ஹைதராபாத்: தெலுங்கு தேசம் தலைவரும், மத்தியில் பாஜக ஆட்சியமைக்க உதவிக் கரம் நீட்டியுள்ளவருமான சந்திரபாபு நாயுடுவின் மனைவி நர புவனேஸ்வரியின் சொத்து மதிப்பு கடந்த ஐந்து நாட்களில் ரூ. 535 கோடி அதிகரித்துள்ளது.
நர புவனேஸ்வரி ஹெரிட்டேஜ் புட்ஸ் என்ற நிறுவனத்தின் புரமோட்டராக இருக்கிறார். இதை நிறுவியவர் சந்திரபாபு நாயுடுதான். கடந்த ஐந்து நாட்களில் பங்குச் சந்தையில் ஏற்பட்ட உயர்வு காரணமாக இந்த நிறுவனத்தின் பங்குகளும் மதிப்பும் உயர்ந்து வந்தது. இதனால் நர புவனேஸ்வரியின் சொத்து மதிப்பு ரூ. 535 கோடி அளவுக்கு உயர்ந்துள்ளதாம்.

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆட்சியைப் பிடித்துள்ளார். மத்தியிலும் அவர் கிங் மேக்கராக உருவாகியுள்ளார். இதனால் ஹெரிட்டேஜ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 55 சதவீத அளவுக்கு பங்குகளின் மதிப்பு உயர்ந்துள்ளதாம். ஜூன் 3ம் தேதி ஒரு பங்கின் மதிப்பு ரூ. 424 ஆக இருந்தது. அதாவது தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பு இந்த விலை. இப்போது ஒரு பங்கின் மதிப்பு ரூ. 661.25 என உயர்ந்து உள்ளது.

1992ம் ஆண்டு ஹெரிட்டேஜ் புட்ஸ் நிறுவனத்தை உருவாக்கினார் நாயுடு. பால் மற்றும் பாால் பொருட்கள் உள்ளிட்டவற்றை இது தயாரித்து விற்கிறது ஆந்திரா, தமிழ்நாடு, தெலங்கானா, மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, ஒடிஷா, டெல்லி, ஹரியானா, உத்தரகாண்ட், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் வரை இந்த நிறுவனத்தின் பிசினஸ் நடந்து வருகிறது.
இந்த நிறுவனத்தில் நர புவனேஸ்வரிதான் முன்னணி பங்குதாரர் ஆவார். இவரிடம் 2,26,11,525 பங்குகள் உள்ளன. நாயுடுவின் மகன் நர லோகேஷுக்கு 1,00,37,453 பங்குகள் உள்ளன. நர லோகேஷின் சொத்து மதிப்பும் ரூ. 237.8 கோடி உயர்ந்துள்ளதாம்.
சிந்தனைச் சிதறல்.. ஒருவருக்குத் தவறெனத் தோன்றுவது மற்றவருக்குச் சரியெனத் தோன்றுகிறது!
ஆளுக்கு முந்தி சீட் வாங்கியாச்சு.. வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் திணறும் காங்., பாஜக!
விஜயகாந்த் குறித்து அவமரியாதை.. பியூஷ் கோயலின் சந்தர்ப்பவாத பேச்சு.. எல்.கே.சுதீஷ் கண்டனம்
அமெரிக்க மக்களே.. உங்கள் மீது எங்களுக்கு எந்தப் பகையும் இல்லை.. ஈரான் அதிபர் கடிதம்
தவக்காலம்
நட்பு
கோயில் தொழும் தெய்வம்... நீயின்றி நான் காண வேறில்லை....!
மதிமுக.,வின் 4 தொகுதிகளிலும் உதயசூரியன்...திடீரென முடிவை மாற்றிய வைகோ
ஈரான் போர் முடிவுக்கு வருதா? விரைவில் வெளியேறப்போவதாக டிரம்ப் அறிவிப்பு
{{comments.comment}}