ஹைதராபாத்: தெலுங்கு தேசம் தலைவரும், மத்தியில் பாஜக ஆட்சியமைக்க உதவிக் கரம் நீட்டியுள்ளவருமான சந்திரபாபு நாயுடுவின் மனைவி நர புவனேஸ்வரியின் சொத்து மதிப்பு கடந்த ஐந்து நாட்களில் ரூ. 535 கோடி அதிகரித்துள்ளது.
நர புவனேஸ்வரி ஹெரிட்டேஜ் புட்ஸ் என்ற நிறுவனத்தின் புரமோட்டராக இருக்கிறார். இதை நிறுவியவர் சந்திரபாபு நாயுடுதான். கடந்த ஐந்து நாட்களில் பங்குச் சந்தையில் ஏற்பட்ட உயர்வு காரணமாக இந்த நிறுவனத்தின் பங்குகளும் மதிப்பும் உயர்ந்து வந்தது. இதனால் நர புவனேஸ்வரியின் சொத்து மதிப்பு ரூ. 535 கோடி அளவுக்கு உயர்ந்துள்ளதாம்.

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆட்சியைப் பிடித்துள்ளார். மத்தியிலும் அவர் கிங் மேக்கராக உருவாகியுள்ளார். இதனால் ஹெரிட்டேஜ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 55 சதவீத அளவுக்கு பங்குகளின் மதிப்பு உயர்ந்துள்ளதாம். ஜூன் 3ம் தேதி ஒரு பங்கின் மதிப்பு ரூ. 424 ஆக இருந்தது. அதாவது தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பு இந்த விலை. இப்போது ஒரு பங்கின் மதிப்பு ரூ. 661.25 என உயர்ந்து உள்ளது.

1992ம் ஆண்டு ஹெரிட்டேஜ் புட்ஸ் நிறுவனத்தை உருவாக்கினார் நாயுடு. பால் மற்றும் பாால் பொருட்கள் உள்ளிட்டவற்றை இது தயாரித்து விற்கிறது ஆந்திரா, தமிழ்நாடு, தெலங்கானா, மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, ஒடிஷா, டெல்லி, ஹரியானா, உத்தரகாண்ட், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் வரை இந்த நிறுவனத்தின் பிசினஸ் நடந்து வருகிறது.
இந்த நிறுவனத்தில் நர புவனேஸ்வரிதான் முன்னணி பங்குதாரர் ஆவார். இவரிடம் 2,26,11,525 பங்குகள் உள்ளன. நாயுடுவின் மகன் நர லோகேஷுக்கு 1,00,37,453 பங்குகள் உள்ளன. நர லோகேஷின் சொத்து மதிப்பும் ரூ. 237.8 கோடி உயர்ந்துள்ளதாம்.
61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா.. உலகக் கோப்பை போட்டிகளில் 16வது வெற்றி
பாகிஸ்தான் பந்து வீச்சை வச்சு செய்த இஷான் கிஷன் அவுட்.. ஆனாலும் இந்தியா ஸ்டிராங்!
நவி மும்பை தமிழ் சங்க பொன்விழா.. விஜய் டிவி ஸ்டார்களின் இசை மழையில் நனைந்த ரசிகர்கள்!
சிவமே சிவமே அருள்வாய் சிவமே....!
அனல் பறக்கப் போகும் இந்தியா vs பாகிஸ்தான் மோதல்.. கொழும்பு டி20 போட்டியில் மழை குறுக்கிடுமா?
அற்புதங்கள் நிறைந்த .. சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் மலைப்பயணம்!
Maha Shivaratri 2026.. இருள் நீங்கும் நேரம்.. மகா சிவராத்திரி!
சிவராத்திரி திருவருள் நாயகனே..... சிங்கார வேலனின் தந்தையே....!
கூட்டணி ஆட்சி பற்றி இனி யாரும் கேட்க மாட்டார்கள்...என்ன ஆர்.எஸ்.பாரதி இப்படி சொல்லிட்டார்?
{{comments.comment}}