சென்னை: நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே 24ம் தேதி டெல்லி பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
கோடை காலத்தில் ஊட்டி தாவரவியல் பூங்காவில் ஆண்டு தோறும் மலர் கண்காட்சி நடைபெற்று வருவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டிற்கான 127வது மலர் கண்காட்சி நேற்று தொடங்கியது. கடந்த 12ம் தேதி 5 நாட்கள் சுற்றுப்பயணமாக ஊட்டி சென்ற முதல்வர் இந்த மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ரூ.24, 60,000 செலவில் பெரணி இல்லம் புதுப்பிக்கப்பட்டிருந்தது. அதனையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதுமட்டுமின்றி பல்வேறு கலை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்ட பின்னர் 5 நாள் சுற்றுப்பயணம் முடிவுற்று இன்று சென்னை புறப்படுகிறார் முதல்வர்.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த மாதம் 24ம் தேதி டெல்லி புறப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. மே 24ம் தேதி டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற உள்ளநிலையில், அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பின் படி நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
திருப்புவனம் அஜித்குமார் மரணம்: நாளை மறுநாள் தவெக கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்புவனம் இளைஞர் மரண வழக்கு: தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்: நீதிபதிகள்
Thiruppuvanam Custodial Death: அஜித்குமார் மரணம்.. எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்!
ஜூலை பிறந்தாச்சு.. இன்று முதல் இந்த மாற்றங்கள் அமலுக்கும் வந்தாச்சு.. நோட் பண்ணிக்கங்க!
தவெகவின் யானை சின்னத்தை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த வழக்கு... ஜூலை 3ல் தீர்ப்பு
வயசு 22தான்.. ஸ்டூண்ட்டாக நடித்த டுபாக்கூர் இளைஞர்.. 22 மெயில்களை கிரியேட் செய்து அதிரடி!
வலப்புறத்தில் அம்பாள்.. நுரையால் உருவான விநாயகர்.. திருவலஞ்சுழிநாதர் திருக்கோவில் அற்புதம்!
சிரித்தபடி சில்லறை தரும் கண்டக்டர்.. ஆச்சரியப்படுத்திய காரைக்குடி பஸ் அனுபவம்!
{{comments.comment}}