அமராவதி: பெண்களின் வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்த வீட்டில் இருந்தே இனி வேலை பார்க்கலாம் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
முன்னர் எல்லாம் வீட்டில் இருந்து வேலை பார்ப்பது என்பது அரிதாகவே இருந்தது. அது எப்படி வீட்டில் இருந்தே வேலை பார்க்க முடியும் என்ற கேள்விகளும் எழுத்தான் செய்தன. இது கொரோனா காலத்திற்கு முன்னர் பெரிய அளவில் பேசப்படவே இல்லை. ஆனால் கொரோனா ஊரடங்கு காலத்தில் ஐடி மற்றும் வங்கியில் பணிபுரிவோர்கள் அதிகளவில் வீட்டில் இருந்து தங்கள் பணிகளை செய்யத் தொடங்கினர். அப்போதுதான் work from home என்பது அனைத்து தரப்பு மக்களால் புரிந்து தொள்ளப்பட்டது.
இந்த முறை தற்பொழுது பரவலாக அநேக இடம்களில் பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பெண்களுக்கு வேலை வாய்ப்பளித்தல், பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்தல் மற்றும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில் ஆந்திர முதல்வர் ஒரு அதிரடி திட்டத்தை அறிவித்துள்ளார். அதன்படி ஆந்திராவில் வேலை செய்யும் பெண்கள் தங்கள் வீடுகளில் இருந்தே இனி வேலை செய்யலாம் என அறிவித்துள்ளார்.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் கொள்கையின் ஒரு பகுதியாக இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் ஆந்திர முதல்வர். பெண்கள் தங்கள் சொந்த ஊர்களில் இருந்து பணி செய்யும் வகையில், ஒவ்வொரு மாநகரம், நகரம், மண்டலத்தில் வீட்டிலிருந்து வேலை செய்யலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் கிராமப்புறங்களில் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், ஐடி நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த அறிவிப்பினை அவர் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள அறிவிப்பில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான சர்வதேச தினம். இந்த துறைகளில் பெண்களின் சாதனைகளை பாராட்டுகிறேன். அவர்களுக்கு சமமான வாய்ப்புகள் வழங்குவதற்கு ஆந்திர மாநிலம் முனைப்பாக உள்ளது. வேலை வீட்டில் இருந்து செய்தால், ஹைப்ரிட் மாதிரிகள் போன்றவை பெண் தொழிலாளர்களின் பங்களிப்பை பெரிதும் அதிகரிக்கும். மேலும், பெண்கள் தங்கள் சொந்த ஊர்களில் இருந்தே பணி செய்யும் வகையில், ஒவ்வொரு மாநகரம், நகரம், மண்டலத்தில் கோ ஒர்கிங் ஸ்பேஸ் எனப்படும் பகிர்ந்து பயன்படுத்தும் வகையில் ஐடி அலுவலகங்கள் அமைக்கவும், கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், ஐ.டி. நிறுவனங்களுக்கு ஊக்குவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
கன மழை எதிரொலி.. சென்னை உள்பட பல மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.. புதுவையிலும் விடுமுறை அறிவிப்பு
8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்... 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்... வானிலை மையம் எச்சரிக்கை!
தீவிரம் அடைந்து வரும் வடகிழக்கு பருவமழை... முதல்வர் முக ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோனை!
பெங்களூரு - ஓசூர் மெட்ரோ இணைப்புத் திட்டம் சாத்தியமில்லை: மெட்ரோ நிர்வாகம்
மகளிர் இலவசப் பஸ்களை விமர்சிக்காதீங்க.. என்னெல்லாம் நடக்குது தெரியுமா.. கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
தீபாவளியன்று குறைந்திருந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு....சவரனுக்கு ரூ.2,080 உயர்வு!
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் எதிரொலி.. சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை!
தீபாவளியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம்!
உழவர்களுக்கு இந்த தீபாவளி இருளாகத்தான் இருந்தது.. கொல்லாமல் கொல்லுகிறது திமுக அரசு:அன்புமணி
{{comments.comment}}