கோபம் என்ற அரக்கனை எரித்து.. பொறாமை என்ற பகைவனை.. பொசுக்குங்கள்!

Jan 14, 2026,01:35 PM IST

- கவிஞர் சு நாகராஜன்


பழையன கழிதலும்

புதியன புகுதலும் போகி

பழையன எரிக்கலாமே

கோபம் என்ற அரக்கனை

எரித்து விடுங்கள்

பொறாமை என்ற பகைவனை 

பொசுக்கி விடுங்கள்

வஞ்சனை என்ற கம்சனை 

வதம் செய்து விடுங்கள்

தீமை செய்தல் 

என்ற கொடூரனை

தீயில் போட்டு 

தீயிக்கு இரையாக்குங்கள்

போட்டி பொறாமை

கோபம் வாக்குவாதம் 




இன்னும் பிற செயல்களை

இன்றோடு புதைத்து விடுங்கள்

ஆம் 

அன்பு என்னும்

அமிர்தத்தை எடுத்து 

அனைவரிடமும் 

பகிருங்கள்

ஒழுக்கம் என்னும்

ஓர் மந்திரத்தை 

சொல்லி

பிறரையும்

சொல்ல வையுங்கள்


யாசகம் வேண்டி

நிற்பவரிடம் 

பொருள் கொடுத்து 

உதவுங்கள்

இந்நிலை 

தொடர வேண்டாம் எனில்

அவர்களுக்காக

கடவுளிடம் 

மன்றாடுங்கள்


சிலுவையில்

தொங்கிய இயேசுவும்

கள்வனுக்காக 

மன்றாடினார் 

இன்றைக்கு நீ

என்னுடன் கூடவே 

பரலோகத்தில்

இருப்பாய் என்றார்


ஆம் 

இப் போகித் திருநாளில்

அனைவரும்

இன்புற்று

அன்பு

என்ற பூக்களை எடுத்து

ஒவ்வொர் மேலும்

மணக்க செய்திடுவோம்


(கவிஞர் சு நாகராஜன், கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

படிப்புதான் ஒரு பெண்ணுக்கு உண்மையான அணிகலன் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!

news

பாஜக.,வில் அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு? - பின்னணியில் நடந்தது என்ன?

news

திமுக பணத்தை நம்பி உள்ளது, அங்கு உழைக்க ஆளில்லை; இளைஞர்கள் நினைத்தால் ஆட்சியையே மாற்றலாம்: அன்புமணி

news

பறவைக் காய்ச்சல் பரவல்... ஹாஃப்பாயில் சாப்பிடாதீங்க: எச்சரிகை விடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

news

தமிழகத்தில் பிப்., 13ம் தேதி லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என்றும் என் மனைவி சீதா தான்....நான் பிரிந்ததை நினைத்து என்னைக்கும் வருத்தப்பட்டதே இல்லை: பார்த்திபன்

news

சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு எதிராக 100 எம்.பி.,க்களிடம் கையெழுத்து பெற்ற காங்கிரஸ்

news

பாகிஸ்தானின் பல்டி அரசியல்.. ஐசிசி-யின் அதிரடி கடிதத்தால் அடிபணிந்த பிசிபி!

news

தேர்வுகளை நடத்த தெரியாதவர் தமிழ்நாட்டுக்கு முதல்வராக வாய்த்திருப்பது சாபக்கேடு: எடப்பாடி பழனிச்சாமி

அதிகம் பார்க்கும் செய்திகள்