சென்னை: தமிழகத்தில் தற்போதைு கோடைகாலம் கொளுத்த ஆரம்பித்துள்ளது. இந்த கோடை காலத்தில் வெயில் வாட்டிக் கொண்டுள்ள நிலையில் கொஞ்சம் மழைக்கும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்து வருகிறது.
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தான் வெப்பம் அதிகமாக இருக்கும். ஆனால் தற்பொழுது கோடைகாலம் ஆரம்பிப்பதற்கு முன்னரே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பங்குனி பிறந்து விட்ட நிலையில், வெயில் தனது உக்கிரத்தை காட்டி வருவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்த நிலையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பில்லை என்றும், வெயிலின் அளவு 2 டிகிரி வரை அதிகரித்து காணப்படும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆனால் மழைக்கு சில இடங்களில் வாய்ப்புள்ளதாம். இது குறித்து வானிலை மையம் அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

26/3/2024 முதல் 30/03/2024 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.31/03/2024 மற்றும் 1/4/2024 தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 26/3/2024 முதல் 30/03/2024 தமிழகத்தில் ஒரு இடங்களில் அதிக வெப்பநிலையும் அடுத்த ஐந்து தினங்களுக்கு 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதே ஈரப்புறம் இருக்கும் பொழுது ஒரிரு இடங்களில் அசெளவுகரியம் ஏற்படலாம்
சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும் குறைந்த வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு ஏதுமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}