மெரீனா பீச், பெசன்ட் நகர் பீச்சுக்குப் போனா இந்தியா பாகிஸ்தான் போட்டியை நேரில் கண்டு களிக்கலாம்!

Feb 23, 2025,10:25 AM IST

சென்னை: இந்தியா பாகிஸ்தான் இடையிலான இன்றைய சாம்பியன்ஸ் டிராபி போட்டியை நேரில் கண்டு களிக்க ஒரு சூப்பர் ஏற்பாட்டை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் செய்துள்ளது.


பாகிஸ்தான் சார்பில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியா தனது முதல் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி தெம்பான நிலையில் உள்ளது. அதேசமயம், பாகிஸ்தான் தான் சந்தித்த முதல் போட்டியிலேயே நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்து வீக்கான நிலையில் உள்ளது.


இந்த இரு அணிகளும் இன்று துபாயில் நடைபெறும் போட்டியில் நேருக்கு நேர் சந்திக்கவுள்ளன. உலகம் முழுவதும் உள்ள இந்தியா - பாகிஸ்தான் ரசிகர்களிடையே இந்தப் போட்டி பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. போட்டியைக் காண மக்கள் பெரும் ஆர்வத்துடன் உள்ளனர்.




இந்தியா பாகிஸ்தான் இடையிலான இன்றைய முக்கிய போட்டியை தமிழ்நாட்டு மக்கள் நேரடியாக கண்டுக்களிக்க பல்வேறு வகையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் மெரினா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் எலியாட்ஸ் கடற்கரை ஆகியவற்றில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் செய்துள்ளது.


மெரினா கடற்கரையில், விவேகானந்தர் நினைவு இல்லத்திற்கு எதிரில் ஒரு பிரம்மாண்ட எல்இடி திரை அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல பெசன்ட் நகர் எலியாட்ஸ் கடற்கரையில் போலீஸ் பூத் அருகில் எல்இடி திரை அமைக்கப்பட்டு அங்கு நேரடியாக போட்டியை ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் விடுமுறை தினம் என்பதாலும் கடற்கரைக்கு வழக்கமாகவே கூட்டம் வரும் என்பதாலும் போதிய அளவிலான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. போட்டியை நேரில் கண்டு களிப்பதற்காக அதிக அளவில் ரசிகர்கள் கூடுவார்கள் என்பதால் தேவையான முன்னேற்பாடுகளையும் காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது.


இன்று காலை முதலே கடற்கரைக்கு மக்கள் வரத் தொடங்கி விட்டனர். திரைக்கு அருகில் அமர வேண்டும் என்பதற்காக இடம் பிடிக்கவும் ஆர்வம் காட்டுவதை காண முடிந்தது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில் 2026ல் ஆட்சி மாற்றம் வரும்.. பாஜக கூட்டணி குறித்து சொல்ல முடியாது: டாக்டர் ராமதாஸ்!

news

35 புதிய கல்லூரிகள் புதிதாக திறந்தும் ஒரு ஆசிரியர் கூட புதிதாக நியமிக்கவில்லை: அன்புமணி ராமதாஸ்

news

ஜூன் 13,14 மற்றும் 15ம் தேதிகளில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்: வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

தவெக.,வில் இணைந்த அதிமுக, திமுக முன்னாள் எம்எல்ஏ.,க்கள்.. விஜய் தரும் மெசேஜ் என்ன?

news

IRS அதிகாரி அருண்ராஜூக்கு தவெகவில் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் பதவி: தவெக தலைவர் விஜய் அறிவிப்பு

news

Out Of Controlலில் இருக்கும் பாலியல் SIRகளை Control செய்யவது எப்போது?: எடப்பாடி பழனிச்சாமி கேள்வி

news

தவெகவுடன் கூட்டணி குறித்து விஜய்யிடம் தான் கேட்க வேண்டும்... கூட்டணி ஆட்சி வந்தால் நல்லது; பிரேமலதா

news

இன்று வைகாசி விசாகம் 2025 : முருகனுக்கு இந்த நைவேத்தியம் படைத்தால் வாழ்க்கையே மாறும்

news

ராஜமெளலி படத்தில் இணைந்த மாதவன்.. என்ன ரோல் தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்