டெல்லி: காங்கிரஸ் குழு கூட்டம் இன்று பிற்பகல் 2:30 மணிக்கு டெல்லியில் நடைபெற உள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டுத் தொடர் கடந்த நவம்பர் 25 ஆம் தொடங்கி டிசம்பர் 20ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா கூட்டணி சேர்ந்த எதிர்க்கட்சியினர் அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம், சம்பல் துப்பாக்கி சூடு உள்ளிட்டவை குறித்து பல்வேறு கருத்துக்களை முன்வைத்தனர். ஆனால் இந்த கருத்துக்கள் எதையும் மத்திய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என தெரிகிறது. அப்போது தொடர்ந்து எதிர்க்கட்சியினர் அமலியில் ஈடுபட்டதால் இரண்டு முறையும் ராஜ்யசபா லோக்சபா என இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

இந்த நிலையில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இன்று பிற்பகல் 2:30 மணி அளவில் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி காங்கிரஸ், பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, உட்பட பல்வேறு செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர். இந்தக் கூட்டத்தில் மக்களவையில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள், தற்போதைய அரசியல், பொருளாதார பிரச்சினைகள், குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.
அதே சமயத்தில் அடுத்த ஆண்டு வரும் டெல்லி சட்டசபை தேர்தல் குறித்தும் விவாதிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. காங்கிரஸ் எம்பியாக பிரியங்கா காந்தி பதவியேற்ற பிறகு காங்கிரஸ் சார்பில் நடைபெறும் முதல் காரியக் கமிட்டி கூட்டம் இதுவே என்பது நினைவிருக்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அலர்ட்!
பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!
வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆவேசம்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி!
திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள்: அன்புமணி ராமதாஸ் வேதனை!
ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!
Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!
சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!
Amma's Pride ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சென்னையில் உருவான குறும்படம்!
{{comments.comment}}