3, 5,8 வகுப்பு மாணவர்களை.. fail ஆக்கும் நடைமுறையை ஒருபோதும் ஏற்க முடியாது: அமைச்சர் அன்பில் மகேஷ்

May 02, 2025,06:00 PM IST

சென்னை: சிபிஎஸ்இ பள்ளிகளில் 3, 5, 8 ஆம் வகுப்பு மாணவர்களை பெயில் ஆக்கும் நடைமுறை இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த விதியை ஒருபோதும் ஏற்க முடியாது என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.


கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை பெயில் ஆக்கக் கூடாது என்ற நடைமுறை அமலில் இருந்து வந்தது. ஆனால் சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த தேசிய கல்விக் கொள்கையில் விதி திருத்தம் செய்யப்பட்டது‌.

அதன்படி சிபிஎஸ்இ பள்ளிகளில் 3,5,8 வகுப்புகளில் குறைவான மதிப்பெண் எடுத்தால் பெயில் என்ற நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.




இதற்காக தங்களின் குழந்தைகள் குறைவான மதிப்பெண்கள் எடுத்தால் பெயில் ஆக்க சம்மதிப்பதாக பெற்றோர்களிடம் பள்ளிகள் ஒப்புதல் கடிதம் பெற்று வருகின்றன. இந்த நிலையில் தேசிய கல்விக் கொள்கையின்படி விதிகள் திருத்தப்பட்டதற்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கடும்  எதிர்ப்பை தெரிவித்து உள்ளார்.


அதில், சிபிஎஸ்இ பள்ளிகளில் மூன்று, ஐந்து, எட்டாம், வகுப்பு மாணவர்களை ஃபெயில் ஆக்கும் நடைமுறையை ஒருபோதும் ஏற்க முடியாது. நோ ஆல்பாஸ் தொடர்பாக சிபிஎஸ்இ பள்ளிகளில் கையெழுத்து கேட்டால் போட மறுத்து பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். பெயில் நடைமுறையால் பள்ளிகளில் மாணவர்களின் இடைநிற்றல் அதிகரிக்கும் எனவும் கூறியுள்ளார்.


ஏப்ரல் மாதம் முடிவதற்கு முன்பே ஒன்பதாம் வகுப்பு வரை விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, பழைய விதிமுறைப்படி மாணவர்கள் அடுத்த வகுப்பிற்கு சென்று விட்டனர். இதனால் தற்போது மதிப்பெண்கள் குறைந்தால் பெயில் என்ற நடைமுறை அடுத்த ஆண்டு முதல் முழுமையாக அமலுக்கு வரும் என ஆசிரியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Vizhinjam Port: விழிஞ்ஞம் துறைமுகம்.. இந்தியா மற்றும் கேரளாவின் வர்த்தக வளர்ச்சியில் புது அத்தியாயம்

news

நேஷனல் ஹெரால்டு வழக்கில்.. சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு.. டெல்லி கோர்ட் நோட்டீஸ்

news

3, 5,8 வகுப்பு மாணவர்களை.. fail ஆக்கும் நடைமுறையை ஒருபோதும் ஏற்க முடியாது: அமைச்சர் அன்பில் மகேஷ்

news

பாகிஸ்தான் வான்வெளி மூடப்படுவதால்.. ஏர் இந்தியா நிறுவனத்துக்கு $600 மில்லியன் இழப்பு!

news

வெயிலிலிருந்து தப்ப.. நீண்ட நேரம் AC இயக்கினால்.. என்னென்ன பிரச்சினையெல்லாம் வரும் தெரியுமா?

news

மதுரை சித்திரை திருவிழா... 4ம் தேதி முதல் பொருட்காட்சி.. 45 நாட்களுக்கு!

news

என் இதயமே.. மீண்டும் ஒரு காதல் கதையில் ஷிகர் தவான்.. இன்ஸ்டாவில் குவியும் வாழ்த்துகள்!

news

பயணிகளின் கோரிக்கையை ஏற்று.. புறநகர் ஏசி ரயில்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.. தெற்கு ரயில்வே!

news

வாழ்த்து மழையில் நனையும்‌.. டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம்.. கொண்டாடும் ரசிகர்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்