சென்னை: ஆரூத்ரா மோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் இன்று கிட்டத்தட்ட 7 மணி நேரம் தீவிர விசாரணை நடைபெற்றது.
அதிக வட்டி தருவதாக கூறி ஆருத்ரா கோல்ட் நிறுவனம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் இருந்து ரூபாய் 2438 கோடி அளவுக்கு வசூலித்து மோசடி செய்தது. முதலீட்டாளர்கள் கொடுத்த புகாரின் பேரில் இந்த மோசடியில் 10த்திற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த மோசடியில் நடிகரும், தயாரிப்பாளரும், பாஜக நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவரது வங்கி கணக்கிற்கு பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடத்துவதற்காக குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் ஆர்.கே.சுரேஷ் ஆஜராகவில்லை. அவர் துபாயில் இருப்பதாக கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் ஆர்.கே. சுரேஷ் நேற்று முன் தினம் துபாயில் இருந்து சென்னை திரும்பினார். இதையடுத்து இன்று அவரிடம் விசாரணை நடைபெற்றது. சென்னை பொருளாதார குற்றத் தடுப்பு போலீஸாரிடம் அவர் ஆஜரானார்.
சென்னை அசோக் நகரில் அமைந்துள்ள குற்றப்பிரிவு தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக வந்தார். அவரிடம் கூடுதல் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வேல்முருகன் விசாரணை நடத்தினார். கிட்டத்தட்ட 7 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இப்போதுதான் விசாரணை முடிவடைந்தது. விசாரணைக்குப் பின்னர் ஆர்.கே.சுரேஷ் கூறுகையில், காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தேன். நாளையும் விசாரணைக்கு ஆஜராகவுள்ளேன் என்றார் ஆர்.கே.சுரேஷ்.
முன்னதாக விசாரணைக்காக வந்த ஆர்.கே.சுரேஷிடம் தலைமறைவாக இருந்தது ஏன் என்று செய்தியாளர்கள் கேட்டபோது, நான் தலைமறைவாகிவிட்டேனா... எல்லாம் இங்கே இருக்கும்போது நான் ஏன் தலைமறைவாக வேண்டும். வந்து பேசுகிறேன் என்று கூறி விசாரணைக்கு சென்றார்.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}