ஆரூத்ரா மோசடி வழக்கு: நடிகர் ஆர்.கே. சுரேஷிடம் 7 மணி நேரம் துருவித் துருவி விசாரணை..!

Dec 12, 2023,06:38 PM IST

சென்னை:  ஆரூத்ரா மோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் இன்று கிட்டத்தட்ட 7 மணி நேரம் தீவிர விசாரணை நடைபெற்றது. 


அதிக  வட்டி தருவதாக கூறி ஆருத்ரா கோல்ட் நிறுவனம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் இருந்து ரூபாய் 2438 கோடி அளவுக்கு வசூலித்து மோசடி செய்தது. முதலீட்டாளர்கள் கொடுத்த புகாரின் பேரில் இந்த மோசடியில் 10த்திற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். 


இந்த மோசடியில் நடிகரும், தயாரிப்பாளரும், பாஜக நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவரது வங்கி கணக்கிற்கு பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடத்துவதற்காக குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் ஆர்.கே.சுரேஷ் ஆஜராகவில்லை.  அவர் துபாயில் இருப்பதாக கூறப்பட்டது.




இதனைத் தொடர்ந்து அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் ஆர்.கே. சுரேஷ் நேற்று முன் தினம் துபாயில் இருந்து சென்னை திரும்பினார். இதையடுத்து இன்று அவரிடம் விசாரணை நடைபெற்றது. சென்னை பொருளாதார குற்றத் தடுப்பு போலீஸாரிடம் அவர் ஆஜரானார். 


சென்னை அசோக் நகரில் அமைந்துள்ள குற்றப்பிரிவு தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக வந்தார். அவரிடம் கூடுதல் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வேல்முருகன் விசாரணை நடத்தினார். கிட்டத்தட்ட 7 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இப்போதுதான் விசாரணை முடிவடைந்தது. விசாரணைக்குப் பின்னர் ஆர்.கே.சுரேஷ் கூறுகையில், காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தேன். நாளையும் விசாரணைக்கு ஆஜராகவுள்ளேன் என்றார் ஆர்.கே.சுரேஷ்.


முன்னதாக  விசாரணைக்காக வந்த ஆர்.கே.சுரேஷிடம் தலைமறைவாக இருந்தது ஏன் என்று செய்தியாளர்கள் கேட்டபோது, நான் தலைமறைவாகிவிட்டேனா...  எல்லாம் இங்கே இருக்கும்போது நான் ஏன் தலைமறைவாக வேண்டும். வந்து பேசுகிறேன் என்று கூறி விசாரணைக்கு சென்றார். 

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்