- ஸ்வர்ணலட்சுமி
திருப்பாவை பாசுரம் 22 :
அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே
சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச்செய்த தாமரை பூப்போல
செங்கண் சிறுகச்சிறதே யெம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்
அங்கண் இரண்டும்கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.

பொருள் :
தங்களை விட உயர்ந்த வீரர்கள் யாரும் கிடையாது என தங்களை பற்றி பெருமை பேசிக் கொண்டிருக்கும் இந்த பூமியை ஆட்சி செய்யும் அரசர்கள் மிகவும் பணிவுடன் நீ பள்ள கொண்டிருக்கும் கட்டிலைச் சுற்றிலும், சத்சங்கம் கேட்பதற்காக காத்திருக்கும் பக்தர்களை போல் காத்து நிற்கிறார்கள். அவர்களுடன் நாங்களும் உன்னுடைய அருளை பெறுவதற்காக நாங்களும் காத்துக் கொண்டிருக்கிறோம். கிண்கிணி என ஒலிக்கும் சிறுமணியின் வாய் போலவும், தாமரைப் பூ மெதுவாக தன்னுடைய இதழ்களை திறந்து மலர்வது போலவும், உன்னுடைய சிவந்த தாமரை போன்ற கண்ணகளை மெல்ல திறந்து எங்களை பார்க்க மாட்டாயா? சந்திரனும் சூரியனும் உதித்தது போல அந்த கண்களால் எங்களை நீ பார்த்தால் எங்களின் அனைத்து பாவங்களும், சாபங்களும் தீர்ந்து விடும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழக பட்ஜெட் 2026 எப்போது?: முதலமைச்சர் விஜய் தலைமையில் துறை வாரியான ஆலோசனை
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? என்ன மு.க.ஸ்டாலின் இப்படி சொல்லிட்டார்?
தூய்மைப் பணிகள் தனியார் மயம்: பலத்த எதிர்ப்பால் டெண்டரை ரத்து செய்தது அரசு!
"நாங்கள் அஞ்சி விடமாட்டோம்" – ரெய்டு பற்றி முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பேட்டி!
அடிச்சது யாரைத் தெரியுமா.. ஜெர்மனியை வீழ்த்திய ஈக்வடார்... நாட்டுக்கே லீவு விட்டு கொண்டாடிய அதிபர்!
மத்திய அமைச்சரவை 2 நாட்களில் மாற்றம்? நிர்மலா சீதாராமனின் இலாகா மாறுகிறதா?
தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை...சென்னையில் நாளை கனமழை வாய்ப்பு
15 ஆண்டுகளுக்குப் பிறகு 'செவ்வந்தி' அரசு பங்களாவை காலி செய்தார் இபிஎஸ்
திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
{{comments.comment}}