டெல்லி: சாம்பியன்ஸ் டிராபி தொடர் 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் இந்திய அணியின் முக்கிய வீரரான ரிஷப் பந்த்துக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்திய அணிக்கு சிறிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் வருகிற 19ம் தேதி தொடங்கவுள்ளது. பாகிஸ்தான் நடத்தவுள்ள இந்தத் தொடரில் இந்தியா பங்கேற்கும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெறவுள்ளன. இதில் இந்தியாவின் முதல் போட்டி வருகிற 20ம் தேதி நடைபெறவுள்ளது. துபாயில் நடைபெறும் இப்போட்டியில் இந்தியாவை எதிர்த்து வங்கதேசம் மோதவுள்ளது.
இப்போட்டித் தொடருக்காக இந்திய அணி தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் முக்கிய வீரரும், விக்கெட்கீப்பருமான ரிஷப் பந்த் காயமடைந்துள்ளார். பயிற்சியின்போது அவரது முழங்காலில் அடிபட்டுள்ளது. இதனால் இந்திய அணிக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ரிஷப் பந்த் கார் விபத்திலிருந்து மீண்டு மீண்டும் விளையாடி வருகிறார். அவர் பங்கேற்கும் முதல் சாம்பியன்ஸ் டிராபி தொடர் இதுதான். இந்திய அணிக்கு குறிப்பாக டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் நல்ல ஸ்டிரைக் ரேட் இவர் வைத்துள்ளார். இரண்டிலும் சேர்த்து 100 சதவீதம் என்ற அளவுக்கு ஸ்டிரைக் ரேட் வைத்துள்ளார். இந்த நிலையில் அவர் காயமடைந்திருப்பது அணிக்குப் பின்னடைவாக கருதப்படுகிறது.
துபாயில் நடந்த பயிற்சியின்போது ஹர்டிக் பாண்ட்யா வீசிய பந்து, பந்த்தின் இடது முழங்காலில் பட்டதால் அவர் காயமடைந்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. வலியால் சிறிது அவதிப்பட்டாலும் கூட தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் பந்த். கடந்த 2022ம் ஆண்டு நடந்த கார் விபத்தின்போது இதே காலில்தான் அவருக்கு காயம் ஏற்பட்டது என்பதால் இந்த புதிய காயமானது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ரிஷப் பந்த் உடல் தகுதி குறித்து அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் இல்லை. இருப்பினும் அவர் விளையாடுவாரா அல்லது முதல் போட்டியில் பங்கேற்காமல் ஓய்வெடுப்பாரா என்பது குறித்து தெளிவான அறிவிப்பு ஏதும் இதுவரை இல்லை.
23ம் தேதி உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறவுள்ளது. பந்த் அந்தப் போட்டிக்கு கண்டிப்பாக விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.
இந்தியா இதுவரை 2002 மற்றும் 2013 ஆண்டுகள் என 2 முறை சாம்பின்ஸ் டிராபியை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
களை கட்டியது தவெக மாநில மாநாடு... சாலை மார்க்கமாக மதுரை வந்தடைந்தார் விஜய்!
பாஜக தேர்வு செய்த வேட்பாளர் தமிழர் என்பதாலேயே ஆதரிக்க முடியுமா?: திமுக எம்பி கனிமொழி!
சபாஷ் செம போட்டி.. துணை ஜனாதிபதி தேர்தலில்.. ஆப்பை அப்படியே பாஜக பக்கம் திருப்பி விட்ட காங்.!
ஆம்புலன்ஸ் செல்லும் வழியில் கூட்டத்தை போட்டுவிட்டு ஓட்டுனரை மிரட்டுவதா?: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
உப்பு அதிகம் சாப்பிட்டால் கிட்னி பாதிக்கப்படுமா.. மருத்துவர்கள் சொல்வது என்ன?
அன்புமணி பதிலளிக்க தவறினால் என்ன நடக்கும்?.. டாக்டர் ராமதாஸின் அடுத்தடுத்த அதிரடி!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்: இந்தியா கூட்டணி வேட்பாளராக சுதர்சன் ரெட்டி தேர்வு!
சிறுநீரகக் கொள்ளை தீரும் முன்பே கல்லீரல் திருட்டு.. இது தான் திமுகவின் சாதனையா?: டாக்டர் அன்புமணி
மும்பையை உலுக்கி எடுத்த கன மழை.. நவி மும்பையின் பல பகுதிகளில் வெள்ளக்காடு!
{{comments.comment}}