சென்னையில்.. ரூ. 6.50 கோடி செலவில்.. 245 மாநகராட்சி பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை!

Aug 23, 2024,05:07 PM IST

சென்னை:   சென்னையில் உள்ள 245 மாநகராட்சி பள்ளிகளில் ரூ.6.50 கோடி செலவில் சிசிடிவி கேமரா பொருத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.


பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பு என்பது சமீப காலமாக கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. சமீப காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. இவற்றில் இருந்து பெண் குழந்தைகளை காக்க அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர்.




இருப்பினும் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு பள்ளிகளில் சிசிடிவி கேரமராக்கள் பொருத்த சென்னை மாநகராட்சி மேயர் தெரிவித்திருந்தார். 


இதற்கிடையில் திருவான்மியூர் பகுதியில் நடுநிலைப் பள்ளி மாணவி ஒருவரை, இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, சென்னை மாநகராட்சி சார்பில் சிசிடிவி கேமரா பொருத்த டெண்டர் கோரப்பட்டுள்ளது. சென்னையில் 206 தொடக்கப் பள்ளிகளும், 130 நடுநிலைப்பள்ளிகளும், 46 உயர்நிலைப் பள்ளிகளும், 35 மேல்நிலைப் பள்ளிகளும் என மொத்தம்  சென்னை மாநகராட்சியில் 417 பள்ளிகள் இயங்கி வருகின்றன. 


இந்த பள்ளிகளில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவ மாணவியர்கள் படித்து வருகின்றனர். சில குறிப்பிட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவிகளின் பாதுகாப்புக்காக ஏற்கெனவே சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.  அதனை தொடர்ந்து மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு அனைத்து பள்ளிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என மாநகராட்சி பட்ஜெட்டில்  சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அறிவித்திருந்தார்.


அந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக மாநகராட்சி சார்பில் ரூ.6.50 கோடியில், சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் உள்ள 245 பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்த டெண்டர் விடுக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ள நிறுவனங்கள் வருகிற 29ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. டெண்டர் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு அடுத்த ஓரிரு  மாதங்களில் சிசிடிவி கேமராக்கள் பள்ளிகளில் பொருத்தும் பணி தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!

news

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்