- கோ. அறிவுசெல்வி இராஜாராம்
பரத்வஹரி
பவ்யஹரி
பவித்ரஹரி.
பவனஹரி
பகவான்ஹரி
பலதேவஹரி
பக்தர்களை
பரவசவமாக்கும்ஹரி
பக்ஷ்னஹரி
பக்கம் வந்து அருளும்ஹரி

வயல்வெளி
வாழ்வே வளம்தானே
பரமபதமுமே
தோற்றுபோகுமே
தென்றலென மேனியிலே தொடும்போது
ஊடவே வரப்புநீரே
கலந்துவந்து
பாதமதிலே தோகையென புல்வெளியிலே
புளங்காங்கிதமே அடைந்திடுவோமே!
அரங்கன் யாவுமே அறிந்தவனே!
அவன் அவயங்களில் மயங்குதே
அணிகளின் ஆபரண அழகிலே
அடடா பட்டெனப் பகிர்ந்திடுவேன்
அரங்கன் கண்டு நகைத்திடுவான்
அம்பாரி களிறுடன் ரசித்திடுவேன்
அந்தியில் கருடன் வியந்திடுவேன்
அக்கார வடிசலைக் சுவைத்திடவே
அரங்கன் அள்ளிக் வழங்குவான்..
அருகதையே அற்றயென்னை
ஆதரித்து அருளிவிட்டான்
அலைபாயும் மனதினிலே
ஆலயமும் அமைத்துவிட்டான்
அவனியிலே எந்தனுக்கும்
நல்லிடத்தைத் தந்துவிட்டான்
அனுதினமும் உன் நினைவையே
ஊன்றிவிடு அகமதிலே!
(கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் கோ. அறிவுசெல்வி இராஜாராம். கவிதைகள் எழுவதில் ஆர்வம் கொண்டவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருபவர்)
Summer to peak in Tamil Nadu: வெப்பம் அதிகரிக்கும் அபாயம்.. டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு
1971 சாதனையை முறியடிக்க இலக்கு: கூட்டணி கட்சிகளுக்கு 'செக்' வைக்கும் திமுக
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கண்டனத் தீர்மானம்
அரசியல் அலசல்.. அதிமுகவில் காளியம்மாள்.. நல்ல பேச்சாளரை நழுவ விட்ட திமுக, தவெக!
சித்ரா பௌர்ணமி நாளில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் இந்திரன்.. அன்னை தடாதகை - 3
தைப்பொங்கல்.. காலங்கள் கடந்தும் கரையாத நினைவலைகள்!
பேச்சை விட நேர்மையான உணர்வுகளுக்கே முக்கியத்துவம்!
என் உடலைப் பேணத் தொடங்கியபோது.. I started taking care of my body when...
பழுக்கக் காய்ச்சிய இரும்பை சுத்தியால் அடித்தால்.. The hammer hits the heated steel!
{{comments.comment}}