சென்னை : தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையின் துவக்க நாளாக கொண்டாடப்படுவது போகிப் பண்டிகையாகும். தை மாத பிறப்பு அல்லது மகர சங்கராந்தி தினம் ஆண்டுதோறும் ஜனவரி 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்கு முந்தைய தினம் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
போகி என்றாலே வீட்டில் உள்ள வேண்டாத பழைய பொருட்களை தீயிட்டு எரிக்க வேண்டும் என்பது தான் காலம் காலமாக சொல்லப்பட்டு வருவது.
பழையன கழிதலும், புதியன புகுதலுமே போகிப் பண்டிகையாகும். வீட்டை சுத்தம் செய்து, புதுமைகளையும், பொங்கல் பண்டிகையையும் கொண்டாட தயாராகும் நாள் போகிப் பண்டிகையாகும். இந்த நாளில் பொது இடத்தில் தீ வைத்து எரித்து அல்லது பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தி, அதனைச் சுற்றி, நடனமாடி ஆடிப்பாடி மக்கள் மகிழ்வதுண்டு. பொங்கல் என்பது அறுவடை திருநாள் என்பதால், விவசாயத்திற்கு ஆதாரமான மழைக்கு நன்றி செலுத்துவதற்காக கொண்டாடப்படும் நாளே போகிப் பண்டிகை என சொல்லப்படுகிறது.
மழையின் தெய்வமாகிய இந்திரனுக்கு நன்றி செலுத்தி வணங்குவதன் மூலம் அவர் மனம் மகிழ்ந்து, ஆண்டு முழுவதும் நல்ல மழையை பெய்ய செய்து, மண்ணை செழிக்க வைப்பார். அதனால் இன்பமம், செல்வ வளமும் பெருகும் என்பது நம்பிக்கை.
இதே போல் பஞ்ச பூதங்களில் ஒன்றான நெருப்பினை வழிபட்டு, நன்றி செலுத்துவதற்காக தான் போகி அன்றும் நெருப்பு வைத்து எரிக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. நெருப்பு என்பது அக்னி தேவனை குறிப்பதாகும். இவர் ஒளி, ஆற்றல் மற்றும் தூய்மையின் அடையாளமாக கருதப்படுபவர்.
அதனால் நெருப்பு வைத்து அக்னி தேவனை வழிபடுவதால் எதிர்மறை விஷயங்கள் அனைத்தும் நீங்கி, நேர்மறை ஆற்றல்கள் நம்முடைய வாழ்வில் நிறையும் என்பது நம்பிக்கை.
இந்துக்கள் மட்டுமின்றி, சீக்கியர்களும் போகி பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவது உண்டு. பொங்கல் நாள் முதல் குளிரின் தாக்கம் குறைந்து, சற்று வெப்பமான சீதோஷன நிலை நிலவத் துவங்கும். இதனால் கோடை காலம் அல்லது வசந்த காலத்தை வரவேற்கும் நிகழ்வாகவும் நெருப்பு வைத்து, ஆடிப்பாடி அக்னியை வழிபட்டு, போகிப் பண்டிகையை கொண்டாடுவதாகவும் சொல்லப்படுகிறது. இது இயற்கை அன்னையை வழிபடுவதற்கான நாளாகவும் கருதப்படுகிறது.
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}