பெங்களூரு சம்பவம்: கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் கூண்டோடு சஸ்பெண்ட்.. வழக்கு சிஐடி.,க்கு மாற்றம்

Jun 05, 2025,10:03 PM IST

பெங்களுரு : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரிக்க ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.  மேலும் ஒரு முக்கிய நடவடிக்கையாக மாநகர காவல் ஆணையர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.


இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு துணை நிற்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஐபிஎல் வெற்றி கொண்டாட்ட ஊர்வலம் ஜூன் 04ம் தேதியன்று நடைபெற்ற போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி மைக்கேல் குன்ஹா தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆர்சிபி பிரதிநிதிகள், டிஎன்ஏ நிகழ்வு மேலாண்மை நிறுவனத்தின் மேலாளர்கள் மற்றும் கர்நாடக கிரிக்கெட் வாரியத்தினர் கைது செய்யப்பட வேண்டும் என்று முதல்வர் கூறினார்.




காவல்துறை அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததே இந்த துயரத்திற்கு காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால் கப்பன் பூங்கா காவல் நிலைய ஆய்வாளர், நிலைய வீட்டு அதிகாரி, அதிகார வரம்பு ஏசிபி, மத்திய டிசிபி, சின்னசாமி கிரிக்கெட் மைதான பொறுப்பாளர் ஏசிபி மற்றும் பெங்களூரு நகர காவல் ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக சித்தராமையா அறிவித்தார்.


"அவர்களின் அலட்சியமும், அக்கறையின்மையுமே இந்த துயரத்திற்கு காரணம் என்பது prima facie ஆகத் தெரிவதால், அவர்களைக் கைது செய்யுமாறு கேட்டிருக்கிறோம்" என்று முதல்வர் சித்தராமையா கூறினார். இந்த வழக்கு மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு (சிஐடி) மாற்றப்பட்டுள்ளது. நீதிமன்ற ஆணையம் 30 நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்க காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. "நடக்கக்கூடாத ஒரு சம்பவம் நடந்துவிட்டது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு துணை நிற்கும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம். மூத்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் இணைந்து ஆதாரங்களைச் சேகரித்த பிறகு இந்த கடுமையான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன" என்று முதல்வர் சித்தராமையா செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.


சம்பவத்தின் தீவிரத்தை உணர்ந்து அரசு விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்கும்.  இந்த துயர சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அரசு இந்த விவகாரத்தை தீவிரமாக கையாண்டு வருகிறது. நீதிமன்ற விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும். சம்பவம் குறித்து முழுமையான அறிக்கை கிடைத்தவுடன், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்