மார்கழி 22 ஆண்டாள் திருப்பாவை பாசுரம் 22 : அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான

Jan 05, 2025,03:55 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


திருப்பாவை பாசுரம் 22 :


அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான

பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே

சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்

கிங்கிணி வாய்ச்செய்த தாமரை பூப்போல

செங்கண் சிறுகச்சிறதே யெம்மேல் விழியாவோ?

திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்

அங்கண் இரண்டும்கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்

எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.




பொருள் :


தங்களை விட உயர்ந்த வீரர்கள் யாரும் கிடையாது என தங்களை பற்றி பெருமை பேசிக் கொண்டிருக்கும் இந்த பூமியை ஆட்சி செய்யும் அரசர்கள் மிகவும் பணிவுடன் நீ பள்ள கொண்டிருக்கும் கட்டிலைச் சுற்றிலும், சத்சங்கம் கேட்பதற்காக காத்திருக்கும் பக்தர்களை போல் காத்து நிற்கிறார்கள். அவர்களுடன் நாங்களும் உன்னுடைய அருளை பெறுவதற்காக நாங்களும் காத்துக் கொண்டிருக்கிறோம். கிண்கிணி என ஒலிக்கும் சிறுமணியின் வாய் போலவும், தாமரைப் பூ மெதுவாக தன்னுடைய இதழ்களை திறந்து மலர்வது போலவும், உன்னுடைய சிவந்த தாமரை போன்ற கண்ணகளை மெல்ல திறந்து எங்களை பார்க்க மாட்டாயா? சந்திரனும் சூரியனும் உதித்தது போல அந்த கண்களால் எங்களை நீ பார்த்தால் எங்களின் அனைத்து பாவங்களும், சாபங்களும் தீர்ந்து விடும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Quick Tips: சப்பாத்தியை பல்லு இல்லாத தாத்தாவும் சாப்பிடுவாரு இப்படி தந்தா!

news

திருமுக்கீச்சரம் என்ற உறையூர்.. தேவாரத் திருத்தலங்கள் (2)

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 10, 2025... இன்று நினைத்தது நிறைவேறும்

news

2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு

news

நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?

news

எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

news

TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?

news

லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!

அதிகம் பார்க்கும் செய்திகள்