3, 5,8 வகுப்பு மாணவர்களை.. fail ஆக்கும் நடைமுறையை ஒருபோதும் ஏற்க முடியாது: அமைச்சர் அன்பில் மகேஷ்

May 02, 2025,06:00 PM IST

சென்னை: சிபிஎஸ்இ பள்ளிகளில் 3, 5, 8 ஆம் வகுப்பு மாணவர்களை பெயில் ஆக்கும் நடைமுறை இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த விதியை ஒருபோதும் ஏற்க முடியாது என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.


கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை பெயில் ஆக்கக் கூடாது என்ற நடைமுறை அமலில் இருந்து வந்தது. ஆனால் சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த தேசிய கல்விக் கொள்கையில் விதி திருத்தம் செய்யப்பட்டது‌.

அதன்படி சிபிஎஸ்இ பள்ளிகளில் 3,5,8 வகுப்புகளில் குறைவான மதிப்பெண் எடுத்தால் பெயில் என்ற நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.




இதற்காக தங்களின் குழந்தைகள் குறைவான மதிப்பெண்கள் எடுத்தால் பெயில் ஆக்க சம்மதிப்பதாக பெற்றோர்களிடம் பள்ளிகள் ஒப்புதல் கடிதம் பெற்று வருகின்றன. இந்த நிலையில் தேசிய கல்விக் கொள்கையின்படி விதிகள் திருத்தப்பட்டதற்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கடும்  எதிர்ப்பை தெரிவித்து உள்ளார்.


அதில், சிபிஎஸ்இ பள்ளிகளில் மூன்று, ஐந்து, எட்டாம், வகுப்பு மாணவர்களை ஃபெயில் ஆக்கும் நடைமுறையை ஒருபோதும் ஏற்க முடியாது. நோ ஆல்பாஸ் தொடர்பாக சிபிஎஸ்இ பள்ளிகளில் கையெழுத்து கேட்டால் போட மறுத்து பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். பெயில் நடைமுறையால் பள்ளிகளில் மாணவர்களின் இடைநிற்றல் அதிகரிக்கும் எனவும் கூறியுள்ளார்.


ஏப்ரல் மாதம் முடிவதற்கு முன்பே ஒன்பதாம் வகுப்பு வரை விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, பழைய விதிமுறைப்படி மாணவர்கள் அடுத்த வகுப்பிற்கு சென்று விட்டனர். இதனால் தற்போது மதிப்பெண்கள் குறைந்தால் பெயில் என்ற நடைமுறை அடுத்த ஆண்டு முதல் முழுமையாக அமலுக்கு வரும் என ஆசிரியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

போர்களும், மோதல்களும் சூழ்ந்த உலகம்.. யோகா அமைதியைக் கொண்டு வரும்.. பிரதமர் மோடி நம்பிக்கை

news

வால்பாறை அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி காலமானார்

news

இல்லத்தரசி.. உண்மையில் அப்படித்தான் நாம் பெண்களை மதிக்கிறோமா?

news

ஆபரேஷன் சிந்து தொடர்கிறது.. ஈரானிலிருந்து இதுவரை 517 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்

news

17.5 கோடிக்கு வீடு வாங்கி .. 1.6 கோடிக்கு.. வாடகைக்கு விடும் நடிகர் மாதவன்!

news

தனுசின் குபேரா முதல் நாள் வசூல் இவ்வளவு தானா?.. ராயனை விட மோசம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

news

93 ஆண்டுகளில் இல்லாத வரலாறு.. சதம் போடுவதில் அசகாய சாதனையைப் படைத்த.. ஜெய்ஸ்வால்!

news

முக ஸ்டாலின் நிலைப்பாடு மாறிவிட்டது... நம்ப வைத்து கழுத்து அறுத்துவிட்டார்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்

news

இஸ்ரேல் மற்றும் ஈரானில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: சீமான்

அதிகம் பார்க்கும் செய்திகள்