சென்னை : விளவங்கோடு சட்டசபை இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளராக நந்தினி என்பவரின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் போட்டியிட, சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகி, பாஜக.,வில் இணைந்த விஜயதாரணிக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு சீட் அளிக்காமல் பாஜக மறுத்துள்ளது.
தமிழ்நாட்டில் 39 லோக்சபா தொகுதிகளுக்கு பொதுத்தேர்தல் நடைபெறும் அதே வேளையில் அதே ஏப்ரல் 19ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. விளவங்கோடு சட்டசபை தொகுதி உறுப்பினராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜயதாரணி இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் சமீபத்தில் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சியிலிருந்து விலகி பாஜகவில் வந்து இணைந்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விஜயதாரணிக்கு கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்படும் என்று பெரும் எதிர்பார்ப்பு நிலைமை இருந்து வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் வெளியான பாஜக வேட்பாளர் பட்டியலில் கன்னியாகுமரி தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் விஜயதாரணி ஏமாற்றம் அடைந்தார். சரி, விளவங்கோடு சட்டசபை இடைத் தேர்தலில் விஜயதாரணிக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் இன்று அறிவிக்கப்பட்ட விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் விஜயதாரணியின் பெயர் இடம் பெறவில்லை. அவருக்கு பதில் நந்தினி என்பவரின் பெயர் இடம் பெற்றுள்ளது.
இதனால் லோக்சபா தொகுதியும் கிடைக்காமல், சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பும் கிடைக்காமல் விஜயதாரணி ஓரம் கட்டப்பட்டுள்ளார். அவர் ஏன் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்? ஏன் பாஜகவில் வந்து இணைந்தார்? என்பதற்கே இதுவரை விடை தெரியாமல் இருந்து வருகிறது. இப்பொழுது லோக்சபா தேர்தலிலும் அவருக்கு சீட் கொடுக்கப்படவில்லை, சட்டசபை இடைத்தேர்தலும் சீட் கொடுக்கப்படவில்லை என்பதால் அவரது தரப்பு கடும் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்துள்ளது.
விஜயதாரணியின் கட்சி தாவலுக்கான நோக்கம் என்ன என்பதும் பெரும் கேள்விக்குறியாகி உள்ளது . விஜயதாரணி இனி என்ன முடிவு எடுப்பார் என்பது தெரியவில்லை. பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
வினாத்தாள் கசிவுக்கு 10 ஆண்டு சிறை ரூ.10 கோடி அபராதம்: தேர்வு சீர்திருத்த மசோதா நிறைவேற்றம்
2031ல் தமிழகத்தில் பாமக ஆட்சி : பாமக பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேச்சு
முட்டாள்கள்...ராகுல் காந்தியின் பேச்சால் கொந்தளித்த பாஜக எம்.பி.,க்கள்
சிந்தனைச் சிதறல்.. பொறுங்கள் பார்க்கலாம் என்ற வார்த்தை.. ஆகச்சிறந்த ஆறுதல்!
இன்னுயிர் நீ என் அருகில் வா!
கோடு தாண்டாத தூரம்!
செலவு போல தீர்ந்து போகும் வாழ்க்கையும் தான்!
பெண் என்பவள்
Short Story: நீக்கறதா.. வேண்டாமா?
{{comments.comment}}