5 போக்குவரத்து விதிமீறல்களுக்கு மட்டுமே இனி அபராதம்: சென்னை காவல் ஆணையர் உத்தரவு!

May 21, 2025,06:51 PM IST

சென்னை: சென்னையில் 5 வகையான போக்குவரத்து விதிமீறலுக்கு மட்டுமே இனி அபாரதம் வசூலிக்கப்படும் என்று சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


சாலை விபத்துக்களை தவிர்ப்பதற்காகவே வாகன ஓட்டிகளிடம் போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். அந்த கட்டுப்பாடுகளை மீறி செயல்படும் வாகன ஓட்டிகளிடம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு அபராதம் வசூலித்து வருகின்றனர். ஹெல்மெட் அணியாதது உள்ளிட்ட 25  வகையான போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபாரதாம் வசூலிக்கப்பட்டு வருகிறது. 


இந்த நிலையில், போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளிடம் கெடுபிடியாக அபராதம் வசூலிப்பதாக புகார் வந்த நிலையில், சென்னை மாநகரக் காவல் ஆணையர் அருண் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன்படி,




1. தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுதல்


2. இருவருக்கு மேல் இரு  சக்கர வாகனத்தில்  பயணிப்பது


3. போக்குவரத்து தடை செய்யப்பட்ட நோ என்ட்ரி பகுதியில் வானம் ஓட்டுதல்


4. அதிவேகமா வாகனத்தை இயக்குதல்


5. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் 


மேலும், கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தீஞ்ச சக்தியிலிருந்து ஆட்களை இழுக்கும் நீங்க என்ன.. காஞ்சு போன சக்தியா? .. மு.க. ஸ்டாலின் தாக்கு

news

KG முதல் PG வரை இலவச கல்வி.. ஒடிசா அதிரடியை எல்லோரும் கடைப்பிடிக்கலாமே?

news

தவெக.,வை நோக்கி படையெடுக்கும் மாற்று கட்சியினர்... பலமா? பலவீனமா?

news

டீசல் விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு: மத்திய அரசு அதிரடி உத்தரவு!

news

Vijay Birthday: முதல்வராக முதல் முறையாக.. 52வது பிறந்த நாளைக் கொண்டாடத் தயாராகும் விஜய்

news

அதிமுக தேர்தல் தோல்வி எதிரொலி: மாவட்ட வாரியாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

news

பாஜவிலிருந்து விலகி தவெகவில் இணைகிறார் முன்னாள் எம்.எல்.ஏ விஜயதரணி

news

லியோனல் மெஸ்ஸியின் உலகக் கோப்பை வேட்டை எப்போது தொடங்குகிறது?

news

Seven Days, Twenty Kilometres.. மற்றும் மறக்க முடியாத சில நினைவுகள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்