மணிப்பூரில் பதற்றம்.. பல்கலைக்கழக வளாகத்தில் குண்டு வெடிப்பு.. ஒருவர் பலி!

Feb 24, 2024,11:27 AM IST

மணிப்பூர்: மணிப்பூர் பல்கலைக்கழக வளாகத்தில்  நேற்று இரவு திடீரென குண்டு வெடித்துள்ளது.இதில் ஒருவர் உயிரிழந்து உள்ளார். இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.


மணிப்பூர் மாநிலத்தின் தலைநகர் இம்பால் மேற்கு, டாங்மிபந்தில் டி.எம் கல்லூரி உள்ளது. இந்தப் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு திடீரென குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்து உள்ளார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார். இதனை அறிந்த காவல்துறையினர் சம்பவம் இடத்திற்கு விரைந்து உயிரிழந்தவரை மீட்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுமதித்தனர். இதில் உயிரிழந்தவர் 24 வயதான ஓனம் கெனேஜி என காவல்துறையினர் தகவல் கொடுத்துள்ளனர்.  பல்கலைக்கழக வளாகத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.மேலும் குண்டுவெடிப்பு குறித்த காரணங்கள் எதுவும் இதுவரை வெளியிடவில்லை. 




மணிப்பூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற வன்முறை சம்பவங்கள், பதற்ற நிலைக்கு பிறகு கடந்த சில மாதங்களாக தான் இயல்பு நிலை திரும்பி வருகிறது. இருந்தாலும் அவ்வப்போது ஆங்காங்கே வன்முறை, பதற்றம் என நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதற்கிடையில் அரசியல் கட்சிகளின் போராட்டம் போராட்டம் போன்றவற்றாலும் அந்த மாநிலத்தின் அமைதி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பல்கலைக்கழக வளாகத்திலேயே வெடிகுண்டு விபத்து நடத்தப்பட்டுள்ளது அங்கு பதற்றத்தை அதிகரிக்க செய்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

இந்த வாழ்க்கை ஒரு கனவா?

news

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்

news

பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு

news

2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு

news

Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

news

மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை

news

காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்