இந்தி திணிப்பை கைவிட வேண்டும்.. மக்களுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் செய்தி

Mar 01, 2025,08:44 PM IST

சென்னை: மாநிலத்தில் சுய ஆட்சி வேண்டும், இந்தி திணிப்பை கைவிட வேண்டும், இருமொழி கொள்கையை கொண்டு வர வேண்டும் இது தான் எனது பிறந்த நாள் வாழ்த்து செய்தி என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 72வது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார்.இவரின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோர்களின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் நினைவிடத்தில் பணியாற்றக்கூடிய ஊழியர்களுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


 அதனைத் தொடர்ந்து சென்னை வேப்பேரியில் உள்ள  தந்தை பெரியார் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து கோபாலபுரம், சிஐடி காலனிக்கு சென்ற முதல்வர் மு.க ஸ்டாலின், முத்தமிழறிஞர் கலைஞர் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.




அதன்பின்னர் தொண்டர்களை சந்தித்த முதல்வர்மு.க ஸ்டாலின், மாநிலத்தில் சுய ஆட்சி வேண்டும், இந்தி திணிப்பை கைவிட வேண்டும், இருமொழி கொள்கையை கொண்டு வர வேண்டும் இது தான் எனது பிறந்த நாள் வாழ்த்து செய்தி என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அதன்பின்னர் நீண்ட வரிசையில் காத்திருந்த கழக தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களின் வாழ்த்துக்களை பெற்றார்.


அதற்கு முன்னதாக, தமிழ்நாட்டின் நலனையும், எதிர்காலத்தையும், யாருக்காகவும், எதற்காகவும் விட்டுத்தர மாட்டோம். தமிழ்நாட்டின் உரிமைக்காக ஒன்றுபட்டு போராடுவோம்! தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என கழக தொண்டர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். மாநிலத்தின் உரிமையை பெற வேண்டும் என்பது தான் என்னுடைய கவலை என்றும்  தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Summer to peak in Tamil Nadu: வெப்பம் அதிகரிக்கும் அபாயம்.. டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு

news

1971 சாதனையை முறியடிக்க இலக்கு: கூட்டணி கட்சிகளுக்கு 'செக்' வைக்கும் திமுக

news

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கண்டனத் தீர்மானம்

news

அரசியல் அலசல்.. அதிமுகவில் காளியம்மாள்.. நல்ல பேச்சாளரை நழுவ விட்ட திமுக, தவெக!

news

சித்ரா பௌர்ணமி நாளில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் இந்திரன்.. அன்னை தடாதகை - 3

news

தைப்பொங்கல்.. காலங்கள் கடந்தும் கரையாத நினைவலைகள்!

news

பேச்சை விட நேர்மையான உணர்வுகளுக்கே முக்கியத்துவம்!

news

என் உடலைப் பேணத் தொடங்கியபோது.. I started taking care of my body when...

news

பழுக்கக் காய்ச்சிய இரும்பை சுத்தியால் அடித்தால்.. The hammer hits the heated steel!

அதிகம் பார்க்கும் செய்திகள்