சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம்

Dec 15, 2025,04:50 PM IST

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்    மாணவர்களுக்கான  மருத்துவ  முகாம் நடை பெற்றது.


சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்    மாணவர்களுக்கான  மருத்துவ  முகாம் நடை பெற்றது. இந்த முகாமிற்கு வந்திருந்தோரை ஆசிரியர் ஸ்ரீதர்  வரவேற்றார். தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். 




கண்ணங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் கெவின் ஆபிரகாம், யாழிசை, கண் மருத்துவ அலுவலர் மகேஸ்வரி, செவிலியர் உமாமகேஸ்வரி, மருந்தாளுனர் கனிமொழி   ஆகியோர்   பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களின் உடல்களையும் பரிசோதித்தார். மாணவர்களிடம் உடல் சார்ந்த நோய்களை கண்டுபிடித்து அவற்றை உடனுக்குடன் எடுத்து கூறினார்கள். 




மேலும், சில நோய்களுக்கு மேல் சிகிச்சைக்காக மாவட்ட அளவிலான அரசு மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரைத்தனர். சில நோய்களுக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை மருத்துவ உதவியாளர்கள் ஷாஜஹான், தேவதாஸ்   ஆகியோர்  செய்து இருந்தனர். முகாமின் நிறைவாக ஆசிரியை முத்துமீனாள்   நன்றி கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மெஷின் மீது அக்கறை… மனிதர்கள் மீது ஏன் இல்லை?

news

அரங்கனின் பிரியாவிடை...!

news

புலம்பெயர் மண்ணில் மலர்ந்த நட்பு.. நெகிழ்ச்சியூட்டிய பிறந்தநாள் கொண்டாட்டம்!

news

கழுகு போல பறக்க ஆசையா.. அப்புறம் எதுக்கு வாத்துகளோடு நீச்சலடிச்சுட்டு இருக்கீங்க!

news

சிலுவை நாயகனின் ஏழு வார்த்தைகள்!

news

ஆளுக்கு முந்தி சீட் வாங்கியாச்சு.. வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் திணறும் காங்., பாஜக!

news

தமிழ்நாட்டின் பெயரை பிரதமர் மாற்றுவார் என்பது அப்பட்டமான பொய்: நயினார் நாகேந்திரன்

news

எதையெல்லாம் செய்ய முடியாதோ அதையெல்லாம் வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிவது தான் திமுகவினரின் வேலை:விஜய்

news

திருச்சி கிழக்கில் விஜய்.. சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்