டெல்லி: சாம்பியன்ஸ் டிராபி தொடர் 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் இந்திய அணியின் முக்கிய வீரரான ரிஷப் பந்த்துக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்திய அணிக்கு சிறிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் வருகிற 19ம் தேதி தொடங்கவுள்ளது. பாகிஸ்தான் நடத்தவுள்ள இந்தத் தொடரில் இந்தியா பங்கேற்கும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெறவுள்ளன. இதில் இந்தியாவின் முதல் போட்டி வருகிற 20ம் தேதி நடைபெறவுள்ளது. துபாயில் நடைபெறும் இப்போட்டியில் இந்தியாவை எதிர்த்து வங்கதேசம் மோதவுள்ளது.
இப்போட்டித் தொடருக்காக இந்திய அணி தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் முக்கிய வீரரும், விக்கெட்கீப்பருமான ரிஷப் பந்த் காயமடைந்துள்ளார். பயிற்சியின்போது அவரது முழங்காலில் அடிபட்டுள்ளது. இதனால் இந்திய அணிக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

ரிஷப் பந்த் கார் விபத்திலிருந்து மீண்டு மீண்டும் விளையாடி வருகிறார். அவர் பங்கேற்கும் முதல் சாம்பியன்ஸ் டிராபி தொடர் இதுதான். இந்திய அணிக்கு குறிப்பாக டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் நல்ல ஸ்டிரைக் ரேட் இவர் வைத்துள்ளார். இரண்டிலும் சேர்த்து 100 சதவீதம் என்ற அளவுக்கு ஸ்டிரைக் ரேட் வைத்துள்ளார். இந்த நிலையில் அவர் காயமடைந்திருப்பது அணிக்குப் பின்னடைவாக கருதப்படுகிறது.
துபாயில் நடந்த பயிற்சியின்போது ஹர்டிக் பாண்ட்யா வீசிய பந்து, பந்த்தின் இடது முழங்காலில் பட்டதால் அவர் காயமடைந்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. வலியால் சிறிது அவதிப்பட்டாலும் கூட தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் பந்த். கடந்த 2022ம் ஆண்டு நடந்த கார் விபத்தின்போது இதே காலில்தான் அவருக்கு காயம் ஏற்பட்டது என்பதால் இந்த புதிய காயமானது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ரிஷப் பந்த் உடல் தகுதி குறித்து அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் இல்லை. இருப்பினும் அவர் விளையாடுவாரா அல்லது முதல் போட்டியில் பங்கேற்காமல் ஓய்வெடுப்பாரா என்பது குறித்து தெளிவான அறிவிப்பு ஏதும் இதுவரை இல்லை.
23ம் தேதி உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறவுள்ளது. பந்த் அந்தப் போட்டிக்கு கண்டிப்பாக விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.
இந்தியா இதுவரை 2002 மற்றும் 2013 ஆண்டுகள் என 2 முறை சாம்பின்ஸ் டிராபியை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்
மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை
காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு
தவெகவை முடக்க முயற்சிக்கிறார்கள்... எங்களுக்கு யாரும் நெருக்கடி கொடுக்க முடியாது... சிடிஆர் நிர்மல்
2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு
ICC ODI ranking: ஒரு நாள் போட்டிகளுக்கான தரவரிசையில்.. ரோஹித் சர்மா புதிய சாதனை!
வைரலானது.. ஜப்பானின் முதல் பெண் பிரதமரின் கைப்பை.. உள்ளூர் நிறுவனத்திற்கு கிராக்கி!
டெல்லியில் மீண்டும் தோல்வியடைந்த செயற்கை மழை முயற்சிகள்.. ஈரப்பதம் போதவில்லை!
{{comments.comment}}