- ஸ்வர்ணலட்சுமி
திருப்பாவை பாசுரம் 22 :
அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே
சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச்செய்த தாமரை பூப்போல
செங்கண் சிறுகச்சிறதே யெம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்
அங்கண் இரண்டும்கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.

பொருள் :
தங்களை விட உயர்ந்த வீரர்கள் யாரும் கிடையாது என தங்களை பற்றி பெருமை பேசிக் கொண்டிருக்கும் இந்த பூமியை ஆட்சி செய்யும் அரசர்கள் மிகவும் பணிவுடன் நீ பள்ள கொண்டிருக்கும் கட்டிலைச் சுற்றிலும், சத்சங்கம் கேட்பதற்காக காத்திருக்கும் பக்தர்களை போல் காத்து நிற்கிறார்கள். அவர்களுடன் நாங்களும் உன்னுடைய அருளை பெறுவதற்காக நாங்களும் காத்துக் கொண்டிருக்கிறோம். கிண்கிணி என ஒலிக்கும் சிறுமணியின் வாய் போலவும், தாமரைப் பூ மெதுவாக தன்னுடைய இதழ்களை திறந்து மலர்வது போலவும், உன்னுடைய சிவந்த தாமரை போன்ற கண்ணகளை மெல்ல திறந்து எங்களை பார்க்க மாட்டாயா? சந்திரனும் சூரியனும் உதித்தது போல அந்த கண்களால் எங்களை நீ பார்த்தால் எங்களின் அனைத்து பாவங்களும், சாபங்களும் தீர்ந்து விடும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சாமானிய மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. அம்மா உணவகங்களைப் புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
தற்காலிக ஓய்வு.. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கடிதத்தில் உள்ளது என்ன.. யாருக்கான மெசேஜ் இது?
மே 20ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் - அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு
பேரம் பேச வேண்டிய அவசியமில்லை – விசிக தலைவர் திருமாவளவன் காட்டம்
இதுதான் உங்களது நாகரிக அரசியலா முதல்வர் விஜய் அவர்களே.. வானதி சீனிவாசன் கேள்வி
இளையராஜாவுக்கு 1540.. கார்த்திக் சுப்பராஜுக்கு 10.. ஒரு ஸ்வீட் செய்தி!
பொது வாழ்வில் இருந்து பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஓய்வு அறிவிப்பு! அதிர்ச்சியில் திமுகவினர்
அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செம்மலை விலகல்...காரணம் இது தான்
உயிரை உலுக்கும் பனி.. 200 வகையான சாப்பாடு.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 7)
{{comments.comment}}