சென்னை: மாநிலத்தில் சுய ஆட்சி வேண்டும், இந்தி திணிப்பை கைவிட வேண்டும், இருமொழி கொள்கையை கொண்டு வர வேண்டும் இது தான் எனது பிறந்த நாள் வாழ்த்து செய்தி என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 72வது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார்.இவரின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோர்களின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் நினைவிடத்தில் பணியாற்றக்கூடிய ஊழியர்களுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து சென்னை வேப்பேரியில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து கோபாலபுரம், சிஐடி காலனிக்கு சென்ற முதல்வர் மு.க ஸ்டாலின், முத்தமிழறிஞர் கலைஞர் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.

அதன்பின்னர் தொண்டர்களை சந்தித்த முதல்வர்மு.க ஸ்டாலின், மாநிலத்தில் சுய ஆட்சி வேண்டும், இந்தி திணிப்பை கைவிட வேண்டும், இருமொழி கொள்கையை கொண்டு வர வேண்டும் இது தான் எனது பிறந்த நாள் வாழ்த்து செய்தி என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அதன்பின்னர் நீண்ட வரிசையில் காத்திருந்த கழக தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களின் வாழ்த்துக்களை பெற்றார்.
அதற்கு முன்னதாக, தமிழ்நாட்டின் நலனையும், எதிர்காலத்தையும், யாருக்காகவும், எதற்காகவும் விட்டுத்தர மாட்டோம். தமிழ்நாட்டின் உரிமைக்காக ஒன்றுபட்டு போராடுவோம்! தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என கழக தொண்டர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். மாநிலத்தின் உரிமையை பெற வேண்டும் என்பது தான் என்னுடைய கவலை என்றும் தெரிவித்துள்ளார்.
டெல்லியிலும், சுற்று வட்டாரத்திலும்.. விடிஞ்சு வந்து பார்த்தா.. ஒரே smog.. இயல்பு நிலை பாதிப்பு
இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்
திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை
டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி
டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!
தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!
இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?
{{comments.comment}}