சென்னையில் பிரதமர் மோடி.. சிரிக்க சிரிக்க வரவேற்ற மு.க.ஸ்டாலின்.. கலகல நிமிடங்கள்

Apr 08, 2023,03:34 PM IST
சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை பயணத்தின்போது அவருடந் முதல்வர் மு.க.ஸ்டாலின் படு இயல்பாக, சிரித்தபடி வரவேற்று, கையைப் பிடித்து பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

சென்னை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய முனையத் திறப்பு, சென்னை - கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் தொடக்கம், மதுரையில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பாலத் திறப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் சென்னை வந்தார்.

சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை, ஆளுநர் ஆர். என். ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்றனர். 



புதிய விமான முனையத் தொடக்க விழாவின்போது பிரதமர் மோடியுடன், முதல்வர் மு.க.ஸ்டாலின் சிரித்த முகத்துடன் படு இயல்பாக பேசியபடி காணப்பட்டார். பிரதமர் ஏதோ கூற, பதிலுக்கு அவரது கையைப் பிடித்து ஸ்டாலின் சிரித்த காட்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

ஆளுநர் ரவி, முதல்வர் இருந்த பக்கம் வரவில்லை. அதேசமயம், முதல்வர் அருகே, மத்திய இணை அமைச்சர் முருகன் காணப்பட்டார். முதல்வரும், பிரதமரும் சிரித்த முகத்துடன், சகஜமாக பேசிப் பழகியபடி காணப்பட்டதுதான் இன்றைய ஸ்பெஷல் ஆகும்.

விமான நிலைய நிகழ்ச்சி முடிவடைந்ததும் பிரதமர் மோடி, ஹெலிகாப்டர் மூலம் அடையாறு ஐஎன்எஸ் கடற்படைத் தளத்துக்குச் சென்றார். அங்கிருந்து அவர் சென்டிரல் ரயில் நிலையத்துக்குப் போய் அங்கு வந்தேபாரத் எக்ஸ்பில் ரயிலை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். வழியெங்கும் அவருக்கு சாலைகளின் இரு மருங்கிலும் பாஜகவினர் திரண்டு நின்று மலர் தூவியும், பாரத் மாதா கி ஜெய் என்று கோஷமிட்டும், பாஜக கொடிகளை அசைத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சமீபத்திய செய்திகள்

news

தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்