சென்னை: ஆரூத்ரா மோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் இன்று கிட்டத்தட்ட 7 மணி நேரம் தீவிர விசாரணை நடைபெற்றது.
அதிக வட்டி தருவதாக கூறி ஆருத்ரா கோல்ட் நிறுவனம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் இருந்து ரூபாய் 2438 கோடி அளவுக்கு வசூலித்து மோசடி செய்தது. முதலீட்டாளர்கள் கொடுத்த புகாரின் பேரில் இந்த மோசடியில் 10த்திற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த மோசடியில் நடிகரும், தயாரிப்பாளரும், பாஜக நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவரது வங்கி கணக்கிற்கு பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடத்துவதற்காக குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் ஆர்.கே.சுரேஷ் ஆஜராகவில்லை. அவர் துபாயில் இருப்பதாக கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் ஆர்.கே. சுரேஷ் நேற்று முன் தினம் துபாயில் இருந்து சென்னை திரும்பினார். இதையடுத்து இன்று அவரிடம் விசாரணை நடைபெற்றது. சென்னை பொருளாதார குற்றத் தடுப்பு போலீஸாரிடம் அவர் ஆஜரானார்.
சென்னை அசோக் நகரில் அமைந்துள்ள குற்றப்பிரிவு தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக வந்தார். அவரிடம் கூடுதல் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வேல்முருகன் விசாரணை நடத்தினார். கிட்டத்தட்ட 7 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இப்போதுதான் விசாரணை முடிவடைந்தது. விசாரணைக்குப் பின்னர் ஆர்.கே.சுரேஷ் கூறுகையில், காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தேன். நாளையும் விசாரணைக்கு ஆஜராகவுள்ளேன் என்றார் ஆர்.கே.சுரேஷ்.
முன்னதாக விசாரணைக்காக வந்த ஆர்.கே.சுரேஷிடம் தலைமறைவாக இருந்தது ஏன் என்று செய்தியாளர்கள் கேட்டபோது, நான் தலைமறைவாகிவிட்டேனா... எல்லாம் இங்கே இருக்கும்போது நான் ஏன் தலைமறைவாக வேண்டும். வந்து பேசுகிறேன் என்று கூறி விசாரணைக்கு சென்றார்.
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}