மணிப்பூர்: மணிப்பூர் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று இரவு திடீரென குண்டு வெடித்துள்ளது.இதில் ஒருவர் உயிரிழந்து உள்ளார். இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
மணிப்பூர் மாநிலத்தின் தலைநகர் இம்பால் மேற்கு, டாங்மிபந்தில் டி.எம் கல்லூரி உள்ளது. இந்தப் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு திடீரென குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்து உள்ளார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார். இதனை அறிந்த காவல்துறையினர் சம்பவம் இடத்திற்கு விரைந்து உயிரிழந்தவரை மீட்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுமதித்தனர். இதில் உயிரிழந்தவர் 24 வயதான ஓனம் கெனேஜி என காவல்துறையினர் தகவல் கொடுத்துள்ளனர். பல்கலைக்கழக வளாகத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.மேலும் குண்டுவெடிப்பு குறித்த காரணங்கள் எதுவும் இதுவரை வெளியிடவில்லை.

மணிப்பூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற வன்முறை சம்பவங்கள், பதற்ற நிலைக்கு பிறகு கடந்த சில மாதங்களாக தான் இயல்பு நிலை திரும்பி வருகிறது. இருந்தாலும் அவ்வப்போது ஆங்காங்கே வன்முறை, பதற்றம் என நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதற்கிடையில் அரசியல் கட்சிகளின் போராட்டம் போராட்டம் போன்றவற்றாலும் அந்த மாநிலத்தின் அமைதி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பல்கலைக்கழக வளாகத்திலேயே வெடிகுண்டு விபத்து நடத்தப்பட்டுள்ளது அங்கு பதற்றத்தை அதிகரிக்க செய்துள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அலர்ட்!
பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!
வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆவேசம்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி!
திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள்: அன்புமணி ராமதாஸ் வேதனை!
ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!
Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!
சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!
Amma's Pride ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சென்னையில் உருவான குறும்படம்!
{{comments.comment}}