- செ. சாந்தி சின்னத்தம்பி, மதுரை
வறண்ட பூமி வானம் பார்த்துக் காத்திருக்கு .....
வாஞ்சையா ஒரு வார்த்தை தாராயோ முகிலே....
நஞ்சையும் புஞ்சையும் நாலு பக்கம் காஞ்சிருக்கு... .
நற்பயிர் விளைய நாலு தூரல் தூரலாமே....

உழைக்கும் உழவனின் நெஞ்சமும் கொஞ்சம் மகிழலாமே....
வெக்கையும் சற்று தணிய தண்மையும் தரலாமே....
வாயில்லா ஜீவன்களின் துயரும் எண்ணிப் பார்க்கலாமே...
வசந்தமும் இங்கு பூக்கவே வருகை புரியலாமே...
வானத்து நீரூற்றே வையகம் குளிர வருவாயா? ...
கோடையின் வெப்பத்தை வேரறுக்க வரம் தருவாயா?
(செ.சாந்தி சின்னத்தம்பி, அரசுப் பள்ளி தமிழாசிரியர் (ஓய்வு) மதுரை. சேலம் , பாரதியார் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பணிபுரிந்துள்ளேன். (2 ஆண்டுகள்) ஆர்வம்: கவிதை, இசை,பாடல், நாடகம் புனைதல். வெளியிட்ட கவிதை நூல்கள்: 2. 1. விழி மூடி யோசித்தால் 2. மௌனமும் பழகிடு. தொகுப்பு நூல்கள். 4. சென்னையில் நடந்த நேரடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது பெருமை)
கோடைக்கால மேகம்
விநாயகர் பெருமான் அவதரித்த விநாயகர் சதுர்த்தி.. ஆவணி மாத சிறப்புகள்!
செப்பிட இயலா இலக்கியத் தமிழே!
Short Story: கல் வளை!
வளர்ந்து வரும் சகிப்புத்தன்மையும் அமைதிப் பேணலும்!
தூர்ந்து போன குளம்!
Tamil Short Story: தந்தையாகிய தமையன்!
காதலின் கனவு!
Travel story: சொகுசுக் கப்பலின் மொட்டை மாடியில் அமாவாசை தர்ப்பணம்.. அசந்து போன அமெரிக்கர்!
{{comments.comment}}