டெல்லி: காங்கிரஸ் குழு கூட்டம் இன்று பிற்பகல் 2:30 மணிக்கு டெல்லியில் நடைபெற உள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டுத் தொடர் கடந்த நவம்பர் 25 ஆம் தொடங்கி டிசம்பர் 20ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா கூட்டணி சேர்ந்த எதிர்க்கட்சியினர் அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம், சம்பல் துப்பாக்கி சூடு உள்ளிட்டவை குறித்து பல்வேறு கருத்துக்களை முன்வைத்தனர். ஆனால் இந்த கருத்துக்கள் எதையும் மத்திய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என தெரிகிறது. அப்போது தொடர்ந்து எதிர்க்கட்சியினர் அமலியில் ஈடுபட்டதால் இரண்டு முறையும் ராஜ்யசபா லோக்சபா என இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

இந்த நிலையில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இன்று பிற்பகல் 2:30 மணி அளவில் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி காங்கிரஸ், பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, உட்பட பல்வேறு செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர். இந்தக் கூட்டத்தில் மக்களவையில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள், தற்போதைய அரசியல், பொருளாதார பிரச்சினைகள், குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.
அதே சமயத்தில் அடுத்த ஆண்டு வரும் டெல்லி சட்டசபை தேர்தல் குறித்தும் விவாதிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. காங்கிரஸ் எம்பியாக பிரியங்கா காந்தி பதவியேற்ற பிறகு காங்கிரஸ் சார்பில் நடைபெறும் முதல் காரியக் கமிட்டி கூட்டம் இதுவே என்பது நினைவிருக்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
விஜய்க்கு "விஜயகாந்த்" மூலம் செக் வைத்த திமுக.. கருணாநிதி விட்டதைப் பிடித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!
திமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக.. முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பிரேமலதா சந்திப்பு
2016லேயே நடந்திருக்க வேண்டியது.. தாமதமாக திமுக கூட்டணிக்கு வந்துள்ளோம்.. பிரேமலதா விஜயகாந்த்
திமுக-தேமுதிக கூட்டணி.. கேப்டனின் ஆன்மா மன்னிக்காது: தமிழக பாஜக எக்ஸ் தள பதிவு!
தேமுதிகவின் புதிய பயணம்... இப்ப எந்த நிலையில் இருக்கிறது தேமுதிகவின் வாக்கு வங்கி?
இனி ஆண்டுதோறும் பெண்களுக்கு ரூ.2000 வழங்கப்படும்: அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு!
தமிழகத்தில் தேனி, விருதுநகர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!
நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை!
திமுகவுடன் கூட்டணி.. தேமுதிகவிலிருந்து ஏற்கனவே போனவர்கள் நிலை என்னாகும்?
{{comments.comment}}