சென்னை: கூட்டணியில் இருப்பதற்காக நான் அடிமையாக முடியாது.. இது துப்பாக்கி பிடிச்ச கை.. நல்ல போலீஸ்காரனைப் பார்த்தா திருடனுக்கு தேள் கொட்டிய மாதிரிதான் இருக்கும்.. 6 மணிக்கு மேல சிவி சண்முகம் எப்படி பேசுவார்னு எனக்குத் தெரியும்.. பாஜக தலைவர் அண்ணாமலை அடுத்தடுத்து வீசிய அம்புகள் இவை!
அதிமுக - பாஜக கூட்டணி இயல்பானது என்று பலரும் சொல்வார்கள். காரணம், இருவருக்கும் இடையே இருக்கும் சில பொதுவான காரணங்கள். ஆனால் அந்த கூட்டணி தற்போது மனப்பூர்வமாக இருக்கிறதா என்றால் அது சந்தேகம்தான்.

அதிமுக தலைமைக்கும், தமிழ்நாடு பாஜக தலைமைக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. நீரு பூத்த நெருப்பாக இது தகித்துக் கொண்டிருக்கிறது. வாய்ப்பு கிடைக்கும்போது ஒருவரை ஒருவர் காலை வாரி விடவே தயாராக இருக்கிறார்கள். இருவரும் மனம் ஒத்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் 1 சதவீதம் கூட இல்லை.. இதுவே நிதர்சனம்.
இதைத்தான் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக தலைமையை கையில் எடுத்த பிறகு, அண்ணாமலை தலைவரான பிறகு அனைவரும் பார்த்து வருகிறார்கள். எடப்பாடி பழனிச்சாமிக்கும், அண்ணாமலைக்கும் இடையே ஆரம்பத்தில் பெரிதாக பிரச்சினை ஏதும் இல்லை. ஆனால் ஓ. பன்னீர் செல்வத்தைத் தாண்டி ஒற்றைத் தலைமையாக வர எடப்பாடி பழனிச்சாமி முயற்சித்தபோது அவருக்கு ஆதரவாக அண்ணாமலை நிற்கவில்லை என்று கூறப்படுகிறது. அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று அண்ணாமலை விரும்பினார். இதுதான் அவருக்கும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே உரசல் ஏற்பட முக்கியக் காரணம் என்று சொல்கிறார்கள்.

துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினரின் பெரிய வேன் முன் செல்ல.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 3)
விஜய்யின் திடீர் திருச்செந்தூர் விசிட்...யாருப்பா அந்த ஜோசியர்?
meenakshi thirukalyanam 2026 மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் 2026 கோலாகலம்
தமிழகச் சட்டசபை தேர்தல் 2026: மே 4 வாக்கு எண்ணிக்கை - வழிமுறைகளை வெளியிட்ட தேர்தல் கமிஷன்
புதுச்சேரியில் இருந்து இனி 90 மி.லி., மது கொண்டு வந்தாலும் கைது
தமிழகத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயில்: சுகாதாரத்துறை சிறப்பு ஏற்பாடு
புதுச்சேரி பாடத்திட்டத்தில் பிரெஞ்சு மொழி நீக்கம்: திமுக சார்பில் போராட்டம் அறிவிப்பு
இதயம் என்னும் கவிதை...!
குடவோலை முறை.. உலகத்துக்கே வழிகாட்டிய உத்திரமேரூர் தேர்தல் நடைமுறை!
{{comments.comment}}