நெல்லை: சென்னை வானிலை ஆய்வு மையத்தை மூடிவிடலாம் என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. கனமழையினால் அங்குள்ள மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை ஒய்ந்த பின்னரும். மக்களின் வாழ்க்கை முறை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பாமல் உள்ளது.
இந்நிலையில், நெல்லையில் வெள்ள பாதித்த பகுதிகளை பார்வையிட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சென்னையில் உள்ள வானிலை ஆய்வு மையத்தை மூடிவிடலாம். அது தேவையில்லை வேஸ்ட். வானிலை மையம் செய்கிற வேலையை ஐந்தாம் வகுப்பு மாணவன் செய்வான். சில மாவட்டங்களில் கன மழை பெய்யும். சில இடங்களில் லேசான மழை பெய்யும் என தான் எப்போதும் அறிவிக்கிறார்கள். இது எங்களுக்கு தெரியாதா.
உலகமே நவீன தொழில்நுட்பத்திற்கு மாறி வருகிறது. இங்கு மட்டும் சுதந்திரத்திற்கு முன்பு இருந்த நிலை தான் தொடர்கிறது. மழை எச்சரிக்கை சரிவர அளிக்கவில்லை எனில் சென்னை வானிலை மையம் எதற்கு.
வானிலை ஆய்வு மையத்தை நவீனப்படுத்த வேண்டும்.
காலநிலை மாற்றம் குறித்து நான் தொடர்ந்து குரல் கொடுது்து வருகிறேன். நிவாரண நிதி விவகாரத்தில் மத்திய அரசு அரசியல் பார்க்கக்கூடாது. மத்திய அரசு நிவாரண நிதியை விரைந்து விடுவிக்க வேண்டும். மீட்பு நிவாரண பணிகளை அமைச்சர்கள் விரைவுப்படுத்த வேண்டுமு். ரூ.6000 வெள்ள நிவாரணம் நிதி நிச்சயம் போதாது என்று பாமக தலைவர் அன்பு மணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
{{comments.comment}}