நெல்லை: சென்னை வானிலை ஆய்வு மையத்தை மூடிவிடலாம் என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. கனமழையினால் அங்குள்ள மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை ஒய்ந்த பின்னரும். மக்களின் வாழ்க்கை முறை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பாமல் உள்ளது.
இந்நிலையில், நெல்லையில் வெள்ள பாதித்த பகுதிகளை பார்வையிட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

சென்னையில் உள்ள வானிலை ஆய்வு மையத்தை மூடிவிடலாம். அது தேவையில்லை வேஸ்ட். வானிலை மையம் செய்கிற வேலையை ஐந்தாம் வகுப்பு மாணவன் செய்வான். சில மாவட்டங்களில் கன மழை பெய்யும். சில இடங்களில் லேசான மழை பெய்யும் என தான் எப்போதும் அறிவிக்கிறார்கள். இது எங்களுக்கு தெரியாதா.
உலகமே நவீன தொழில்நுட்பத்திற்கு மாறி வருகிறது. இங்கு மட்டும் சுதந்திரத்திற்கு முன்பு இருந்த நிலை தான் தொடர்கிறது. மழை எச்சரிக்கை சரிவர அளிக்கவில்லை எனில் சென்னை வானிலை மையம் எதற்கு.
வானிலை ஆய்வு மையத்தை நவீனப்படுத்த வேண்டும்.
காலநிலை மாற்றம் குறித்து நான் தொடர்ந்து குரல் கொடுது்து வருகிறேன். நிவாரண நிதி விவகாரத்தில் மத்திய அரசு அரசியல் பார்க்கக்கூடாது. மத்திய அரசு நிவாரண நிதியை விரைந்து விடுவிக்க வேண்டும். மீட்பு நிவாரண பணிகளை அமைச்சர்கள் விரைவுப்படுத்த வேண்டுமு். ரூ.6000 வெள்ள நிவாரணம் நிதி நிச்சயம் போதாது என்று பாமக தலைவர் அன்பு மணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Summer to peak in Tamil Nadu: வெப்பம் அதிகரிக்கும் அபாயம்.. டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு
1971 சாதனையை முறியடிக்க இலக்கு: கூட்டணி கட்சிகளுக்கு 'செக்' வைக்கும் திமுக
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கண்டனத் தீர்மானம்
அரசியல் அலசல்.. அதிமுகவில் காளியம்மாள்.. நல்ல பேச்சாளரை நழுவ விட்ட திமுக, தவெக!
சித்ரா பௌர்ணமி நாளில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் இந்திரன்.. அன்னை தடாதகை - 3
தைப்பொங்கல்.. காலங்கள் கடந்தும் கரையாத நினைவலைகள்!
பேச்சை விட நேர்மையான உணர்வுகளுக்கே முக்கியத்துவம்!
என் உடலைப் பேணத் தொடங்கியபோது.. I started taking care of my body when...
பழுக்கக் காய்ச்சிய இரும்பை சுத்தியால் அடித்தால்.. The hammer hits the heated steel!
{{comments.comment}}