எடப்பாடி பழனிச்சாமி மனு தள்ளுபடி.. அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு ஆபத்தா?

Aug 01, 2025,07:30 PM IST

சென்னை : அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கை நிராகரிக்க கோரிய எடப்பாடி பழனிச்சாமியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.


அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நிராகரிக்கும் படி, எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த சென்னை உரிமையியல் நீதிமன்றம், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும். விதிகளின்படி பொதுச் செயலாளர் தேர்வானார் என தெரிவிக்கவில்லை என கூறி எடப்பாடி பழனிச்சாமியின் மனுவை கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.




அது மட்டுமின்றி, பொதுக்குழு தீர்மானம் மூலம் பழனிசாமியை பொதுச் செயலாளராக தேர்வு செய்ததற்கு எதிரான வழக்கு செல்லும். திண்டுக்கல்லை சேர்ந்த சூரிய மூர்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உரியது என்றும் கோர்ட் தெரிவித்துள்ளது. கோர்ட்டின் இந்த உத்தரவு அதிமுக.,வில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.


கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும் என கோர்ட் தெரிவித்துள்ளதால் எடப்பாடி பழனிச்சாமியின் பொதுச் செயலாளர் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணம் பொதுக்குழுவில்தான் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் ஆனதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு ஏற்புடையது என கோர்ட் தெரிவித்துள்ளதால் விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது. அப்படி விசாரணை நடத்தப்பட்டு, இபிஎஸ் பொதுச் செயலாளர் ஆனதற்கு எதிராக தீர்ப்பு வந்தால், அதிமுக.,வின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? அடுத்த பொதுச் செயலாளர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

news

ஜூன் 22.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் .. புதிய குடும்ப அட்டைகள் விநியோகிக்க திட்டம்!

news

பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை

news

தமிழக அரசு குதிரை பேரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது: கனிமொழி கடும் விமர்சனம்!

news

"இந்திரா காந்தி இருந்திருந்தால் பாஜக-விற்கு தடை விதித்திருப்பார்" - அசோக் கெலாட் சர்ச்சை பேச்சு

news

4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்...அதிமுக மனு விசாரணைக்கு ஏற்பு

news

"எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?" - எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!

news

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் அக்கறை காட்ட வேண்டும்! உதயநிதி ஸ்டாலின் காட்டம்

news

முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்