம்.. அனைத்து உயிர்களும் நலமுடன் வாழ வழி செய்வோம்!

news

கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு: சாமானிய மக்களைக் காக்க இந்தியாவின் அதிரடி நடவடிக்கை

news

புதுச்சேரி சட்டசபைத் தேர்தல்.. 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது பாஜக!

news

சென்னையில் ஒரு தொகுதி வேண்டும்...திமுக-விற்கு சிபிஎம் நிபந்தனை?

news

டில்லி வந்தது இதுக்கு தான்... ஒரே போடாக போட்ட டிடிவி தினகரன்

news

பியூஷ் கோயல் வருகைக்குப் பின் தொகுதிப் பங்கீடு முடிவாகும் - நயினார் நாகேந்திரன் தகவல்

அதிகம் பார்க்கும் செய்திகள்