2024 ஜூன் 4 க்கு பிறகு.. அதிமுக.. தினகரன் கையில் வரும்.. அண்ணாமலை பரபரப்பு பேச்சு!

Apr 13, 2024,05:11 PM IST

தேனி: தேனியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து பேசும்போது, 2024 ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு அதிமுக டிடிவி தினகரன் கையில் வரும் என பாஜக மாநில தலைவர் 

அண்ணாமலை பரபரப்பான பேசியுள்ளார்.


லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் இன்று தேனி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து தீவிர பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிப்பில் இறங்கினார். அப்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது:




அதிமுக உடனான கூட்டணியில் இருந்து விலகி டிடிவி தினகரன் கூட்டணியில் இணைந்துள்ளோம் .

தமிழ்நாட்டில் 2019 இல் திமுகவும், அதிமுகவும் சிட்டிங் போட்டாங்க. அதனாலதான் அவர்களுக்கு எந்த இடத்திலும் வெற்றி பெற வாய்ப்பே இல்லை. 2024 இல் நமக்குத் தெரியும். அண்ணன் டிடிவி தினகரன் அதிமுக கூட்டணியில் இருந்திருந்தால் அண்ணன் ஸ்டாலின் இன்று முதல்வராக இருந்திருக்க முடியாது. அப்படி இருந்தாலும் கூட மக்கள் செல்வாக்கு டிடிவி தினகரன் அவர்களுக்கே இருப்பதால் அதிமுகலிருந்து வெளியேற்றப்பட்டார். அதனால்தான் உறுதியாக நான் திரும்பத் திரும்ப சொல்கிறேன். 2024 ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு அதிமுக உண்மையான தலைவன் டிடிவி தினகரன் கையில் வரும். இதெல்லாம் நடக்க வேண்டும் என்றால் நாடாளுமன்ற தேனி தொகுதியில் டிடிவி தினகரன் வெற்றி பெற வேண்டும். அதற்கு நீங்க உணர்வுப்பூர்வமாக இருக்க வேண்டும். 


அடுத்த ஆறு நாட்களில்  எல்லாத்தையும் பார்த்து குக்கர் சின்னத்துக்கு ஓட்டு போடணும். தமிழ்நாட்டில் பாத்தீங்கன்னா தமிழ்நாடு முழுவதும் பிரஷர் ல இருக்கு. ஊழல் பிரஷர், குடும்ப ஆட்சி பிரஷர், தமிழ்நாடு உரிமைகளை விட்டுக் கொடுத்த பிரஷர், அண்ணனுடைய இந்த குக்கர் தான் இந்த பிரஷரையும் எல்லாம் வெளியேற்ற போகுது என பரபரப்பாக பேசினார் அண்ணாமலை.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்