பெண்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம்... ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கலக்கல் அறிவிப்பு!

Feb 12, 2025,03:26 PM IST

அமராவதி: பெண்களின் வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்த வீட்டில் இருந்தே இனி வேலை பார்க்கலாம் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.


முன்னர் எல்லாம் வீட்டில் இருந்து வேலை பார்ப்பது என்பது அரிதாகவே இருந்தது. அது எப்படி வீட்டில் இருந்தே வேலை பார்க்க முடியும் என்ற கேள்விகளும் எழுத்தான் செய்தன. இது கொரோனா காலத்திற்கு முன்னர் பெரிய அளவில் பேசப்படவே இல்லை. ஆனால்  கொரோனா ஊரடங்கு காலத்தில் ஐடி மற்றும் வங்கியில் பணிபுரிவோர்கள் அதிகளவில் வீட்டில் இருந்து தங்கள் பணிகளை செய்யத் தொடங்கினர்.  அப்போதுதான் work from home என்பது அனைத்து தரப்பு மக்களால் புரிந்து தொள்ளப்பட்டது. 




இந்த முறை தற்பொழுது பரவலாக அநேக இடம்களில் பின்பற்றப்பட்டு வருகின்றன.  இந்நிலையில், பெண்களுக்கு வேலை வாய்ப்பளித்தல், பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்தல் மற்றும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில் ஆந்திர முதல்வர் ஒரு அதிரடி திட்டத்தை அறிவித்துள்ளார். அதன்படி ஆந்திராவில் வேலை செய்யும் பெண்கள் தங்கள் வீடுகளில் இருந்தே இனி வேலை செய்யலாம் என அறிவித்துள்ளார். 


தகவல் தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் கொள்கையின் ஒரு பகுதியாக இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் ஆந்திர முதல்வர்.  பெண்கள் தங்கள் சொந்த ஊர்களில் இருந்து பணி செய்யும் வகையில், ஒவ்வொரு மாநகரம், நகரம்,  மண்டலத்தில் வீட்டிலிருந்து வேலை செய்யலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் கிராமப்புறங்களில் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், ஐடி நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த அறிவிப்பினை  அவர் வெளியிட்டுள்ளார்.


இது தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான சர்வதேச தினம். இந்த துறைகளில் பெண்களின் சாதனைகளை பாராட்டுகிறேன். அவர்களுக்கு சமமான வாய்ப்புகள் வழங்குவதற்கு ஆந்திர மாநிலம் முனைப்பாக உள்ளது. வேலை வீட்டில் இருந்து செய்தால், ஹைப்ரிட் மாதிரிகள் போன்றவை பெண் தொழிலாளர்களின் பங்களிப்பை பெரிதும் அதிகரிக்கும். மேலும்,  பெண்கள் தங்கள் சொந்த ஊர்களில் இருந்தே பணி செய்யும் வகையில்,  ஒவ்வொரு மாநகரம், நகரம், மண்டலத்தில் கோ ஒர்கிங் ஸ்பேஸ் எனப்படும் பகிர்ந்து பயன்படுத்தும் வகையில் ஐடி அலுவலகங்கள் அமைக்கவும், கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், ஐ.டி. நிறுவனங்களுக்கு ஊக்குவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்