தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு உலக புத்தக தினத்தினை முன்னிட்டு தேவகோட்டை சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் புத்தகங்களை வழங்கி மாணவர்களிடையே புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்தி பேசினார் .
புத்தகம் என்பது கடந்த கால தலை முறையினரையும், எதிர்கால சந்ததியினரையும் இணைக்கும் ஒரு பாலமாக திகழ்கிறது. ஏனெனில் வரலாற்று சிறப்புகள் குறித்த நிகழ்வுகளை அறிந்து கொள்ள புத்தகம் பேருக்கு உதவி புரிகிறது. அதே சமயத்தில் நாட்டின் நடப்பு நிகழ்ச்சிகளை தெரிந்து கொள்ளவும் மிகவும் பயனுள்ளதாக விளங்குகிறது.

இது மட்டுமல்லாமல் புத்தகத்தின் மூலம் பல்வேறு தகவல்களை பெற முடிகிறது. குறிப்பாக குழந்தைகளின் வாசிப்புத் திறன் மேம்படுகிறது. அந்தந்த மொழிகளின் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், போன்றவற்றை அறிந்து கொள்ள முடிகிறது.
மேலும் புத்தகம் வாசிப்பின் மூலம் மூளை சுறுசுறுப்படைந்து ஆற்றலை அதிகரிக்க செய்கிறது. இதனை கருத்தில் கொண்டு அனைவரிடமும் புத்தகம் வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக ஏப்ரல் 23ஆம் தேதி ஒவ்வொரு வருடமும் உலகப் புத்தக தினம் அனுசரிக்கப்படுகிறது.

அந்த வகையில் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில், மாணவர்களிடையே வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்தவும், உலகப் புத்தக தினம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், புத்தகம் வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
பள்ளி தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமையில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சாந்தி மாணவர்களிடையே புத்தகம் வாசிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து பேசினார்.

இது குறித்து மேலும் அவர் பேசுகையில், புத்தகம் வாசிப்பது நல்ல பழக்கம் ஆகும். மனிதனை மனிதனாக மாற்றுவது புத்தகம் மட்டுமே. மனிதன் புத்தகம் படித்தால் மட்டுமே சிறந்த மனிதனாக வளர முடியும். மாணவர்களுக்கு படிப்பு மட்டும் போதாது. வெளி உலக அனுபவமும் கண்டிப்பாக தெரிய வேண்டும். அதற்கு இந்தப் பள்ளியில் ஏராளமான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதை பாராட்டுகின்றேன். வாழ்த்துகள் என கூறினார்.
பின்னர் சிறப்பாக புத்தகம் வாசித்து கருத்துக்களை கூறிய அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது. நிகழ்வில் சார் ஆட்சியரின் அலுவலக தட்டச்சர் அன்பரசன் உட்பட ஏராளமான பெற்றோர்கள் பங்கேற்றனர். நிறைவாக ஆசிரியை முத்துமீனாள் நன்றி கூறினார்.
கனவு மெய்ப்பட வேண்டும்!
மீண்டும் இந்தியாவைச் சந்திக்குமா பாகிஸ்தான்.. செமி பைனலா அல்லது இறுதிப் போட்டியா?
"அர்ஜுன் சொன்னது பாதி உண்மைதான்".. (நீ மழை.. 3)
சென்னைஒன் செயலி தொழில்நுட்பக் கோளாறு சரியானது.. எம்டிசி நிறுவனம் அறிவிப்பு
61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா.. உலகக் கோப்பை போட்டிகளில் 16வது வெற்றி
பாகிஸ்தான் பந்து வீச்சை வச்சு செய்த இஷான் கிஷன் அவுட்.. ஆனாலும் இந்தியா ஸ்டிராங்!
நவி மும்பை தமிழ் சங்க பொன்விழா.. விஜய் டிவி ஸ்டார்களின் இசை மழையில் நனைந்த ரசிகர்கள்!
சிவமே சிவமே அருள்வாய் சிவமே....!
அனல் பறக்கப் போகும் இந்தியா vs பாகிஸ்தான் மோதல்.. கொழும்பு டி20 போட்டியில் மழை குறுக்கிடுமா?
{{comments.comment}}