நெல்லை: சென்னை வானிலை ஆய்வு மையத்தை மூடிவிடலாம் என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. கனமழையினால் அங்குள்ள மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை ஒய்ந்த பின்னரும். மக்களின் வாழ்க்கை முறை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பாமல் உள்ளது.
இந்நிலையில், நெல்லையில் வெள்ள பாதித்த பகுதிகளை பார்வையிட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சென்னையில் உள்ள வானிலை ஆய்வு மையத்தை மூடிவிடலாம். அது தேவையில்லை வேஸ்ட். வானிலை மையம் செய்கிற வேலையை ஐந்தாம் வகுப்பு மாணவன் செய்வான். சில மாவட்டங்களில் கன மழை பெய்யும். சில இடங்களில் லேசான மழை பெய்யும் என தான் எப்போதும் அறிவிக்கிறார்கள். இது எங்களுக்கு தெரியாதா.
உலகமே நவீன தொழில்நுட்பத்திற்கு மாறி வருகிறது. இங்கு மட்டும் சுதந்திரத்திற்கு முன்பு இருந்த நிலை தான் தொடர்கிறது. மழை எச்சரிக்கை சரிவர அளிக்கவில்லை எனில் சென்னை வானிலை மையம் எதற்கு.
வானிலை ஆய்வு மையத்தை நவீனப்படுத்த வேண்டும்.
காலநிலை மாற்றம் குறித்து நான் தொடர்ந்து குரல் கொடுது்து வருகிறேன். நிவாரண நிதி விவகாரத்தில் மத்திய அரசு அரசியல் பார்க்கக்கூடாது. மத்திய அரசு நிவாரண நிதியை விரைந்து விடுவிக்க வேண்டும். மீட்பு நிவாரண பணிகளை அமைச்சர்கள் விரைவுப்படுத்த வேண்டுமு். ரூ.6000 வெள்ள நிவாரணம் நிதி நிச்சயம் போதாது என்று பாமக தலைவர் அன்பு மணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!
குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!
எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு
குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு
தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!
Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?
{{comments.comment}}