அரங்கன் யாவுமே அறிந்தவனே!

Dec 12, 2025,12:21 PM IST

- கோ. அறிவுசெல்வி இராஜாராம்


பரத்வஹரி 

பவ்யஹரி 

பவித்ரஹரி.

பவனஹரி 

பகவான்ஹரி 

பலதேவஹரி 

பக்தர்களை 

பரவசவமாக்கும்ஹரி 

பக்ஷ்னஹரி 

பக்கம் வந்து அருளும்ஹரி




வயல்வெளி 

வாழ்வே வளம்தானே

பரமபதமுமே

தோற்றுபோகுமே

தென்றலென மேனியிலே தொடும்போது

ஊடவே வரப்புநீரே

கலந்துவந்து

பாதமதிலே தோகையென புல்வெளியிலே 

புளங்காங்கிதமே அடைந்திடுவோமே!


அரங்கன் யாவுமே அறிந்தவனே!

அவன் அவயங்களில்  மயங்குதே

அணிகளின் ஆபரண அழகிலே

அடடா பட்டெனப் பகிர்ந்திடுவேன்

அரங்கன் கண்டு நகைத்திடுவான்

அம்பாரி களிறுடன் ரசித்திடுவேன்

அந்தியில் கருடன் வியந்திடுவேன்

அக்கார வடிசலைக் சுவைத்திடவே

அரங்கன் அள்ளிக் வழங்குவான்..


அருகதையே அற்றயென்னை 

ஆதரித்து அருளிவிட்டான்

அலைபாயும் மனதினிலே 

ஆலயமும் அமைத்துவிட்டான்

அவனுடைய கருணையினால் 

அற்புதங்கள் செய்துவிட்டான்

அவனியிலே எந்தனுக்கும்

நல்லிடத்தைத் தந்துவிட்டான்

அனுதினமும் உன் நினைவையே 

ஊன்றிவிடு அகமதிலே!


(கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் கோ. அறிவுசெல்வி இராஜாராம். கவிதைகள் எழுவதில் ஆர்வம் கொண்டவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருபவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகச் சட்டசபை தேர்தல் 2026: மே 4 வாக்கு எண்ணிக்கை - வழிமுறைகளை வெளியிட்ட தேர்தல் கமிஷன்

news

புதுச்சேரியில் இருந்து இனி 90 மி.லி., மது கொண்டு வந்தாலும் கைது

news

தமிழகத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயில்: சுகாதாரத்துறை சிறப்பு ஏற்பாடு

news

புதுச்சேரி பாடத்திட்டத்தில் பிரெஞ்சு மொழி நீக்கம்: திமுக சார்பில் போராட்டம் அறிவிப்பு

news

இதயம் என்னும் கவிதை...!

news

குடவோலை முறை.. உலகத்துக்கே வழிகாட்டிய உத்திரமேரூர் தேர்தல் நடைமுறை!

news

Sri Priya Story: தன்னம்பிக்கை கதை.. உடைந்த சிறகும் உயரப் பறந்த பறவையும்

news

இன்றைய உலகுக்கேற்ற.. நவீன ஆத்திச்சூடி!

news

பராமரிப்பு பணி...21 நாட்களுக்கு சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம்

அதிகம் பார்க்கும் செய்திகள்