- ஸ்வர்ணலட்சுமி
திருப்பாவை பாசுரம் 22 :
அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே
சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச்செய்த தாமரை பூப்போல
செங்கண் சிறுகச்சிறதே யெம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்
அங்கண் இரண்டும்கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.

பொருள் :
தங்களை விட உயர்ந்த வீரர்கள் யாரும் கிடையாது என தங்களை பற்றி பெருமை பேசிக் கொண்டிருக்கும் இந்த பூமியை ஆட்சி செய்யும் அரசர்கள் மிகவும் பணிவுடன் நீ பள்ள கொண்டிருக்கும் கட்டிலைச் சுற்றிலும், சத்சங்கம் கேட்பதற்காக காத்திருக்கும் பக்தர்களை போல் காத்து நிற்கிறார்கள். அவர்களுடன் நாங்களும் உன்னுடைய அருளை பெறுவதற்காக நாங்களும் காத்துக் கொண்டிருக்கிறோம். கிண்கிணி என ஒலிக்கும் சிறுமணியின் வாய் போலவும், தாமரைப் பூ மெதுவாக தன்னுடைய இதழ்களை திறந்து மலர்வது போலவும், உன்னுடைய சிவந்த தாமரை போன்ற கண்ணகளை மெல்ல திறந்து எங்களை பார்க்க மாட்டாயா? சந்திரனும் சூரியனும் உதித்தது போல அந்த கண்களால் எங்களை நீ பார்த்தால் எங்களின் அனைத்து பாவங்களும், சாபங்களும் தீர்ந்து விடும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எளிமையின் சிகரம் ஆர். நல்லகண்ணு.. ஒரு சகாப்தத்தின் கதை.. செவ்வணக்கம்!
தோழர் நல்ல கண்ணு உடல் மருத்துவக் கல்லூரிக்கு தானமாக ஒப்படைக்கப்படுகிறது
முதுபெரும் தலைவர் நல்லகண்ணு மறைவு...முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல்
திமுக - அதிமுக.. பிரிந்து வந்து பிறந்த புதுக் கட்சிகள்.. லேட்டஸ்ட்டாக இணைந்த சசிகலா!
இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்
நமக்கான வாகனம் இதோ வந்துவிட்டது... இலட்சியத்தை வெல்வோம் - ராமதாஸ் அதிரடி
பூஜ்ஜியமும் பூஜ்ஜியமும் சேர்ந்தால் பூஜ்ஜியம்தான், ராஜ்ஜியம் கிடைக்காது - முதலமைச்சர் முக ஸ்டாலின்!
கூட்டம் கூடும்... ஆனால் அது ஓட்டாக மாறாது: மதுரையில் செல்லூர் ராஜூ பேட்டி!
தோழர் நல்லக்கண்ணு!
{{comments.comment}}