சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் ஜூலை 7ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சமீப காலமாகவே பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் அவ்வப்போது மழை பொழிந்து வெப்பத்தை தடுத்து வருகிறது. இந்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். இந்நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில்,
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை ஜூலை 2ஆம் தேதி முதல் ஜூலை 7ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
திங்கட்கிழமை காலை வரை பதிவான மழை அளவு

விண்ட் வொர்த் எஸ்டேட், வூட் பிரையர் எஸ்டேட், அவலாஞ்சி, செருமுள்ளி ஆகிய நீலகிரியின் பலெவேறு பகுதிகளில் தலா 4 சென்டிமீட்டரிலும், கோயமுத்தூர், நாமக்கல் பகுதிகளில் தலா 3 சென்டி மீட்டரிலும், திருவண்ணாமலை, ஈரோடு, வேலூர், காரைக்கால், சேலம், திருவள்ளூர், மயிலாடுதுறை, அரியலூர், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், தேனி, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் குறிப்பிட்ட அளவு மழை பதிவாகியுள்ளது.
வெப்ப நிலை:
தமிழகத்தில் திங்கட்கிழமை தூத்துக்குடியில் 100.04 டிகிரி வெப்பம் பதிவானது. மேலும், செவ்வாய் முதல் வெள்ளிக்கிழமை வரை தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் அதிகபட்ச வெப்பநிலையையும் ஒட்டியும் ஓரிரு இடங்களில் இயல்பை விட மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 27 -28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இதற்கிடையே மன்னர் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகளில் ஜூன் 2 முதல் 5ஆம் தேதி வரை மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் பலத்தை காற்று வீச கூடும் என்பதால், மீனவர்கள் இப்ப பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தூக்கி எறியப்பட்ட என்னை அரவணைத்து, அன்பு செலுத்தியவர் விஜய்: செங்கோட்டையன் ஓபன் டாக்!
முழு மனதோடு என்டிஏ கூட்டணியில் இணைந்திருக்கிறேன்...தினகரன் அதிரடி
கூட்டணி குறித்து தற்போது வரை பாஜகவிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லை: பிரேமலதா விஜயகாந்த்!
தேஜகூவைத் தேடி அடித்துப் பிடித்து ஓடி வரும் கட்சிகள்.. அடுத்து யாரு தேமுதிகவா?
அதிமுக-பாஜக கூட்டணி ஒரு மூழ்கும் கப்பல்.. அதில் ஏறுவோரும் மூழ்கடிக்கப்படுவார்கள்: செல்வப்பெருந்தகை
கடலோர தமிழகத்தில் நாளை மறுநாள் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!
முதல் பேச்சிலேயே தமிழ்நாட்டைத் தொட்ட பாஜக தலைவர் நிதின் நபின்.. திட்டம் என்ன?
தமிழகப் பதிவுத்துறை முக்கிய அறிவிப்பு: 2 நாட்களுக்கு Citizen Portal இணையதளம் செயல்படாது!
தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி தினகரன்... அன்புடன் வரவேற்ற எடப்பாடி பழனிச்சாமி
{{comments.comment}}