டெல்லி: மத்திய அரசு நடத்தி வரும் பள்ளிகளில் தற்போது 5 மற்றும் 8ம் வகுப்புகளில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஆல் பாஸ் முறை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இனிமேல் தேர்வுகளில் வெற்றி பெற்றால்தான் 6 மற்றும் 9 ம் வகுப்புகளுக்குத் தகுதி பெற முடியும்.
அதேசமயம், எந்த ஒரு மாணவ மாணவியும் அவர்களது தொடக்கக் கல்வியை முடிக்கும் வரை பள்ளியை விட்டு அனுப்பப்பட மாட்டார்கள் என்றும் அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு நடத்தி வரும் 3000 பள்ளிகளில் இந்த புதிய திட்டம் அமலுக்கு வருகிறது.
இந்தியாவில் 16 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் இந்த தேர்வு முறை ஏற்கனவே அமலில் உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு கல்வி உரிமைச் சட்டத் திருத்தம் அமலுக்கு வந்த பிறகு பெரும்பாலான பாஜக ஆளும் மாநிலங்கள் இந்த புதிய முறைக்கு மாறி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

5 மற்றும் 8ம் வகுப்புகளில் இனி வருடாந்திரத் தேர்வுகளில் தோல்வி அடைவோர் அடுத்த வகுப்புகளுக்கு முன்னேற முடியாது தோல்வி அடைபவர்களுக்கு சிறப்புப் பயிற்சி கொடுத்து அடுத்த 2 மாதங்களில் அவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்படும். அதில் தேர்ச்சி அடைந்தால்தான் அடுத்த வகுப்புகளுக்கு முன்னேற முடியும்.
அதேசமயம் மறு தேர்விலும் தோல்வி அடைந்தால் மீண்டும் அவர்கள் 5 மற்றும் 8ம் வகுப்பிலேயே தொடர்வார்கள். அவர்களுக்கும், மாணவர்களின் பெற்றோர்களுக்கும் கூடுதல் வழி காட்டுதல் கொடுக்கப்படும்.
மத்திய அரசு நடத்தி வரும் கேந்திரியா வித்யாலயா, நவோதயா வித்யாலயா, சைனிக் பள்ளிகளில் இந்த புதிய முறை அமல்படுத்தப்படும். பள்ளிக் கல்வித்துறை மாநில திட்டத்தின் கீழ் வருவதால் மாநிலப் பள்ளிகளில் இந்தத் திட்டத்தை அமல்படுத்துவதை மாநில அரசுகளின் முடிவுக்கே விடுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பொறுமையை சோதிக்கும் கூட்டணிக் கட்சிகள்.. அமைதியாக இருக்கும் திமுக.. என்ன நடக்கும்?
தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய பட்ஜெட்:பிப்ரவரி 12ல் மதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: வைகோ
தமிழகத்தில் ஆட்சியாளர்களை எதிர்த்து எதிர்மறை வாக்குகள் அதிகரித்து வருகிறது: ஜி.கே.வாசன் பேட்டி
ராமதாஸ் பாமக வந்தால் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவோம்...திருமாவளவன் உறுதி
கிச்சனில் இருக்கும்போது கவனம் தோழியரே.. எண்ணெய் தீ விபத்தை.. தடுப்பது எப்படி?
ஒரு வாரத்துக்கு நகைக் கடை பக்கமே போகாமல் இருந்தால் தங்கம் விலை குறையுமா!?
பிப்ரவரி 17-ல் தமிழக இடைக்கால பட்ஜெட்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
இந்திய சீனியர் அணிக்கு வைபவ் வர முடியாது.. குறுக்கே நிற்கும் கெளஷிக் (ஐசிசி விதி)!
முகம்து சிராஜுக்கு அடித்த லக்கி பிரைஸ்.. ராணா வெளியேறினார்.. சிராஜுக்கு வாய்ப்பு!
{{comments.comment}}