போகி கொண்டாடிய மக்கள்.. சென்னையை சூழ்ந்த புகை.. மோசமான நிலைக்குப் போன AQI

Jan 14, 2024,05:09 PM IST

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழைய கழிதலும் புதிய புகுதலும் என்பதை வரவேற்கும் வகையில் பழைய பொருட்களை தீவைத்து எரித்து மக்கள் போகியை கொண்டாடி தை மாதத்தை வரவேற்கின்றனர்.


போகியையொட்டி அதிகாலையிலேயே மக்கள் பழைய பொருட்களை வீட்டின் முன்பு போட்டு தீவைத்து எரித்ததால் புகை சூழ்ந்து பல ஊர்களிலும் புகை மூட்டமாக இருந்தது. குறிப்பாக சென்னையில்  பனியுடன், கடும் புகை மூட்டமும் சூழ்ந்தது.




பொங்கல் பண்டிகை தொடங்கி விட்டது. இன்று முதல் நாளில் போகியை மக்கள் கொண்டாடினர். பழையவற்றை எரித்து புதியவற்றை இந்த நாளை மக்கள் கொண்டாடுவர். உண்மையில் இந்த நாள், மழைக்கு நன்றி சொல்லும் தினமாகும். உயிர்களுக்கு ஆதாரமாக திகழும் மழைக்கு நன்றி சொல்லி இந்த நாளை கொண்டாடி அடுத்து தைப் பொங்கலை மக்கள் கொண்டாடுவார்கள்.


இதையொட்டி இன்று அதிகாலையிலேயே மக்கள் பழைய பொருட்களைப் போட்டு எரித்து போகியை கொண்டாடினர். போகியைச் சுற்றி வந்து ஆடியும், மேளம் முழங்கியபடியும் கடவுளை வணங்கி வழிபட்டனர். 




போகியால் கிளம்பிய புகை பல ஊர்களையும் சூழ்ந்திருந்தது. குறிப்பாக சென்னையில் ஏற்கனவே பனிமூட்டம் இருந்து வந்த நிலையில் தற்போது போகி புகையும் சேரவே, ஒரே புகை மூட்டமாக நகரே மூடிப் போய்க் கிடந்தது. சென்னை மற்றும் புறநகர்களில் இது கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. புகைமூட்டமாக இருப்பதால் வாகனங்கள் விளக்குகளை எரிய விட்டபடி  செல்லும் நிலை ஏற்பட்டது. 


சென்னையில் போகி புகை காரணமாக காற்றின் தரம் மோசமடைந்திருந்தது. சென்னையின் பல பகுதிகளிலும் காற்றின் தரக் குறியீடு AQI மோசமாக இருந்தது. பெருங்குடியில்தான் காற்றின் தரக் குறியீடு மிகவும் மோசமாக 289 என்ற அளவில் இருந்தது. அதற்கடுத்து மணலியில் 272 என்ற அளவில் இருந்தது. அரும்பாக்கம் (216), காந்தி நகர் எண்ணூர் (232), ராயபுரம் (207)  என்ற அளவில் பதிவானது


புகை மூட்டம் காரணமாக சென்னையில் விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. 50க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

சமீபத்திய செய்திகள்

news

Summer to peak in Tamil Nadu: வெப்பம் அதிகரிக்கும் அபாயம்.. டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு

news

1971 சாதனையை முறியடிக்க இலக்கு: கூட்டணி கட்சிகளுக்கு 'செக்' வைக்கும் திமுக

news

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கண்டனத் தீர்மானம்

news

அரசியல் அலசல்.. அதிமுகவில் காளியம்மாள்.. நல்ல பேச்சாளரை நழுவ விட்ட திமுக, தவெக!

news

சித்ரா பௌர்ணமி நாளில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் இந்திரன்.. அன்னை தடாதகை - 3

news

தைப்பொங்கல்.. காலங்கள் கடந்தும் கரையாத நினைவலைகள்!

news

பேச்சை விட நேர்மையான உணர்வுகளுக்கே முக்கியத்துவம்!

news

என் உடலைப் பேணத் தொடங்கியபோது.. I started taking care of my body when...

news

பழுக்கக் காய்ச்சிய இரும்பை சுத்தியால் அடித்தால்.. The hammer hits the heated steel!

அதிகம் பார்க்கும் செய்திகள்