"கன மழை, மிக கன மழை".. இது எதுக்கு .. வானிலை மையத்தை மூடிவிடலாம் - அன்புமணி ராமதாஸ்

Dec 22, 2023,05:18 PM IST

நெல்லை: சென்னை வானிலை ஆய்வு மையத்தை மூடிவிடலாம் என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.


நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. கனமழையினால் அங்குள்ள மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை ஒய்ந்த பின்னரும். மக்களின் வாழ்க்கை முறை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பாமல் உள்ளது. 


இந்நிலையில்,  நெல்லையில் வெள்ள பாதித்த பகுதிகளை பார்வையிட்ட பாமக   தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,




சென்னையில் உள்ள வானிலை ஆய்வு மையத்தை மூடிவிடலாம். அது தேவையில்லை வேஸ்ட். வானிலை மையம் செய்கிற வேலையை ஐந்தாம் வகுப்பு மாணவன் செய்வான். சில மாவட்டங்களில் கன மழை பெய்யும். சில இடங்களில் லேசான மழை பெய்யும் என தான் எப்போதும் அறிவிக்கிறார்கள். இது எங்களுக்கு தெரியாதா. 


உலகமே நவீன தொழில்நுட்பத்திற்கு மாறி வருகிறது. இங்கு மட்டும் சுதந்திரத்திற்கு முன்பு இருந்த நிலை தான் தொடர்கிறது. மழை எச்சரிக்கை சரிவர அளிக்கவில்லை எனில் சென்னை வானிலை மையம் எதற்கு. 

வானிலை ஆய்வு மையத்தை நவீனப்படுத்த வேண்டும். 


காலநிலை மாற்றம் குறித்து நான் தொடர்ந்து குரல் கொடுது்து வருகிறேன். நிவாரண நிதி விவகாரத்தில் மத்திய அரசு அரசியல் பார்க்கக்கூடாது. மத்திய அரசு நிவாரண நிதியை விரைந்து விடுவிக்க வேண்டும். மீட்பு நிவாரண பணிகளை அமைச்சர்கள் விரைவுப்படுத்த வேண்டுமு். ரூ.6000 வெள்ள நிவாரணம் நிதி நிச்சயம் போதாது என்று பாமக தலைவர் அன்பு மணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்