- கவிஞர் சு நாகராஜன்
பழையன கழிதலும்
புதியன புகுதலும் போகி
பழையன எரிக்கலாமே
கோபம் என்ற அரக்கனை
எரித்து விடுங்கள்
பொறாமை என்ற பகைவனை
பொசுக்கி விடுங்கள்
வஞ்சனை என்ற கம்சனை
வதம் செய்து விடுங்கள்
தீமை செய்தல்
என்ற கொடூரனை
தீயில் போட்டு
தீயிக்கு இரையாக்குங்கள்
போட்டி பொறாமை
கோபம் வாக்குவாதம்

இன்னும் பிற செயல்களை
இன்றோடு புதைத்து விடுங்கள்
ஆம்
அன்பு என்னும்
அமிர்தத்தை எடுத்து
அனைவரிடமும்
பகிருங்கள்
ஒழுக்கம் என்னும்
ஓர் மந்திரத்தை
சொல்லி
பிறரையும்
சொல்ல வையுங்கள்
யாசகம் வேண்டி
நிற்பவரிடம்
பொருள் கொடுத்து
உதவுங்கள்
இந்நிலை
தொடர வேண்டாம் எனில்
அவர்களுக்காக
கடவுளிடம்
மன்றாடுங்கள்
சிலுவையில்
தொங்கிய இயேசுவும்
கள்வனுக்காக
மன்றாடினார்
இன்றைக்கு நீ
என்னுடன் கூடவே
பரலோகத்தில்
இருப்பாய் என்றார்
ஆம்
அன்பு
என்ற பூக்களை எடுத்து
ஒவ்வொர் மேலும்
மணக்க செய்திடுவோம்
(கவிஞர் சு நாகராஜன், கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார்)
திமுகவின் அடுத்த அதிரடி.. விளிம்புநிலையில் இருப்போர்க்கு சிறப்பு நிதி அறிவிப்பு!
பிடியை தளர்த்தாத திமுக, காங்கிரஸ்...நேரம் ஆக ஆக அதிகரிக்கும் பரபரப்பு
திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகும்...கோபண்ணா நம்பிக்கை
இது தான் சட்ட ஒழுங்கு தரமா?...நாங்குநேரி படுகொலை...திமுக.,வை விளாசிய விஜய்
ராஜ்ய சபா எம்பி ஆகிறார் நிதின் நபீன்: பாஜகவின் இளம் தேசிய தலைவர் பீகாரிலிருந்து தேர்வு
திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடருமா? முதல்வர் இல்லத்தில் முக்கிய ஆலோசனை
இபிஎஸ் - அமித்ஷா சந்திப்பு...டெல்லி பாஜக அலுவலகத்தில் நடந்தது என்ன?
திமுக - காங்கிரஸ் கூட்டணி: இழுபறிக்கு இடையில் இன்று முக்கிய அறிவிப்பு?
தடையினை உடைத்திடு
{{comments.comment}}