பெங்களூரு சம்பவம்: கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் கூண்டோடு சஸ்பெண்ட்.. வழக்கு சிஐடி.,க்கு மாற்றம்

Jun 05, 2025,10:03 PM IST

பெங்களுரு : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரிக்க ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.  மேலும் ஒரு முக்கிய நடவடிக்கையாக மாநகர காவல் ஆணையர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.


இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு துணை நிற்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஐபிஎல் வெற்றி கொண்டாட்ட ஊர்வலம் ஜூன் 04ம் தேதியன்று நடைபெற்ற போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி மைக்கேல் குன்ஹா தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆர்சிபி பிரதிநிதிகள், டிஎன்ஏ நிகழ்வு மேலாண்மை நிறுவனத்தின் மேலாளர்கள் மற்றும் கர்நாடக கிரிக்கெட் வாரியத்தினர் கைது செய்யப்பட வேண்டும் என்று முதல்வர் கூறினார்.




காவல்துறை அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததே இந்த துயரத்திற்கு காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால் கப்பன் பூங்கா காவல் நிலைய ஆய்வாளர், நிலைய வீட்டு அதிகாரி, அதிகார வரம்பு ஏசிபி, மத்திய டிசிபி, சின்னசாமி கிரிக்கெட் மைதான பொறுப்பாளர் ஏசிபி மற்றும் பெங்களூரு நகர காவல் ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக சித்தராமையா அறிவித்தார்.


"அவர்களின் அலட்சியமும், அக்கறையின்மையுமே இந்த துயரத்திற்கு காரணம் என்பது prima facie ஆகத் தெரிவதால், அவர்களைக் கைது செய்யுமாறு கேட்டிருக்கிறோம்" என்று முதல்வர் சித்தராமையா கூறினார். இந்த வழக்கு மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு (சிஐடி) மாற்றப்பட்டுள்ளது. நீதிமன்ற ஆணையம் 30 நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்க காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. "நடக்கக்கூடாத ஒரு சம்பவம் நடந்துவிட்டது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு துணை நிற்கும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம். மூத்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் இணைந்து ஆதாரங்களைச் சேகரித்த பிறகு இந்த கடுமையான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன" என்று முதல்வர் சித்தராமையா செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.


சம்பவத்தின் தீவிரத்தை உணர்ந்து அரசு விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்கும்.  இந்த துயர சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அரசு இந்த விவகாரத்தை தீவிரமாக கையாண்டு வருகிறது. நீதிமன்ற விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும். சம்பவம் குறித்து முழுமையான அறிக்கை கிடைத்தவுடன், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தை உலுக்கிய.. தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கில்.. தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை

news

விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி: தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் அதிரடி அறிவிப்பு!

news

புதிய படங்களை 7 நாட்களுக்கு 5 காட்சிகள் திரையிடலாம்.. தியேட்டர்களுக்கு விஜய் ஹேப்பி நியூஸ்!

news

TVK: குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்.. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

news

அதிமுக எம்.எல்.ஏ-க்கள் 3 பேர் திடீர் ராஜினாமா - தவெக.வில் இணைந்ததால் பரபரப்பு!

news

காலியான 4 எம்எல்ஏ தொகுதிகள், ஒரு ராஜ்யசபா எம்.பி. பதவி.. தவெக.,விற்கு அடிக்கிறதா ஜாக்பாட்?

news

ADMK metldown: வேகமாக கரையும் அதிமுக.. மொத்தம் 47 - இபிஎஸ் 27; வேலுமணி 17; ராஜினாமா 3!

news

ஓங்குகிறதா எடப்பாடி பழனிசாமியின் கை? .. அடுத்தடுத்து வீட்டிற்கு படையெடுக்கும் எம்.எல்.ஏ-க்கள்

news

சிஎம் விஜய் ஸ்டேட்டா.. வட மாநிலங்களிலும் வேகமாக பரவியிருக்கும் தமிழ்நாட்டு அரசியல்..!

அதிகம் பார்க்கும் செய்திகள்