சென்னை: சென்னையில் கட்டணமில்லா குடிநீர் வழங்கும் ஏடிஎம் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதிகளவில் மக்கள் கூடும் இடங்களில் கட்டணமில்லா குடிநீர் வழங்கும் தானியங்கி இயந்திரங்களின் சேவையை மெரினாவில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த தனியாங்கி இயந்திரம் மூலம் ஒரு லிட்டர் மற்றும் 150 மில்லி குவளை அளவுகளில் நீரினை பெற்றுக்கொள்ளலாம். இந்த இயந்திர தொட்டியில் தண்ணீர் தீர்ந்து போனால் குடிநீர் வாரியத்துக்கு IOT தொழில்நுட்பம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக தண்ணீர் நிரப்பப்படும்.
இந்த திட்டம் முதல் கட்டமாக 50 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, அடையாறு, கோடம்பாக்கம், வளசரவாக்கம் உள்ளிட்ட மண்டலங்களில் குடிநீர் வழங்கும் தானியங்கி கருவி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் தினசரி 1300 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மக்கள் சுத்தமசன குடிநீர் பெறலாம். கடற்கரை, பேருந்து நிலையம், பூங்கா, பள்ளி, கல்லூரி பகுதிகள் மார்க்கெட் போன்ற இடங்களில் இந்த எடிஎம்கள் நிறுவப்பட உள்ளன. ஒரு மணி நேரத்திற்கு 250 பேருக்கு குடிநீர் வழங்கும் திறன் கொண்ட டாங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஏடிஎம்களை கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். பராமரிப்பு பணிக்காக தனி குழுவும் அமைக்கப்படும். சென்னை குடிநீர் வாரியம் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.
தர்மம் வெல்ல வேண்டும்... அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கியதில் மகிழ்ச்சியே: செங்கோட்டையன்!
செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடியால் பரபரப்பு.. அடுத்து என்ன நடக்கும்?
செங்கோட்டையன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்: எடப்பாடி பழனிச்சாமி
திருச்சியில் இருந்து... தளபதி 2026... விஜய் அரசியல் பிரச்சார சுற்றுப்பயணம் தொடக்கம்!
Chennai Metro.. மெட்ரோ ரயில் பயணிகளே.. இந்த முக்கியமான மாற்றத்தை நோட் பண்ணிக்கங்க!
பாஜக உட்கட்சி பூசல் தான் அதிமுக.,வில் ஏற்படும் குழப்பத்திற்கு காரணமா?
கோபியில் கொதித்த செங்கோட்டையன்.. திண்டுக்கல்லில் கொந்தளித்த இபிஎஸ்... பரபரப்பில் அதிமுக
பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற நயினார் நாகேந்திரனே காரணம்.. டிடிவி தினகரன் ஆவேசம்
மலைக்கோட்டை, பாண்டியன், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள்.. தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.. நவ. 10 வரை
{{comments.comment}}