சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழைய கழிதலும் புதிய புகுதலும் என்பதை வரவேற்கும் வகையில் பழைய பொருட்களை தீவைத்து எரித்து மக்கள் போகியை கொண்டாடி தை மாதத்தை வரவேற்கின்றனர்.
போகியையொட்டி அதிகாலையிலேயே மக்கள் பழைய பொருட்களை வீட்டின் முன்பு போட்டு தீவைத்து எரித்ததால் புகை சூழ்ந்து பல ஊர்களிலும் புகை மூட்டமாக இருந்தது. குறிப்பாக சென்னையில் பனியுடன், கடும் புகை மூட்டமும் சூழ்ந்தது.

பொங்கல் பண்டிகை தொடங்கி விட்டது. இன்று முதல் நாளில் போகியை மக்கள் கொண்டாடினர். பழையவற்றை எரித்து புதியவற்றை இந்த நாளை மக்கள் கொண்டாடுவர். உண்மையில் இந்த நாள், மழைக்கு நன்றி சொல்லும் தினமாகும். உயிர்களுக்கு ஆதாரமாக திகழும் மழைக்கு நன்றி சொல்லி இந்த நாளை கொண்டாடி அடுத்து தைப் பொங்கலை மக்கள் கொண்டாடுவார்கள்.
இதையொட்டி இன்று அதிகாலையிலேயே மக்கள் பழைய பொருட்களைப் போட்டு எரித்து போகியை கொண்டாடினர். போகியைச் சுற்றி வந்து ஆடியும், மேளம் முழங்கியபடியும் கடவுளை வணங்கி வழிபட்டனர்.

போகியால் கிளம்பிய புகை பல ஊர்களையும் சூழ்ந்திருந்தது. குறிப்பாக சென்னையில் ஏற்கனவே பனிமூட்டம் இருந்து வந்த நிலையில் தற்போது போகி புகையும் சேரவே, ஒரே புகை மூட்டமாக நகரே மூடிப் போய்க் கிடந்தது. சென்னை மற்றும் புறநகர்களில் இது கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. புகைமூட்டமாக இருப்பதால் வாகனங்கள் விளக்குகளை எரிய விட்டபடி செல்லும் நிலை ஏற்பட்டது.
சென்னையில் போகி புகை காரணமாக காற்றின் தரம் மோசமடைந்திருந்தது. சென்னையின் பல பகுதிகளிலும் காற்றின் தரக் குறியீடு AQI மோசமாக இருந்தது. பெருங்குடியில்தான் காற்றின் தரக் குறியீடு மிகவும் மோசமாக 289 என்ற அளவில் இருந்தது. அதற்கடுத்து மணலியில் 272 என்ற அளவில் இருந்தது. அரும்பாக்கம் (216), காந்தி நகர் எண்ணூர் (232), ராயபுரம் (207) என்ற அளவில் பதிவானது
புகை மூட்டம் காரணமாக சென்னையில் விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. 50க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன.
DMK Introspection: தேர்தலில் தோற்றது ஏன்? .. திமுக கள ஆய்வு ரிப்போர்ட் தந்த அதிர்ச்சி தகவல்
எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில்.. கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் சுவாமி தரிசனம்!
தகுதி நீக்கமா? ராஜினாமா செய்த 4 எம்எல்ஏ.,க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்!
ஸ்டிக்கர் ஒட்டிய சோஃபா மாடல் அரசு - முதல்வர் விஜய் மீது உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு
தமிழ்நாடு எம்எல்ஏக்களுக்கு 2 நாள் பயிற்சி வகுப்பு: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!
அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!
ஆளே இல்லாத கடையில டீ ஆத்துவது போல...தமிழக அரசை விமர்சித்த திமுக தலைவர் ஸ்டாலின்
பைக் டாக்ஸி: தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? உயர்நீதிமன்ற கிளை கேள்வி!
அரசியலுக்கு வரவா? வேண்டாமா?.. நீங்களே சொல்லுங்க பார்ப்போம்.. மக்களிடம் கேட்கும் ராகவா லாரன்ஸ்!
{{comments.comment}}