அச்சச்சோ ரிஷப் பந்த்துக்கு காயம்.. சாம்பியன்ஸ் டிராபி தொடங்கும் நிலையில் பின்னடைவு!

Feb 17, 2025,10:49 AM IST

டெல்லி: சாம்பியன்ஸ் டிராபி தொடர் 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் இந்திய அணியின் முக்கிய வீரரான ரிஷப் பந்த்துக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்திய அணிக்கு சிறிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.


சாம்பியன்ஸ் டிராபி தொடர் வருகிற 19ம் தேதி தொடங்கவுள்ளது. பாகிஸ்தான் நடத்தவுள்ள இந்தத் தொடரில் இந்தியா பங்கேற்கும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெறவுள்ளன. இதில் இந்தியாவின் முதல் போட்டி வருகிற 20ம் தேதி நடைபெறவுள்ளது. துபாயில் நடைபெறும் இப்போட்டியில் இந்தியாவை எதிர்த்து வங்கதேசம் மோதவுள்ளது.


இப்போட்டித் தொடருக்காக இந்திய அணி தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் முக்கிய வீரரும், விக்கெட்கீப்பருமான ரிஷப் பந்த் காயமடைந்துள்ளார். பயிற்சியின்போது அவரது முழங்காலில் அடிபட்டுள்ளது. இதனால் இந்திய அணிக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.




ரிஷப் பந்த் கார் விபத்திலிருந்து மீண்டு மீண்டும் விளையாடி வருகிறார். அவர் பங்கேற்கும் முதல் சாம்பியன்ஸ் டிராபி தொடர் இதுதான். இந்திய அணிக்கு குறிப்பாக டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் நல்ல ஸ்டிரைக் ரேட் இவர் வைத்துள்ளார். இரண்டிலும் சேர்த்து 100 சதவீதம் என்ற அளவுக்கு ஸ்டிரைக் ரேட் வைத்துள்ளார். இந்த நிலையில் அவர் காயமடைந்திருப்பது அணிக்குப் பின்னடைவாக கருதப்படுகிறது.


துபாயில் நடந்த பயிற்சியின்போது ஹர்டிக் பாண்ட்யா வீசிய பந்து, பந்த்தின் இடது முழங்காலில் பட்டதால் அவர் காயமடைந்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. வலியால் சிறிது அவதிப்பட்டாலும் கூட தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் பந்த். கடந்த 2022ம் ஆண்டு நடந்த கார் விபத்தின்போது இதே காலில்தான் அவருக்கு காயம் ஏற்பட்டது என்பதால் இந்த புதிய காயமானது கவலையை ஏற்படுத்தியுள்ளது.


ரிஷப் பந்த் உடல் தகுதி குறித்து அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் இல்லை. இருப்பினும் அவர் விளையாடுவாரா அல்லது முதல் போட்டியில் பங்கேற்காமல் ஓய்வெடுப்பாரா என்பது குறித்து தெளிவான அறிவிப்பு ஏதும் இதுவரை இல்லை.


23ம் தேதி உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறவுள்ளது. பந்த் அந்தப் போட்டிக்கு கண்டிப்பாக விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.


இந்தியா இதுவரை 2002 மற்றும் 2013 ஆண்டுகள் என 2 முறை சாம்பின்ஸ் டிராபியை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அலர்ட்!

news

பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!

news

வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

news

மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆவேசம்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி!

news

திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள்: அன்புமணி ராமதாஸ் வேதனை!

news

ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!

news

Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!

news

சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!

news

Amma's Pride ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சென்னையில் உருவான குறும்படம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்