3, 5,8 வகுப்பு மாணவர்களை.. fail ஆக்கும் நடைமுறையை ஒருபோதும் ஏற்க முடியாது: அமைச்சர் அன்பில் மகேஷ்

May 02, 2025,06:00 PM IST

சென்னை: சிபிஎஸ்இ பள்ளிகளில் 3, 5, 8 ஆம் வகுப்பு மாணவர்களை பெயில் ஆக்கும் நடைமுறை இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த விதியை ஒருபோதும் ஏற்க முடியாது என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.


கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை பெயில் ஆக்கக் கூடாது என்ற நடைமுறை அமலில் இருந்து வந்தது. ஆனால் சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த தேசிய கல்விக் கொள்கையில் விதி திருத்தம் செய்யப்பட்டது‌.

அதன்படி சிபிஎஸ்இ பள்ளிகளில் 3,5,8 வகுப்புகளில் குறைவான மதிப்பெண் எடுத்தால் பெயில் என்ற நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.




இதற்காக தங்களின் குழந்தைகள் குறைவான மதிப்பெண்கள் எடுத்தால் பெயில் ஆக்க சம்மதிப்பதாக பெற்றோர்களிடம் பள்ளிகள் ஒப்புதல் கடிதம் பெற்று வருகின்றன. இந்த நிலையில் தேசிய கல்விக் கொள்கையின்படி விதிகள் திருத்தப்பட்டதற்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கடும்  எதிர்ப்பை தெரிவித்து உள்ளார்.


அதில், சிபிஎஸ்இ பள்ளிகளில் மூன்று, ஐந்து, எட்டாம், வகுப்பு மாணவர்களை ஃபெயில் ஆக்கும் நடைமுறையை ஒருபோதும் ஏற்க முடியாது. நோ ஆல்பாஸ் தொடர்பாக சிபிஎஸ்இ பள்ளிகளில் கையெழுத்து கேட்டால் போட மறுத்து பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். பெயில் நடைமுறையால் பள்ளிகளில் மாணவர்களின் இடைநிற்றல் அதிகரிக்கும் எனவும் கூறியுள்ளார்.


ஏப்ரல் மாதம் முடிவதற்கு முன்பே ஒன்பதாம் வகுப்பு வரை விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, பழைய விதிமுறைப்படி மாணவர்கள் அடுத்த வகுப்பிற்கு சென்று விட்டனர். இதனால் தற்போது மதிப்பெண்கள் குறைந்தால் பெயில் என்ற நடைமுறை அடுத்த ஆண்டு முதல் முழுமையாக அமலுக்கு வரும் என ஆசிரியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வேண்டும்.. இபிஎஸ்.க்கு செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு!

news

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா.. பாடல் புகழ்.. கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்

news

ஒன்றிணைந்த அதிமுக.. செங்கோட்டையன் சொல்வதே சரி.. ஓபிஎஸ், நயினார் நாகேந்திரன் ஆதரவு

news

யார்? யாரை கட்சியில் இணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் வெளிப்படையாக கூற வேண்டும்: திருமாவளவன்

news

செங்கோடையன் பேச்சு... ஒன்று பட்டால் உண்டு வாழ்வு: பிரேமலதா விஜயகாந்த் கருத்து!

news

Unified ADMK: செங்கோட்டையன் கருத்துக்கு பெருகும் ஆதரவு.. என்ன செய்ய போகிறார் இபிஎஸ்?

news

செங்கோட்டையன் கோரிக்கையை ஏற்க இபிஎஸ் மறுத்தால்.. திமுக, தவெகவுக்கு சாதகமாகும் களம்!

news

செங்கோட்டையன் தனது உடம்பில் ஓடுவது அதிமுக இரத்தம் தான் என்பதை நிரூபித்துவிட்டார்: சசிகலா

news

பிரிந்து சென்றவர்கள் என்றால்.. நயினார் நாகேந்திரன் முதல் செந்தில் பாலாஜி வரை பெரிய லிஸ்ட்டாச்சே!

அதிகம் பார்க்கும் செய்திகள்