சென்னை: கூட்டணியில் இருப்பதற்காக நான் அடிமையாக முடியாது.. இது துப்பாக்கி பிடிச்ச கை.. நல்ல போலீஸ்காரனைப் பார்த்தா திருடனுக்கு தேள் கொட்டிய மாதிரிதான் இருக்கும்.. 6 மணிக்கு மேல சிவி சண்முகம் எப்படி பேசுவார்னு எனக்குத் தெரியும்.. பாஜக தலைவர் அண்ணாமலை அடுத்தடுத்து வீசிய அம்புகள் இவை!
அதிமுக - பாஜக கூட்டணி இயல்பானது என்று பலரும் சொல்வார்கள். காரணம், இருவருக்கும் இடையே இருக்கும் சில பொதுவான காரணங்கள். ஆனால் அந்த கூட்டணி தற்போது மனப்பூர்வமாக இருக்கிறதா என்றால் அது சந்தேகம்தான்.

அதிமுக தலைமைக்கும், தமிழ்நாடு பாஜக தலைமைக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. நீரு பூத்த நெருப்பாக இது தகித்துக் கொண்டிருக்கிறது. வாய்ப்பு கிடைக்கும்போது ஒருவரை ஒருவர் காலை வாரி விடவே தயாராக இருக்கிறார்கள். இருவரும் மனம் ஒத்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் 1 சதவீதம் கூட இல்லை.. இதுவே நிதர்சனம்.
இதைத்தான் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக தலைமையை கையில் எடுத்த பிறகு, அண்ணாமலை தலைவரான பிறகு அனைவரும் பார்த்து வருகிறார்கள். எடப்பாடி பழனிச்சாமிக்கும், அண்ணாமலைக்கும் இடையே ஆரம்பத்தில் பெரிதாக பிரச்சினை ஏதும் இல்லை. ஆனால் ஓ. பன்னீர் செல்வத்தைத் தாண்டி ஒற்றைத் தலைமையாக வர எடப்பாடி பழனிச்சாமி முயற்சித்தபோது அவருக்கு ஆதரவாக அண்ணாமலை நிற்கவில்லை என்று கூறப்படுகிறது. அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று அண்ணாமலை விரும்பினார். இதுதான் அவருக்கும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே உரசல் ஏற்பட முக்கியக் காரணம் என்று சொல்கிறார்கள்.

அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!
ஆளே இல்லாத கடையில டீ ஆத்துவது போல...தமிழக அரசை விமர்சித்த திமுக தலைவர் ஸ்டாலின்
தேர்தலில் தோற்றது ஏன்? திமுக கள ஆய்வு ரிப்போர்ட் தந்த அதிர்ச்சி தகவல்
பைக் டாக்ஸி: தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? உயர்நீதிமன்ற கிளை கேள்வி!
கலைச்செல்வியின் திருக்குறள் கவிதைகள்!
Tamil Short story: ஆறுதல்!
Evergreen Bharathiraja: பதினாறுவயதினிலே .. மறக்க முடியாத பாரதிராஜா!
சுக்கிர வார பிரதோஷம்.. சிவனை வழிபடுவதே வாழ்வின் பயன்!
பூத்தூவும் வானம்!
{{comments.comment}}