சென்னை: சென்னையில் உள்ள 245 மாநகராட்சி பள்ளிகளில் ரூ.6.50 கோடி செலவில் சிசிடிவி கேமரா பொருத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பு என்பது சமீப காலமாக கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. சமீப காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. இவற்றில் இருந்து பெண் குழந்தைகளை காக்க அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர்.
இருப்பினும் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு பள்ளிகளில் சிசிடிவி கேரமராக்கள் பொருத்த சென்னை மாநகராட்சி மேயர் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில் திருவான்மியூர் பகுதியில் நடுநிலைப் பள்ளி மாணவி ஒருவரை, இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, சென்னை மாநகராட்சி சார்பில் சிசிடிவி கேமரா பொருத்த டெண்டர் கோரப்பட்டுள்ளது. சென்னையில் 206 தொடக்கப் பள்ளிகளும், 130 நடுநிலைப்பள்ளிகளும், 46 உயர்நிலைப் பள்ளிகளும், 35 மேல்நிலைப் பள்ளிகளும் என மொத்தம் சென்னை மாநகராட்சியில் 417 பள்ளிகள் இயங்கி வருகின்றன.
இந்த பள்ளிகளில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவ மாணவியர்கள் படித்து வருகின்றனர். சில குறிப்பிட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவிகளின் பாதுகாப்புக்காக ஏற்கெனவே சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதனை தொடர்ந்து மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு அனைத்து பள்ளிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என மாநகராட்சி பட்ஜெட்டில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அறிவித்திருந்தார்.
அந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக மாநகராட்சி சார்பில் ரூ.6.50 கோடியில், சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் உள்ள 245 பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்த டெண்டர் விடுக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ள நிறுவனங்கள் வருகிற 29ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. டெண்டர் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு அடுத்த ஓரிரு மாதங்களில் சிசிடிவி கேமராக்கள் பள்ளிகளில் பொருத்தும் பணி தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}