அரங்கன் யாவுமே அறிந்தவனே!

Dec 12, 2025,12:21 PM IST

- கோ. அறிவுசெல்வி இராஜாராம்


பரத்வஹரி 

பவ்யஹரி 

பவித்ரஹரி.

பவனஹரி 

பகவான்ஹரி 

பலதேவஹரி 

பக்தர்களை 

பரவசவமாக்கும்ஹரி 

பக்ஷ்னஹரி 

பக்கம் வந்து அருளும்ஹரி




வயல்வெளி 

வாழ்வே வளம்தானே

பரமபதமுமே

தோற்றுபோகுமே

தென்றலென மேனியிலே தொடும்போது

ஊடவே வரப்புநீரே

கலந்துவந்து

பாதமதிலே தோகையென புல்வெளியிலே 

புளங்காங்கிதமே அடைந்திடுவோமே!


அரங்கன் யாவுமே அறிந்தவனே!

அவன் அவயங்களில்  மயங்குதே

அணிகளின் ஆபரண அழகிலே

அடடா பட்டெனப் பகிர்ந்திடுவேன்

அரங்கன் கண்டு நகைத்திடுவான்

அம்பாரி களிறுடன் ரசித்திடுவேன்

அந்தியில் கருடன் வியந்திடுவேன்

அக்கார வடிசலைக் சுவைத்திடவே

அரங்கன் அள்ளிக் வழங்குவான்..


அருகதையே அற்றயென்னை 

ஆதரித்து அருளிவிட்டான்

அலைபாயும் மனதினிலே 

ஆலயமும் அமைத்துவிட்டான்

அவனுடைய கருணையினால் 

அற்புதங்கள் செய்துவிட்டான்

அவனியிலே எந்தனுக்கும்

நல்லிடத்தைத் தந்துவிட்டான்

அனுதினமும் உன் நினைவையே 

ஊன்றிவிடு அகமதிலே!


(கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் கோ. அறிவுசெல்வி இராஜாராம். கவிதைகள் எழுவதில் ஆர்வம் கொண்டவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருபவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Poem: இளமையில் வறுமை!

news

அரசியலுக்கு வருகிறேன்.. ராகவா லாரன்ஸ் அறிவிப்பு.. தவெகவா.. அண்ணாமலையா?

news

விடைபெற்றார் பாரதிராஜா.. முதல் மரியாதை நாயகனுக்கு ஆயிரக்கணக்கானோர் இறுதி மரியாதை!

news

அல்லி நகரின் அகல் விளக்கே.. வெள்ளித் திரையின்.. மங்காத ஒளியே!

news

கரூரில் கூட்ட நெரிசல் வழக்கு:மீண்டும் விறுவிறுப்பான சி பி ஐ விசாரணை

news

தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுகிறாரா? டெல்லியில் தீவிர ஆலோசனை

news

எம்ஜிஆர்., வழியில்...நாளை கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் முதல்வர் விஜய்

news

என்னது...முதல்வர் தொகுதியிலேயே குடிநீர் விநியோகம் ரத்தா?

news

நமது துன்பத்திற்கு நாமே காரணமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்