- மரிய ஜோசப்
பனிக் காலத்திலும்
மழை பெய்கிறது
நீயும் நானும்
நனைவதற்காக...
நனைதல் சுகமென்று
சொல்லிக் கொடுத்தது
நீ தானே...
வா...மீண்டுமொருமுறை
நனைந்து பாா்ப்போம்...

அது மட்டும் தானா...
மழை பாா்த்தல்
மழை தேனீா்
மழை கதைத்தல்
மழையணைப்பு
மழை தூக்கம்
இன்னும்
மழை வகைகள் உண்டு தானே...
நீயற்ற மழை நாட்களை
பிடிப்பதேயில்லை
நாம் நடந்த பாதையில்
மழை உதிா்த்த பூக்களுக்கும்
மௌனமாய் இரங்கல் கூட்டம்
உன்னாலானது...
நீ கேட்கும் பொழுதெல்லாம்
மழையில்லாமலும்
நனைந்து கொள்கிறேன்...!
கம்பனும் கவியும்
வாழும் வரையில்.. வகை தொகையில்லாமல்.. வரிகளைக் கொட்டிய. வாலிபக் கவி!
என் இராமனே!
கொழுக்கட்டை
ஆண் பூ
முகத்தில் முகம் பார்க்கலாம்
ஆகஸ்ட் முதல் வாரத்தில் தவெக அரசின் முதல் பட்ஜெட் : முழுவீச்சில் தீவிரமாக நடக்கும் பணிகள்!
Vikram 1: விக்ரம் -1 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது.. இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!
மேகதாது அணை விவகாரம்: மக்களவையில் திமுக ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ்!
{{comments.comment}}