- ச.சித்ரா தேவி
சென்னை: தினசரி வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். அந்த அளவுக்கு நம்மை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வாழைப்பழம் உதவுகிறது. அவ்வளவு நல்ல விஷயங்கள் அதில் உள்ளன.
நாம் தினமும் பயன் படுத்தும் வாழைப்பழத்தின் வகைகளும் அதன் பயன்களும் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். எல்லா வாழைப்பழத்திலும் சத்து ஒன்றுதான். ஆனால் ஒவ்வொன்றும் ஒரு விதமான பலன் தரக் கூடியதாக உள்ளது. இதை எல்லோரும் அறிந்து கொண்டு பிறகு சாப்பிடுவது அவசியம்.
வாழைப்பழத்தை உணவுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது. வாழைப் பழம் குடலுக்கு நன்மை தரும். மூளையில் உள்ள திசுக்களின் செயல் திறனுக்கு ஊக்கம் அளிக்கிறது. செரடோனின் என்ற ரசாயன பொருள் சீராக சுரக்க உதவுகிறது.

விதம் விதமான வாழைப்பழங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு விதமானது.
ரஸ்தாளி பழம் நாவிற்கு சுவை தரும். நேந்திரம் பழம் தோலுக்கு மினுமினுப்பு பெற உதவும். செவ்வாழைப்பழம் உயிரணுக்களைப் பெருக்கும். பச்சை வாழைப்பழம் உடலுக்கு குளிர்ச்சி தரும். பேயன் பழம் குடலில் உள்ள நஞ்சை முறிக்கும்.
வாழைப் பழம் சாப்பிட்ட பிறகு மோர் குடிக்க கூடாது. நன்கு கனிந்த பூவன் வாழைப் பழத்தை சீரகத்துடன் சேர்த்து பிசைந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம் நீங்கும். நீரிழிவிற்கு பேயன்பழத்தொடு சீரகத்துடன் வெந்தயம் நெய் சேர்த்து சாப்பிட நீரிழிவு நீங்கும்.
இனிமேல் வாழைப்பழம் சாப்பிடும்போது இதையெல்லாம் நினைச்சுட்டே சாப்பிடுங்க.
(ச.சித்ரா தேவி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு
வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?
Banana.. வாழைப் பழத்தை எப்படி.. எப்போது.. எவ்வளவு சாப்பிடணும் தெரியுமா?
தென்னையை வச்சா இளநீரு பிள்ளையை பெத்தா கண்ணீரு.. ஏன் அப்படி சொன்னாங்க தெரியுமா?
Monday Motivation.. வைராக்கியம் வாழவைக்கும்.. பொறாமை புரளி பேசவைக்கும்.. கோபம் உண்மையை உரைக்கும்!
எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?
பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது போல.. பழமொழியும் உண்மை பொருளும்!
சுவையான சூப்பரான கொத்தமல்லி தொக்கு ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் பண்ணுங்க!
{{comments.comment}}