"குடிமகன்களே.. பெரும் குடி மகன்களே"..  3 மாதத்தில் ரூ. 10 கோடி அபராதம் கலெக்ஷன்!

Apr 26, 2023,09:50 AM IST
சென்னை: சென்னை நகரில் கடந்த 3 மாதங்களில் மட்டும் குடித்து விட்டு வாகனம் ஓட்டியவர்களிடமிருந்து ரூ. 10 கோடி அளவுக்கு அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

குடிபோதையில்வாகனம் ஓட்டுவோரை இப்போது வளைத்து வளைத்து சென்னை போலீஸார் பிடித்து அபராதம் போட்டு வருகின்றனர். குடிபோதையில் வாகனம் ஓட்டுவோரால் பல்வேறு விபத்துகள் நடப்பதால் இந்த அதிரடி நடவடிக்கை.



ஜனவரி மாதம் இதுதொடர்பாக சிறப்பு நடவடிக்கையில் சென்னை போக்குவரத்துக் காவல்துறை ஈடுபட்டுள்ளது. கடந்த 3  மாதங்களில் மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டியோரிடமிருந்து ரூ. 10.49 கோடி அளவுக்கு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 10,134 வழக்குகள் தீர்வு காணப்பட்டுள்ளன.

கடந்த வாரம் மட்டும் 788 நிலுவையில் இருந்த வழக்குகள் தீர்வு காணப்பட்டன. ரூ. 81.9 லட்சம் அளவுக்கு  அபராதம் வசூலிக்கப்பட்டது. 

குடித்து விட்டு வாகனம் ஓட்டி பிடிபட்டு அபராதத் தொகையை கட்ட மறுப்போரின் வாகனங்கள், கோர்ட் வாரண்ட் மூலம் ஜப்தி செய்யப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது. இதுவரை இதுபோன்ற அபராதம் கட்ட மறுத்தோரின் வாகனங்களை ஜப்தி செய்ய 371 வாரண்ட்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

குடித்து விட்டு வாகனம்   ஓட்டினால் ரூ. 10,000 அபராதம் கட்ட வேண்டும் என்பது நினைவிருக்கலாம். ஸ்பாட்டிலும் அபராதம் கட்டலாம்.. கையில் காசு இல்லாவிட்டால் கோர்ட்டில் கட்ட வேண்டும் என்பது  குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு.. 452 வாக்குகள் பெற்று வெற்றி

news

தவெக தலைவர் விஜய் சுற்றுப் பயணம்.. சனி, ஞாயிற்றை தேர்வு செய்ய இதுதான் காரணமா?

news

மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

news

செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?

news

மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!

news

Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?

news

பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?

news

நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!

news

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது

அதிகம் பார்க்கும் செய்திகள்