"குடிமகன்களே.. பெரும் குடி மகன்களே"..  3 மாதத்தில் ரூ. 10 கோடி அபராதம் கலெக்ஷன்!

Apr 26, 2023,09:50 AM IST
சென்னை: சென்னை நகரில் கடந்த 3 மாதங்களில் மட்டும் குடித்து விட்டு வாகனம் ஓட்டியவர்களிடமிருந்து ரூ. 10 கோடி அளவுக்கு அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

குடிபோதையில்வாகனம் ஓட்டுவோரை இப்போது வளைத்து வளைத்து சென்னை போலீஸார் பிடித்து அபராதம் போட்டு வருகின்றனர். குடிபோதையில் வாகனம் ஓட்டுவோரால் பல்வேறு விபத்துகள் நடப்பதால் இந்த அதிரடி நடவடிக்கை.



ஜனவரி மாதம் இதுதொடர்பாக சிறப்பு நடவடிக்கையில் சென்னை போக்குவரத்துக் காவல்துறை ஈடுபட்டுள்ளது. கடந்த 3  மாதங்களில் மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டியோரிடமிருந்து ரூ. 10.49 கோடி அளவுக்கு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 10,134 வழக்குகள் தீர்வு காணப்பட்டுள்ளன.

கடந்த வாரம் மட்டும் 788 நிலுவையில் இருந்த வழக்குகள் தீர்வு காணப்பட்டன. ரூ. 81.9 லட்சம் அளவுக்கு  அபராதம் வசூலிக்கப்பட்டது. 

குடித்து விட்டு வாகனம் ஓட்டி பிடிபட்டு அபராதத் தொகையை கட்ட மறுப்போரின் வாகனங்கள், கோர்ட் வாரண்ட் மூலம் ஜப்தி செய்யப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது. இதுவரை இதுபோன்ற அபராதம் கட்ட மறுத்தோரின் வாகனங்களை ஜப்தி செய்ய 371 வாரண்ட்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

குடித்து விட்டு வாகனம்   ஓட்டினால் ரூ. 10,000 அபராதம் கட்ட வேண்டும் என்பது நினைவிருக்கலாம். ஸ்பாட்டிலும் அபராதம் கட்டலாம்.. கையில் காசு இல்லாவிட்டால் கோர்ட்டில் கட்ட வேண்டும் என்பது  குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

news

பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்