சென்னை: சென்னையில் கட்டணமில்லா குடிநீர் வழங்கும் ஏடிஎம் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதிகளவில் மக்கள் கூடும் இடங்களில் கட்டணமில்லா குடிநீர் வழங்கும் தானியங்கி இயந்திரங்களின் சேவையை மெரினாவில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த தனியாங்கி இயந்திரம் மூலம் ஒரு லிட்டர் மற்றும் 150 மில்லி குவளை அளவுகளில் நீரினை பெற்றுக்கொள்ளலாம். இந்த இயந்திர தொட்டியில் தண்ணீர் தீர்ந்து போனால் குடிநீர் வாரியத்துக்கு IOT தொழில்நுட்பம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக தண்ணீர் நிரப்பப்படும்.
இந்த திட்டம் முதல் கட்டமாக 50 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, அடையாறு, கோடம்பாக்கம், வளசரவாக்கம் உள்ளிட்ட மண்டலங்களில் குடிநீர் வழங்கும் தானியங்கி கருவி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் தினசரி 1300 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மக்கள் சுத்தமசன குடிநீர் பெறலாம். கடற்கரை, பேருந்து நிலையம், பூங்கா, பள்ளி, கல்லூரி பகுதிகள் மார்க்கெட் போன்ற இடங்களில் இந்த எடிஎம்கள் நிறுவப்பட உள்ளன. ஒரு மணி நேரத்திற்கு 250 பேருக்கு குடிநீர் வழங்கும் திறன் கொண்ட டாங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஏடிஎம்களை கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். பராமரிப்பு பணிக்காக தனி குழுவும் அமைக்கப்படும். சென்னை குடிநீர் வாரியம் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}