5 போக்குவரத்து விதிமீறல்களுக்கு மட்டுமே இனி அபராதம்: சென்னை காவல் ஆணையர் உத்தரவு!

May 21, 2025,06:51 PM IST

சென்னை: சென்னையில் 5 வகையான போக்குவரத்து விதிமீறலுக்கு மட்டுமே இனி அபாரதம் வசூலிக்கப்படும் என்று சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


சாலை விபத்துக்களை தவிர்ப்பதற்காகவே வாகன ஓட்டிகளிடம் போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். அந்த கட்டுப்பாடுகளை மீறி செயல்படும் வாகன ஓட்டிகளிடம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு அபராதம் வசூலித்து வருகின்றனர். ஹெல்மெட் அணியாதது உள்ளிட்ட 25  வகையான போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபாரதாம் வசூலிக்கப்பட்டு வருகிறது. 


இந்த நிலையில், போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளிடம் கெடுபிடியாக அபராதம் வசூலிப்பதாக புகார் வந்த நிலையில், சென்னை மாநகரக் காவல் ஆணையர் அருண் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன்படி,




1. தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுதல்


2. இருவருக்கு மேல் இரு  சக்கர வாகனத்தில்  பயணிப்பது


3. போக்குவரத்து தடை செய்யப்பட்ட நோ என்ட்ரி பகுதியில் வானம் ஓட்டுதல்


4. அதிவேகமா வாகனத்தை இயக்குதல்


5. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் 


மேலும், கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஜனநாயகன் பட விவகாரம்...சினிமா, அரசியல் துறையில் குவியும் ஆதரவுகள்

news

கூட்டணி அமைப்பதற்கே திண்டாட்டம்...அதிமுக கூட்டணி பற்றி திருமாவளவன் கிண்டல்

news

விஜய்யின் ஜனநாயகன் படம் அவரது அரசியலுக்கு உதவுமா? மக்கள் ஆதரவை பெருக்குமா?

news

தமிழக சட்டசபை தேர்தல் 2026...நாம் தமிழர் கட்சிக்கு டஃப் கொடுக்க போவது யார்?

news

இந்தியாவுக்குப் புதிய சிக்கலா? 500% வரி விதிப்பு மசோதாவிற்கு டிரம்ப் ஆதரவு

news

சாலையோர பூக்கள்....!

news

கட்சியிலேயே இல்லாத அன்புமணி எப்படி கூட்டணி பேச முடியும்?...பாமக ராமதாஸ் அதிரடி

news

ஓபிஎஸ்.,க்கு அதிமுகவிலும் இடமில்லை... கூட்டணியிலும் இடமில்லை... இபிஎஸ் திட்டவட்டம்

news

இன்றைய தங்கம் விலை ஏற்றமா?.. இறக்கமா?.. இதோ முழு விபரம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்