16 வயது சிறுவன்.. ரயிலில் சாகசம்.. மின்கம்பத்தில் மோதி.. விபரீதத்தில் முடிந்த விளையாட்டு!

Oct 13, 2024,12:43 PM IST

சென்னை: சென்னையில் மின்சார ரயிலில் வாசலில் நின்று கொண்டு கம்பியைப் பிடித்தபடி ஆடியும், வெளியில் கையை விட்டுக் கொண்டும் சாகசம் செய்த 16 வயது சிறுவன், மின்சார கம்பத்தில் அடிபட்டு படுகாயமடைந்தான். தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த சிறுவன் மருத்துவமையில் சிகிச்சை பெற்று வருகிறான்.


பஸ்களில் படிக்கட்டில் தொங்கியபடி பயணிப்பது, மின்சார ரயிலில் வாசலில் நின்று கொண்டு சாகசம் செய்வது இப்படி விபரீதமான விளையாட்டுக்களில் ஈடுபடுவோர் பலர் உயிரைப் பறி கொடுத்தும் கூட இளைஞர்கள் பலர் திருந்தாமல்தான் உள்ளனர். குறிப்பாக சென்னையில் உள்ளூர் மின்சார ரயில்களில் வாசலில் நின்றுகொண்டு சிலர் செய்யும் சேட்டைகள் மிகக் கொடுமையாக இருக்கின்றன. எத்தனை பட்டாலும் திருந்த மாட்டோம் என்று பிடிவாதமாக உள்ள இவர்களால் பலருக்கும் தலைவலியாக உள்ளது.




இந்த நிலையில் இப்படி வாசலில் நின்றபடி சேட்டை செய்த ஒரு சிறுவன், தலையில் அடிபட்டு உயிருக்குப் போராடி வருகிறான். அந்த சிறுவனின் பெயர் அபிலாஷ். 16 வயதேயாகும் அந்த சிறுவன் ராயபுரத்தைச் சேர்ந்தவன். கடந்த 9ம் தேதி இவன் தனது நண்பர்களோடு மின்சார ரயிலில் பயணித்துள்ளான். அப்போது வாசற்படியில் நின்று கொண்டு சாகசம் செய்தபடி வந்துள்ளான் அபிலாஷ். கம்பியை பிடித்துக் கொண்டு ஊஞ்சாடுவது, ஒரு கையால் வெளியில் காற்றில் போய் வருவது என என்னென்னவோ செய்து கொண்டு வந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக மின் கம்பத்தில் படாரென மோதி கீழே விழுந்து விட்டான்.


இவன் செய்யும் செயல்களை வீடியோ எடுத்துக் கொண்டிருந்த இவனது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து அபிலாஷ் அபிலாஷ் என கூப்பிட்டுக் கத்தினர். செத்துட்டாண்டா, செத்துட்டாண்டா என்றும் அவர்கள் அலறியதும் வீடியோவில் பதி்வாகியுள்ளது. ராயபுரம் ரயில்வே போலீஸார் சிறுவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அபிலாஷ் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.  இதெல்லாம் தேவையா.. இப்படிப்பட்ட சாகசங்கள் ஒஒருபோதும் பாதுகாப்பானதல்ல.. ஒரு நொடியில் உயிர் போய் விடும்.. இனியாவது பொறுப்புடனும், நிதானத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் இளைஞர்கள்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மூத்த தலைவர்களைத் தேடிச் சென்று சந்திக்கும் விஜய்.. தமிழகத்தில் உருவாகும் புதிய அரசியல் டிரெண்ட்

news

JCD Prabhakar: தமிழகத்தின் புதிய சபாநாயகராக ஜேசிடி பிரபாகர் தேர்வு.. துணை சபாநாயகரானார் விஜய் சங்கர்

news

தமிழ்நாட்டின் 17-ஆவது சட்டசபை கூடியது.. உளமார உறுதிமொழி எடுத்த முதல்வர் விஜய்

news

N Anand: புஸ்ஸி ஆனந்த்.. இதுவரை வென்றது 2 முறை.. இரண்டு முறையும் வென்றது யாரைத் தெரியுமா?

news

'உளமாற உறுதி ஏற்கிறேன்' இந்த சொல்லின் வரலாறு தெரியுமா?

news

கணினி அறிவியல் பாடத்திற்காக வந்த நிதியில் மோசடி.. பட்டதாரி ஆசிரியர்கள் பரபரப்புப் புகார்!

news

சிந்தனைச் சிதறல்.. ஆணவம் அறிய விடாமல் நம்மைக் கெடுக்கும்

news

Proverb: தாயைப் பார்த்து பெண்ணை கொள், பாலை பார்த்து பசுவைக் கொள்!

news

ஆசையில பாத்திகட்டி!

அதிகம் பார்க்கும் செய்திகள்