சென்னை : அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கை நிராகரிக்க கோரிய எடப்பாடி பழனிச்சாமியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நிராகரிக்கும் படி, எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த சென்னை உரிமையியல் நீதிமன்றம், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும். விதிகளின்படி பொதுச் செயலாளர் தேர்வானார் என தெரிவிக்கவில்லை என கூறி எடப்பாடி பழனிச்சாமியின் மனுவை கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.

அது மட்டுமின்றி, பொதுக்குழு தீர்மானம் மூலம் பழனிசாமியை பொதுச் செயலாளராக தேர்வு செய்ததற்கு எதிரான வழக்கு செல்லும். திண்டுக்கல்லை சேர்ந்த சூரிய மூர்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உரியது என்றும் கோர்ட் தெரிவித்துள்ளது. கோர்ட்டின் இந்த உத்தரவு அதிமுக.,வில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும் என கோர்ட் தெரிவித்துள்ளதால் எடப்பாடி பழனிச்சாமியின் பொதுச் செயலாளர் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணம் பொதுக்குழுவில்தான் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் ஆனதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு ஏற்புடையது என கோர்ட் தெரிவித்துள்ளதால் விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது. அப்படி விசாரணை நடத்தப்பட்டு, இபிஎஸ் பொதுச் செயலாளர் ஆனதற்கு எதிராக தீர்ப்பு வந்தால், அதிமுக.,வின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? அடுத்த பொதுச் செயலாளர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
“Open பண்ண வெச்சுராதீங்க..” - 'பகீர்' கொடுத்த முதல்வர் விஜய்.. அந்த பைலில் அப்படி என்ன இருக்கு?
அனைத்து எம்எல்ஏ.,வுக்கும் கார், மதுரையில் புற்றுநோய் மருத்துவமனை…முதல்வர் வெளியிட்ட 10 அறிவிப்புகள்
அடிக்க ஓங்கிய திமுக எம்எல்ஏ.. சட்டசபையில் ஆவேசமாக கொந்தளித்த அமைச்சர் ராஜ்மோகன்!
தென்னிந்திய முதல்வர்கள் மாநாடு: துணைத் தலைவராக முதல்வர் விஜய் நியமனம்
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: அபார வெற்றி பெற்று இந்தியா சாதனை
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!
மாணவர் போராட்டம் தொடர்பான சுற்றறிக்கை: வெடித்தது எதிர்ப்பு... வாபஸ் பெற்றது தமிழக அரசு!
"பாடிளம் பூதத்தினானும் பவளச் செவ்வாய்வண்ணத்தானும்".. திருநாவுக்கரசர் வரலாறு
கவன ஈர்ப்பு தீர்மானம் விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
{{comments.comment}}