- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி
இத் தென்னவனின்
தேவதையே!
இம் மன்னவனின்
மரகதமே!
என் கண்விழியின்
மெல் இமையே!
என் முகம் மலரும்
மென் தாமரையே!
சின்னஞ்சிறு கிளியே!
சிங்காரப் பூந்தோப்பே!
தென்றல் தாலாட்டும்
நறுமலர் வனமே!

நாடகத் தமிழே!
நாட்டியக் கலையே!
முக்கனிச் சுவையே!
முத்தமிழ் அழகே!
செப்பிட இயலா
இலக்கியத் தமிழே!
என் இதயம் கவர்ந்த
இன்னிசை மழையே!
என் இனிய பூபாளமே!
நம் இல்லம் கோகுலமே!
(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்)
கோடைக்கால மேகம்
விநாயகர் பெருமான் அவதரித்த விநாயகர் சதுர்த்தி.. ஆவணி மாத சிறப்புகள்!
செப்பிட இயலா இலக்கியத் தமிழே!
Short Story: கல் வளை!
வளர்ந்து வரும் சகிப்புத்தன்மையும் அமைதிப் பேணலும்!
தூர்ந்து போன குளம்!
Tamil Short Story: தந்தையாகிய தமையன்!
காதலின் கனவு!
Travel story: சொகுசுக் கப்பலின் மொட்டை மாடியில் அமாவாசை தர்ப்பணம்.. அசந்து போன அமெரிக்கர்!
{{comments.comment}}