பிப்ரவரி 21ம் தேதி.. சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்.. சிட்டிக்கு என்ன ஸ்பெஷல் காத்திருக்கு?

Feb 14, 2024,06:06 PM IST

சென்னை: 2024-2025ம் ஆண்டிற்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை பிப்., 21ம் தேதி சென்னை மேயர் பிரியா தாக்கல் செய்கிறார். 22ம் தேதி பட்ஜெட் மீதான பொது விவாதம் நடைபெற உள்ளது. 


சென்னை மாநகராட்சி 2023-24 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் மேயர் பிரியா ராஜன் தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து வரி விதிப்பு மற்றும் நிதி நிலை குழு தலைவர் சர்ப ஜெயதாஸ் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் 2023-24 ஆம் ஆண்டின் நிதி ஆண்டின் வருவாய் தலைப்பில் வரவு ரூபாய் 4131.70 கோடியாகவும், வருவாய் செலவினம் ரூபாய் 4466.29 கோடியாகவும், மூலதன வரவு ரூபாய் 3554.50 கோடியாகவும், மூலதன செலவு ரூபாய் 3554.50 கோடியாகவும் இருக்கும் என்று கூறப்பட்டது.


இதன் மூலம் சென்னை மாநகராட்சிக்கு ரூபாய் 334 கோடி நிதி பற்றாக்குறை இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறை 778 கோடியாக இருந்தது. தற்பொழுது 517 கோடியாக உள்ளது. சொத்து வரி உயர்வு காரணமாக சென்னை மாநகராட்சியின் நிதி பற்றாக்குறை குறைந்துள்ளதாக தெரிவித்தனர். கடந்த ஆண்டு இப்படி இருக்க இந்த ஆண்டு எப்படி இருக்குமோ என்று மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.




2024-2025ம் ஆண்டிற்கான சென்னை பட்ஜெட் பிப்., 21ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கான வேலைகள் தற்பொழுது நடந்து வருகின்றன. இந்த பட்ஜெட்டை மேயர் பிரியா தாக்கல் செய்கிறார். இதைத் தொடர்ந்து அடுத்த நாளான 22ம் தேதி பொது பட்ஜெட்  குறித்து விவதாம் நடைபெற உள்ளது.


கடந்த அண்டை போலவே இந்தாண்டும் பட்ஜெட் குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தாண்டு எந்த மாதிரியான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும், புதிய திட்டங்கள் என்னவாக இருக்கும் என்றும் மக்களிடை விவதாம் ஏற்பட்டுள்ளது.


கடந்த பிப்ரவரி 9ம் தேதி  2024-2025ம் ஆண்டிற்கான பட்ஜெட் குறித்து மேயர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.அந்த கூட்டத்தில் எந்தெந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. எது எது நிலுவையில் உள்ளன என்ற மேயர் பிரியா தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் SIR... நவ 2ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நெருங்கும் மோன்தா புயல்.. தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வானிலை மையம் எச்சரிக்கை!

news

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: பலியானவர்களின் குடும்பங்களை சந்தித்து விஜய் ஆறுதல்!

news

மழையினால் சரக்குந்துகளிலேயே முளைத்த 36,000 நெல் மூட்டைகள்..திமுக அரசின் புதிய சாதனை:அன்புமணி ராமதாஸ்

news

பொய்கள் மூலம் திசைதிருப்ப முயற்சிக்க வேண்டாம்..தோல்விக்கு இப்போதே காரணம் தேடுகிறார் முதல்வர்:நயினார்

news

நடித்தாலே நாட்டை ஆளக் கூடிய அனைத்து திறமையும் வந்து விடுகிறது... இது ரொம்ப கொடுமையானது: சீமான்!

news

கல்வி மறுக்கப்பட்டோர் இன்று உயர் பதவிகளில் இருப்பதற்கு காரணம் திமுக தான் : முதல்வர் முக ஸ்டாலின்!

news

மூடப்படும் நிலைக்குத் தள்ளப்படும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்.. சீமான் கண்டனம்

news

ராகுல்காந்தி என் மீது காட்டும் அன்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அதிகம் பார்க்கும் செய்திகள்