சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான மருத்துவ முகாம் நடை பெற்றது.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான மருத்துவ முகாம் நடை பெற்றது. இந்த முகாமிற்கு வந்திருந்தோரை ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார். தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.

கண்ணங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் கெவின் ஆபிரகாம், யாழிசை, கண் மருத்துவ அலுவலர் மகேஸ்வரி, செவிலியர் உமாமகேஸ்வரி, மருந்தாளுனர் கனிமொழி ஆகியோர் பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களின் உடல்களையும் பரிசோதித்தார். மாணவர்களிடம் உடல் சார்ந்த நோய்களை கண்டுபிடித்து அவற்றை உடனுக்குடன் எடுத்து கூறினார்கள்.

மேலும், சில நோய்களுக்கு மேல் சிகிச்சைக்காக மாவட்ட அளவிலான அரசு மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரைத்தனர். சில நோய்களுக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை மருத்துவ உதவியாளர்கள் ஷாஜஹான், தேவதாஸ் ஆகியோர் செய்து இருந்தனர். முகாமின் நிறைவாக ஆசிரியை முத்துமீனாள் நன்றி கூறினார்.
கடினமான பாதைகள்.. நமது அசாதாரண இலக்கை உணர்த்தும் சான்று!
பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கடிதத்தில் உள்ளது என்ன.. யாருக்கான மெசேஜ் இது?
மே 20ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் - அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு
பேரம் பேச வேண்டிய அவசியமில்லை – விசிக தலைவர் திருமாவளவன் காட்டம்
பெருந்தன்மையின் பொருள்.. விஷால் விளையாட்டுக்கள் (19)
பொது வாழ்வில் இருந்து பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஓய்வு அறிவிப்பு! அதிர்ச்சியில் திமுகவினர்
சேலத்து மாம்பழம்.. பெங்களூரா மாம்பழம்... தித்திப்பா சாப்பிடுவோம்!
அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செம்மலை விலகல்...காரணம் இது தான்
உயிரை உலுக்கும் பனி.. 200 வகையான சாப்பாடு.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 7)
{{comments.comment}}