சென்னை: பட்டிமன்ற பேச்சாளரும், கவிஞருமான நந்தலாலா உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவரது இறப்பு செய்தி கேட்டு மிகவும் வருத்தமுற்றேன் என முதல்வர் மு க ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
பட்டிமன்ற பேச்சாளரும், கவிஞருமான நந்தலாலா(70) உடல் நலக்குறைவால் பெங்களூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்திருந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை உயிரிழந்தார். இவரது உடல் பூர்வீகமான திருச்சி வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு நாளை இறுதி சடங்குகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கவிஞர் நந்தலாலாவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் முதல்வர் மு க ஸ்டாலின். இது குறித்து அவர் கூறியதாவது,
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர் சங்கத்தின் துணைத் தலைவரும், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினருமான, கவிஞர் நந்தலாலா அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
தமிழ்நாட்டின் புத்தகத் திருவிழாக்கள் முற்போக்கு மேடைகள், தொலைக்காட்சி விவாதங்கள், பட்டிமன்றங்கள், என கலைஞர் நந்தலாலா அவர்களின் குரல் ஒலிக்காத மேடையே இல்லை என்னும் அளவுக்கு அனைத்து உணர்ச்சிகளையும் அரிய தகவல்களையும் தமது பேச்சில் வெளிப்படுத்தும் திறம் பெற்றவர் அவர்.
காவிரி கரையின் மைந்தனான கவிஞர் நந்தலாலா அவர்கள் தனது ஊரான திருச்சியின் மீது கொண்ட தீரா காதலுக்கு திருச்சிராப்பள்ளி ஊரும் வரலாறு நூலே சான்றாகும்.
அவரது ஆற்றல் தமிழ் சமூகத்திற்கு மேலும் பயனளிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினராகவும் அவரை நியமித்திருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.
தந்தை பெரியார் மீது பெரும் பற்றும், பேரறிஞர் அண்ணா மீது பெருமதிப்பும் தலைவர் கலைஞர் மீது மிகுந்த அன்பும் கொண்டிருந்தவர் கலைஞர் நந்தலாலா அவர்கள். அறிவும் துணிச்சலும் செயலுமாக வாழ்ந்தவர் கலைஞர். உரிமை மீட்பு போரில் அவரே நமக்கு என்றும் போர்வாள் என்றும் உண்மை இதழில் அவர் எழுதிய சொற்களை மறக்க முடியாது. என் மீதும் மிகுந்த மரியாதையும் பாசமும் கொண்டிருந்தார். எனது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பரந்த மனதோடும் அன்போடும் வாழ்த்தி பேசியதையும் இவ்வேளையில் நினைவு கூறுகிறேன்.
மேலும் பல்லாண்டுகள் தமிழ் சமூகத்திற்கு அருந்தொண்டாற்றவிருந்த அவர் மறைந்து விட்டார் என்பது வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் தோழர்களுக்கும், தமிழன்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கலையும் ஆறுதல்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
17.5 கோடிக்கு வீடு வாங்கி .. 1.6 கோடிக்கு.. வாடகைக்கு விடும் நடிகர் மாதவன்!
வாரத்தின் இறுதி நாளான இன்றும் தங்கம் விலை உயர்வு... எவ்வளவு தெரியுமா?
தாய்வீடு அனிதா ராஜை ஞாபகம் இருக்கா.. 62 வயதிலும் எப்படி.. ஃபிட்டா இருக்காங்க பாருங்க!
தனுசின் குபேரா முதல் நாள் வசூல் இவ்வளவு தானா?.. ராயனை விட மோசம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
ஆபரேஷன் சிந்து தொடர்கிறது.. ஈரானிலிருந்து இதுவரை 517 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்
93 ஆண்டுகளில் இல்லாத வரலாறு.. சதம் போடுவதில் அசகாய சாதனையைப் படைத்த.. ஜெய்ஸ்வால்!
போர்களும், மோதல்களும் சூழ்ந்த உலகம்.. யோகா அமைதியைக் கொண்டு வரும்.. பிரதமர் மோடி நம்பிக்கை
பாதுகாப்பான Iron Dome தகர்ந்ததா.. ஈரானின் அதிரடியால் இஸ்ரேல் மக்கள் அதிர்ச்சி + பதட்டம்!
புதிய பொலிவுடன் வள்ளுவர் கோட்டம்: நாளை திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
{{comments.comment}}