ஷாங்காய்: நவீனமான ஏடிஎம் மெஷின் சீனாவில் அறிமுகமாகியுள்ளது. சீனாவின் ஷாங்காய் நகரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த தங்க ஏ.டி.எம் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்து வருகிறது.
மக்களின் சிரமத்தை தவிர்க்க, வங்கிகளில் நேரடியாக சென்று பணம் எடுக்கும் முறை மாற்றப்பட்டு தற்போது ஏடிஎம்களின் மூலம் பணத்தைப் பெற்ற முடிகிறது . ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் வசதி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஏனெனில் நாம் எங்கு சென்றாலும் அவசர காலங்களில் தேவைக்கேற்ப பணத்தை எடுத்துக் கொள்ள ஏதுவாக வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இப்போது அதுவும் மாறி யுபிஐ வந்து விட்டது. கணக்கில் காசு இருந்தால் போதும், கையில் இருக்க வேண்டிய அவசியமில்லை என்ற நிலைக்கு நாம் வந்து விட்டோம்.
அதே சமயத்தில் ஏழை எளிய மக்கள் தங்கள் கையில் போதுமான இருப்பு பணம் இல்லை என்றால் தங்க நகைகளை அடமானம் வைத்தோ அல்லது நகைகளை விற்றோ பணத்தை பெறுகின்றனர். இதற்கு நேரடியாக வங்கிகளை மட்டுமே அனுகி பணத்தைப் பெற முடிகிறது. ஏனெனில் தங்க நகைகள் எவ்வளவு தூய்மையானது என்பதை கணக்கிட்டு அதன்பிறகே பணத்தைப் பெற முடியும்.
ஆனால் சீனா இந்த நடைமுறையை முற்றிலும் மாற்றி உள்ளது. வங்கிகளில் சென்று தங்க நகையை விற்று பணம் பெறப்படும் முறையை மாற்றி, அதற்கு பதிலாக 30 நிமிடங்களில் தங்கத்தை பணமாக மாற்றும் கோல்டு ஏடிஎம் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது சீனா.
ஷாங்காயில் அமைக்கப்பட்டுள்ள இந்த தங்க ஏடிஎம்மில் தங்க நகைகளை கொடுத்தவுடன், அதன் அளவு தூய்மை மற்றும் எடையை சரிபார்த்து, அதற்குரிய தொகையை அவர்களின் வங்கிக் கணக்கிற்கு மாற்றுகிறது. இதில் மூன்று கிராம் முதல் ஒரு கிலோ எடை வரை கொண்ட தங்க நகையை உருக்கி பணமாகப் பெற முடியும்.
சீனாவின் கிங்ஹுட் குழுமத்தால் நடத்தப்படும் இந்த ஏடிஎம், குறைந்தது 50% தூய்மை கொண்ட தங்கப் பொருட்களை ஏற்றுக்கொள்கிறது. இது தங்கத்தை உருக்கி, அதன் தரம் மற்றும் எடையைச் சரிபார்த்து, பின்னர் அதற்குச் சமமான மதிப்பை 30 நிமிடங்களுக்குள் விற்பனையாளரின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக மாற்றுகிறது. இதற்கு எந்த ஆவணங்களும் அல்லது அடையாள அட்டையும் தேவையில்லை.
ஆனால் நம்ம ஊர்ல இதைக் கொண்டாந்து வச்சா ஒரு சிக்கல் வரும்.. அதாவது நகைத் திருடர்கள் ஜாலியாக கொண்டு வந்து இங்கு நகையை உருக்கி காசாக்கி விட்டு எஸ்கேப் ஆகி விட வாய்ப்பிருக்கு.. ஸோ, நமக்கு இது இப்போதைக்கு செட் ஆகாது!
71வது தேசிய திரைப்பட விருதுகள்.. ஷாருக் கான் சிறந்த நடிகர்.. எம்.எஸ். பாஸ்கர் சிறந்த துணை நடிகர்!
10 ஆண்டுகளில் முதல் முறையாக... சென்னை மெட்ரோ ரயிலில்... ஜூலை மாதத்தில் 1 கோடி பேர் பயணம்!
சொந்த ஊர் கொண்டு செல்லப்பட்ட கவினின் உடல்... நேரில் அஞ்சலி செலுத்த வந்த அரசியல் தலைவர்கள்!
எடப்பாடி பழனிச்சாமி பிடிவாதத்தால்.. ஓபிஎஸ்ஸை இழக்கும் பாஜக.. ஆட்டம் காணுகிறதா கூட்டணி?
6 மாவட்டங்களில் இன்றும்... 8 மாவட்டங்களில் நாளையும்... கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை மையம்!
கோச்சுக்காதீங்க.. சமாதான முயற்சியில் பாஜக...முடிவில் உறுதியாக இருக்கும் ஓபிஎஸ்.. அடுத்தது என்ன?
முதல்வரை சந்திக்க நான் நேரம் கேட்டேனா.. யார் சொன்னது?.. டாக்டர் ராமதாஸ் மறுப்பு
பாஜக.,வுடன் கூட்டணியா?.. வாய்ப்பில்ல ராஜா.. வாய்ப்பே இல்லை.. வைகோ பளிச் பதில்!
எடப்பாடி பழனிச்சாமி மனு தள்ளுபடி.. அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு ஆபத்தா?
{{comments.comment}}