நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்.. அன்னபூரணி அரசு அறிவிப்பு.. மாப்பிள்ளை இவர்தானாம்!

Oct 29, 2024,06:44 PM IST

சென்னை: அன்னபூரணி அரசு அம்மா என்ற பெயரில் ஆன்மீக தலைவராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பரபரப்பைக் கிளப்பிய அன்னபூரணிக்கு 3வதாக திருமணம் நடைபெறவுள்ளது. இதை அவரே அறிவித்துள்ளார்.


சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர்தான் அன்னபூரணி. இளம் வயதிலேயே சென்னைக்கு வந்து விட்ட அவருக்கு முதலில் ஒரு திருமணம் நடந்தது. அந்தத் திருமண வாழ்க்கையில் அவருக்கு ஒரு மகளும் பிறந்தார். ஆனால் கணவருடன் ஏற்பட்ட பிணக்கினால் குடும்ப வாழ்க்கை கசந்தது. இந்த நிலையில்தான் அரசு என்பவரைச் சந்தித்தார். இருவரும் வாழ்க்கையில் இணைய முடிவு செய்தனர்.


ஆனால் முதல் கணவர் அதற்கு பிரச்சினை செய்ததாக சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரம் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியிலும் கூட வெடித்தது.  அதன் பிறகு தனது மகளுடன் முதல் கணவரை விட்டுப் பிரிந்து வந்த அன்னபூரணி அவரை விவாகரத்து செய்து விட்டு அரசுவுடன் வாழ ஆரம்பித்தார். ஆனால் இந்த வாழ்க்கையும் அவருக்கு நிலைக்கவில்லை. 2019ல் அரசு மரணமடைந்தார்.




அதன் பிறகு  ஆன்மீகத் தலைவராக அவதாரம் எடுத்தார் அன்னபூரணி. தனது பெயரை அன்னபூரணி அரசு அம்மா என்று அறிவித்துக் கொண்டார். அவரது வீடியோக்கள் வைரலாகின. பலர் டிரோல் செய்தார்கள். கிண்டலடித்தார்கள்.. அதுவே அவருக்கு நல்ல விளம்பரமாக அமைந்ததால் பிரபலமானார். இடையில் சிறிது காலம் அமைதியாக இருந்து வந்த அன்னபூரணி தற்போது மீண்டும் லைம்லைட்டுக்கு வந்துள்ளார்.


ஆமாம், மீண்டும் மணக்கோலம் பூணவுள்ளார் அன்னபூரணி. தனக்காக தன்னுடைய வாழ்க்கையை ஆன்மீகத்திற்கு அர்ப்பணித்த ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறாராம் அன்னபூரணி. திருமணம் செய்யப் போவதாலோ என்னவோ உடல் எடையையும் கூட குறைத்து கொஞ்சம் ஸ்லிம்மாக மாறியுள்ளார் அன்னபூரணி. தனது திருமண அறிவிப்பை பேஸ்புக்கில் போட்டுள்ளார். 


அதில், நவம்பர் 28, 2024 அன்று அரசுவின் இன்னொரு அத்தியாயம் ஆரம்பம். அதாவது அரசுவின் அடுத்த பரிணாமம் ஆரம்பம்.




அப்பாற்பட்ட சக்தி என்னை இயக்கினாலும்  சமுதாயத்தின் பார்வையில் தனி ஒரு பெண்ணாக இருப்பதால் எனக்கு ஏற்படும் இடையூர்களால் என் பாதுகாப்பு கருதியும் சமுதாயத்தினால் எனக்கு எந்த ஒரு தொந்தரவும் இன்றி என்னுடைய ஆன்மீக சேவையை சுதந்திரமாக செய்யவும் என்னுடைய நிர்வாகத்தை கவனித்துக் கொள்ள எந்த ஒரு சுயநலமும் இன்றி விருப்பு வெருப்பின்றி அர்பணிப்பு உணர்வுடன் என்னுடைய அருளை உலக மக்கள் அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதற்கும், நானும் அரசுவும்  திருமணம் செய்து கொண்ட  நாளான அதே நவம்பர் 28 ல், நான் என்னுடைய ஆன்மீகத்திற்காக தன்னை அர்பணித்த ரோகித்தை திருமணம் செய்து கொள்கிறேன் என்று அறிவிக்கிறேன். 


அன்றைய தினத்தில்  விருப்பம் உள்ளவர்கள் அரசுவின் அடுத்த பரிணாம நிகழ்வில் கலந்து கொண்டு ஆசிர்வாதம் வாங்கி செல்லவும்.

என்னை தேடி வரும் மக்கள் அனைவருக்கும் உங்கள் அனைத்து குறைகளையும் நிவர்த்தி செய்து நீங்கள் கேட்பது அனைத்தும் கிடைக்க செய்து உங்களை உங்கள் குடும்பத்துடன் கொண்டாட வைப்பதற்கு அளப்பறிய சக்தியுடனும் அளப்பறிய அருளுடனும் உங்களுக்காக வீற்றிருக்கும் உங்கள் அன்பு அன்னை.


மக்களுக்கு அருளாசி வழங்குவதை சேவையாகதான் செய்து கொண்டு இருக்கிறேன். இனிமேலும் என்னுடைய உடல் இந்த பூமியில் இருக்கும் வரை  சேவையாகதான் செய்வேன். சத்தியத்திற்கு மட்டும் கட்டுபட்டு சத்தியம் என்னை எப்படி இயக்குகிறதோ அதன்படி மட்டுமே இயங்குவேன் என்று கூறியுள்ளார் அன்னபூரணி.


தானும் ரோஹித்தும் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் அன்னபூரணி. அதில் பட்டுச் சேலையில் ஜொலிக்கிறார். கூடவே, ரோஹித்தும் வெட்கப் புன்னகையுடன் அருகில் இருக்கிறார்.


புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்துகள் சொல்லுங்க மக்களே!



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்