மெரீனா பீச், பெசன்ட் நகர் பீச்சுக்குப் போனா இந்தியா பாகிஸ்தான் போட்டியை நேரில் கண்டு களிக்கலாம்!

Feb 23, 2025,10:25 AM IST

சென்னை: இந்தியா பாகிஸ்தான் இடையிலான இன்றைய சாம்பியன்ஸ் டிராபி போட்டியை நேரில் கண்டு களிக்க ஒரு சூப்பர் ஏற்பாட்டை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் செய்துள்ளது.


பாகிஸ்தான் சார்பில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியா தனது முதல் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி தெம்பான நிலையில் உள்ளது. அதேசமயம், பாகிஸ்தான் தான் சந்தித்த முதல் போட்டியிலேயே நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்து வீக்கான நிலையில் உள்ளது.


இந்த இரு அணிகளும் இன்று துபாயில் நடைபெறும் போட்டியில் நேருக்கு நேர் சந்திக்கவுள்ளன. உலகம் முழுவதும் உள்ள இந்தியா - பாகிஸ்தான் ரசிகர்களிடையே இந்தப் போட்டி பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. போட்டியைக் காண மக்கள் பெரும் ஆர்வத்துடன் உள்ளனர்.




இந்தியா பாகிஸ்தான் இடையிலான இன்றைய முக்கிய போட்டியை தமிழ்நாட்டு மக்கள் நேரடியாக கண்டுக்களிக்க பல்வேறு வகையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் மெரினா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் எலியாட்ஸ் கடற்கரை ஆகியவற்றில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் செய்துள்ளது.


மெரினா கடற்கரையில், விவேகானந்தர் நினைவு இல்லத்திற்கு எதிரில் ஒரு பிரம்மாண்ட எல்இடி திரை அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல பெசன்ட் நகர் எலியாட்ஸ் கடற்கரையில் போலீஸ் பூத் அருகில் எல்இடி திரை அமைக்கப்பட்டு அங்கு நேரடியாக போட்டியை ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் விடுமுறை தினம் என்பதாலும் கடற்கரைக்கு வழக்கமாகவே கூட்டம் வரும் என்பதாலும் போதிய அளவிலான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. போட்டியை நேரில் கண்டு களிப்பதற்காக அதிக அளவில் ரசிகர்கள் கூடுவார்கள் என்பதால் தேவையான முன்னேற்பாடுகளையும் காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது.


இன்று காலை முதலே கடற்கரைக்கு மக்கள் வரத் தொடங்கி விட்டனர். திரைக்கு அருகில் அமர வேண்டும் என்பதற்காக இடம் பிடிக்கவும் ஆர்வம் காட்டுவதை காண முடிந்தது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

குதிரைவாலி அரிசி-பாசி பருப்பு பொங்கல் .. மா இஞ்சி மல்லித்தழை சட்னி சேர்த்து சாப்பிட்டால் சூப்பரப்பு!

news

திமுகவில் இருப்பவர்கள் சிறைக்கு அஞ்சாத சிங்கங்கள் : அமைச்சர் சேகர்பாபு

news

தொகுதி மறுசீரமைப்பு விழிப்புணர்வு தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

பிரபல இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ், சைந்தவி தம்பதி.. ஓரே காரில் வந்து பரஸ்பர விவாகரத்து மனு தாக்கல்

news

பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள..துணைவேந்தர் பணியிடங்களை நிரப்புக.. டாக்டர் ராமதாஸ் கோரிக்கை!

news

கோயம்பேட்டில் காய்களின் வரத்து அதிகரிப்பு..முருங்கைக்காய் விலை 10 மடங்கு வீழ்ச்சி.. விவசாயிகள் கவலை!

news

Today gold rate:தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... என்ன காரணம் தெரியுமா?

news

Mumbai Indians.. என்ன கொடுமை சார் இது.. 13 வருஷமா இப்படியே நடந்திட்டிருந்தா எப்படி சார்!

news

தல, தல தான்... இளம் வீரர்களை மனம் திறந்து பாராட்டும் தோனி... ரசிகர்களிடம் குவியும் வாழ்த்து

அதிகம் பார்க்கும் செய்திகள்