- கவிஞர் சு நாகராஜன்
பழையன கழிதலும்
புதியன புகுதலும் போகி
பழையன எரிக்கலாமே
கோபம் என்ற அரக்கனை
எரித்து விடுங்கள்
பொறாமை என்ற பகைவனை
பொசுக்கி விடுங்கள்
வஞ்சனை என்ற கம்சனை
வதம் செய்து விடுங்கள்
தீமை செய்தல்
என்ற கொடூரனை
தீயில் போட்டு
தீயிக்கு இரையாக்குங்கள்
போட்டி பொறாமை
கோபம் வாக்குவாதம்

இன்னும் பிற செயல்களை
இன்றோடு புதைத்து விடுங்கள்
ஆம்
அன்பு என்னும்
அமிர்தத்தை எடுத்து
அனைவரிடமும்
பகிருங்கள்
ஒழுக்கம் என்னும்
ஓர் மந்திரத்தை
சொல்லி
பிறரையும்
சொல்ல வையுங்கள்
யாசகம் வேண்டி
நிற்பவரிடம்
பொருள் கொடுத்து
உதவுங்கள்
இந்நிலை
தொடர வேண்டாம் எனில்
அவர்களுக்காக
கடவுளிடம்
மன்றாடுங்கள்
சிலுவையில்
தொங்கிய இயேசுவும்
கள்வனுக்காக
மன்றாடினார்
இன்றைக்கு நீ
என்னுடன் கூடவே
பரலோகத்தில்
இருப்பாய் என்றார்
ஆம்
அன்பு
என்ற பூக்களை எடுத்து
ஒவ்வொர் மேலும்
மணக்க செய்திடுவோம்
(கவிஞர் சு நாகராஜன், கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார்)
தவெக எம்எல்ஏ.,விடம் குதிரை பேரம் நடத்திய வழக்கு விசாரணைக்கு சென்னை ஹைகோர்ட் தடை
கைது செய்யப்பட்ட உதயநிதியை விசாரணைக்குப் பின்.. இன்றே விடுவிக்க வேண்டும்.. ஹைகோர்ட்
உதயநிதி ஸ்டாலின் கைது... அதிமுக பொதுச் செயலாலர் எடப்பாடி பழனிச்சாமியின் கருத்து என்ன?
Dilani Sridharan Poem: கைம்பெண்ணின் க(வி)தையிது!
Santhi Sinnathambi Poem: மாற்றியதோ மாறியதோ!
உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குபதியப்பட்ட 9 சட்டப் பிரிவுகள் எவை? ஜாமீன் கிடைக்குமா?
உதயநிதி ஸ்டாலின் கைது.. தவெக கொண்டாட்டம்.. திமுக போராட்டம்.. தலைவர்கள் சொல்வது என்ன?
நான் அப்படி பேசவே இல்லை: கைது பற்றி உதயநிதி ஸ்டாலின் விளக்கம்
கரும்பாக இல்லறம் இனிக்க காவேரி தாய் வேகமாய் வருகிறாள்!
{{comments.comment}}