சென்னை: ஆரூத்ரா மோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் இன்று கிட்டத்தட்ட 7 மணி நேரம் தீவிர விசாரணை நடைபெற்றது.
அதிக வட்டி தருவதாக கூறி ஆருத்ரா கோல்ட் நிறுவனம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் இருந்து ரூபாய் 2438 கோடி அளவுக்கு வசூலித்து மோசடி செய்தது. முதலீட்டாளர்கள் கொடுத்த புகாரின் பேரில் இந்த மோசடியில் 10த்திற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த மோசடியில் நடிகரும், தயாரிப்பாளரும், பாஜக நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவரது வங்கி கணக்கிற்கு பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடத்துவதற்காக குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் ஆர்.கே.சுரேஷ் ஆஜராகவில்லை. அவர் துபாயில் இருப்பதாக கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் ஆர்.கே. சுரேஷ் நேற்று முன் தினம் துபாயில் இருந்து சென்னை திரும்பினார். இதையடுத்து இன்று அவரிடம் விசாரணை நடைபெற்றது. சென்னை பொருளாதார குற்றத் தடுப்பு போலீஸாரிடம் அவர் ஆஜரானார்.
சென்னை அசோக் நகரில் அமைந்துள்ள குற்றப்பிரிவு தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக வந்தார். அவரிடம் கூடுதல் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வேல்முருகன் விசாரணை நடத்தினார். கிட்டத்தட்ட 7 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இப்போதுதான் விசாரணை முடிவடைந்தது. விசாரணைக்குப் பின்னர் ஆர்.கே.சுரேஷ் கூறுகையில், காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தேன். நாளையும் விசாரணைக்கு ஆஜராகவுள்ளேன் என்றார் ஆர்.கே.சுரேஷ்.
முன்னதாக விசாரணைக்காக வந்த ஆர்.கே.சுரேஷிடம் தலைமறைவாக இருந்தது ஏன் என்று செய்தியாளர்கள் கேட்டபோது, நான் தலைமறைவாகிவிட்டேனா... எல்லாம் இங்கே இருக்கும்போது நான் ஏன் தலைமறைவாக வேண்டும். வந்து பேசுகிறேன் என்று கூறி விசாரணைக்கு சென்றார்.
விடைபெற்றார் பாரதிராஜா.. முதல் மரியாதை நாயகனுக்கு ஆயிரக்கணக்கானோர் இறுதி மரியாதை!
அல்லி நகரின் அகல் விளக்கே.. வெள்ளித் திரையின்.. மங்காத ஒளியே!
கரூரில் கூட்ட நெரிசல் வழக்கு:மீண்டும் விறுவிறுப்பான சி பி ஐ விசாரணை
தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுகிறாரா? டெல்லியில் தீவிர ஆலோசனை
எம்ஜிஆர்., வழியில்...நாளை கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் முதல்வர் விஜய்
என்னது...முதல்வர் தொகுதியிலேயே குடிநீர் விநியோகம் ரத்தா?
நமது துன்பத்திற்கு நாமே காரணமா?
திமுக கூட்டணியில் சி.பி.ஐ. நீடிக்கும் சூழல் இப்போது இல்லை.. மு.வீரபாண்டியன் அறிவிப்பு
ஹார்மோஸ் நீரிணை முற்றிலும் மூடல்: ஈரான் ராணுவம் அதிரடி அறிவிப்பு
{{comments.comment}}