சென்னை: சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ரயில் முன்பு பெண்ணை தள்ளிவிட்டு கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றியவர் மாணிக்கம். இவருடைய மகள் சத்யபிரியாவை, அதே பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் தயாளனின் மகன் சதீஷ் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.

சென்னை பரங்கிமலை காவலர் குடியிருப்பில் இருவரும் வசித்து வந்தனர். சதீஷின் காதலுக்கு சத்யபிரியா சம்மதம் தெரிவிக்காத நிலையில், கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 13ம் தேதி, சத்யபிரியா கல்லூரிக்குச் செல்வதற்காக சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் நின்றிருந்த போது, சதீஷூம் அங்கு வந்துள்ளார். அப்போது தன்னை காதலிக்குமாறு சதீஷ் வற்புறுத்தியுள்ளார். அதற்கு சத்யபிரியா தொடர்ந்து மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரம் அடைந்த சதீஷ், அந்த வழியாக வந்த மின்சார ரயில் முன்பு சத்யபிரியாவை தள்ளிவிட்டுள்ளார். இந்த சம்பவத்தில் ரயில் மோதி சத்யபிரியா சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சதீஷ் உடனடியாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்தனர். 70 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், சென்னை அல்லிக்குளத்தில் உள்ள மகளிர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதேவி கடந்த 27தேதி தீர்ப்பளித்தார். சதீஷை குற்றவாளி என்று அறிவித்த நீதிபதி, சதீஷூக்கான தண்டணை விவரம் வரும் 30ம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
அதன்படி, இன்று கொலையாளி சதீஷுக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மாணவியை பின்தொடர்ந்து தொல்லை அளித்த பிரிவின் கீழ் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 15 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 3 ஆண்டுகள் தண்டனை நிறைவு செய்த பின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற அல்லிகுளம் மகளிர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு வழங்கியுள்ளது. உயர்நீதிமன்றம் உறுதி அளித்த பின்னர் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
காரைக்குடியில் மக்கள் கூட்டத்திற்கு நடுவே சைக்கிள் ஓட்டிய விஜய்...ஸ்தம்பித்த சாலைகள்
இணையத்தில் கசிந்த விஜய்யின் 'ஜனநாயகன்' சீன்ஸ்...ரசிகர்கள் கொதிப்பு
ஜனநாயகன் திரைப்படத்திற்காக முதல் ஆளாக குரல் கொடுத்த சிவகார்த்திகேயன்
மாம்பழம் சின்னத்தை முடக்கம்... ராமதாஸ் மனு தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
ஜனநாயகன் ரிலீசை தடுத்தது பாஜக.,வும், திமுக.,வும் தான்...ஆதவ் அர்ஜூனா பகிரங்க குற்றச்சாட்டு
சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு: 3-வது மொழிப்பாட வகுப்புகளை உடனடியாகத் தொடங்க அறிவுறுத்தல்
ஒரு முடிவா… அல்லது ஒரு தொடக்கமா?.. மனிதன், இயந்திரம், மற்றும் எதிர்காலத்தின் தேர்வு (10)
National Siblings Day: ஒரு கூட்டுக் கிளியாக.. இன்று உடன் பிறப்புகள் தினம்!
{{comments.comment}}