- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி
உன் மடிமீது
குழந்தையாக
மாறுகிறேன்
மனதளவில்!
அகவை அறுபதைத்
தாண்டிய முதியவனாக
இருக்கிறேன்
வயதளவில்!
அன்னையாய்
மாறுகிறாய்!
ஆறுதலாய்ப்
பேசுகிறாய்!
கொடுத்து வைத்தவன்
நான் என்று
ஊர் உலகம்
பேசுகிறது!

தவம் செய்தவன்
நான் அல்ல!
தனம் படைத்தவன்
நான் அல்ல!
ஆனால் என்னை
அவ்வளவு நேசிக்கிறாய்!
ஆண்டவனாய் என்
கண்களுக்குத் தெரிகிறாய்!
உயர்ந்த குணம்
உனக்கு!
தெளிந்த மனம்
உனக்கு!
ஆருயிர் மனைவியாக நீ!
ஆகாயத் தேவதையாக நீ!
ஆச்சரியத்தில் நான்!
அன்னபூரணியாய் நீ!
என் முன்னோர் செய்த
புண்ணியமா!
ஏழ் பிறப்பாய்த்
தொடர்கின்ற உறவா!
மகிழ்கிறேன் பெண்ணே!
உன் மனதில் ஒரு
களங்கம்
இல்லை!
கவலை
இல்லை!
(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்)
போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி
தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!
மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!
தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!
தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!
{{comments.comment}}