- மரிய ஜோசப்
பனிக் காலத்திலும்
மழை பெய்கிறது
நீயும் நானும்
நனைவதற்காக...
நனைதல் சுகமென்று
சொல்லிக் கொடுத்தது
நீ தானே...
வா...மீண்டுமொருமுறை
நனைந்து பாா்ப்போம்...

அது மட்டும் தானா...
மழை பாா்த்தல்
மழை தேனீா்
மழை கதைத்தல்
மழையணைப்பு
மழை தூக்கம்
இன்னும்
மழை வகைகள் உண்டு தானே...
நீயற்ற மழை நாட்களை
பிடிப்பதேயில்லை
நாம் நடந்த பாதையில்
மழை உதிா்த்த பூக்களுக்கும்
மௌனமாய் இரங்கல் கூட்டம்
உன்னாலானது...
நீ கேட்கும் பொழுதெல்லாம்
மழையில்லாமலும்
நனைந்து கொள்கிறேன்...!
World Letter Writing day: கஷ்டப்பட்டு கடிதம் எழுதி எத்தனை நாளாச்சு!
தாங்கி பிடிக்க தாயும் தூக்கி நிறுத்த தந்தையும் இருந்தால்!
உலக கடித தினம்.. இனிய நினைவுகளுக்கு வணக்கம்!
செம்மொழியான தமிழ் மொழியே
நம்பிக்கையின் முளை மனதில்!
கரிய நிற காகமே.. காத்திருப்பேன் உனக்காக!
செப்டம்பர் மாதம்.. செப்டம்பர் மாதம்.. 2026ம் ஆண்டின் 9வது மாதம்.. சிறப்புகள்!
பாட்டிகள் பற்றிய சுவாரஸ்யமான கட்டுரை!
அழகிய மாற்றம்!
{{comments.comment}}