சென்னை: காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவராக விளங்கும் ராகுல்காந்தி, தனிப்பட்ட முறையில் என்மீது காட்டும் அன்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நான் ராகுல் காந்தியை அருமைச் சகோதரர் என்றே குறிப்பிடுவேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் ராஜா சொக்கரின் இல்லத் திருமண விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,
சுயமரியாதை உணர்வுடன் நடைபெற்ற இந்தத் திருமணம் சமூக மாற்றத்தின் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இதுபோன்ற சீர்திருத்த மற்றும் சுயமரியாதை திருமணங்களுக்கு முன்னதாக சட்ட அங்கீகாரம் இல்லாமல் இருந்தது. ஆனால் 1967ஆம் ஆண்டு அண்ணா தலைமையிலான திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, இத்தகைய திருமணங்கள் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவராக விளங்கும் ராகுல்காந்தி, தனிப்பட்ட முறையில் என்மீது காட்டும் அன்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நான் ராகுல் காந்தியை அருமைச் சகோதரர் என்றே குறிப்பிடுவேன். காரணம் அவர் எப்போது என்னுடன் பேசினாலும் My Dear Brother என்றே அழைப்பார். திமுக, காங்கிரஸ் உறவு நிச்சயம் இந்தியாவை காப்பாற்றும். ராகுல்காந்தி என்மீது காட்டும் தனிப்பட்ட அன்பு அளவு கடந்தது.
திமுகவும், காங்கிரசும் ஒரு காலத்தில் வெவ்வேறு பாதைகளில் பயணித்தன. ஆனால் நாட்டு நலன் கருதி திமுகவும், காங்கிரசும் தற்போது ஒரே அணியில் பயணித்து வருகின்றன. திமுக, காங்கிரஸ் உறவு, அரசியல் உறவாக மட்டுமல்லாமல் கொள்கை உறவாகவும் வலுப்பெற்று இந்தியாவின் குரலாக எதிரொலிக்கிறது. சுயமரியாதை திருமணத்துக்கு திமுக ஆட்சியில் சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தமிழகச் சட்டசபை தேர்தல் 2026: மே 4 வாக்கு எண்ணிக்கை - வழிமுறைகளை வெளியிட்ட தேர்தல் கமிஷன்
புதுச்சேரியில் இருந்து இனி 90 மி.லி., மது கொண்டு வந்தாலும் கைது
தமிழகத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயில்: சுகாதாரத்துறை சிறப்பு ஏற்பாடு
புதுச்சேரி பாடத்திட்டத்தில் பிரெஞ்சு மொழி நீக்கம்: திமுக சார்பில் போராட்டம் அறிவிப்பு
இதயம் என்னும் கவிதை...!
குடவோலை முறை.. உலகத்துக்கே வழிகாட்டிய உத்திரமேரூர் தேர்தல் நடைமுறை!
Sri Priya Story: தன்னம்பிக்கை கதை.. உடைந்த சிறகும் உயரப் பறந்த பறவையும்
இன்றைய உலகுக்கேற்ற.. நவீன ஆத்திச்சூடி!
பராமரிப்பு பணி...21 நாட்களுக்கு சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம்
{{comments.comment}}