சென்னை: வணக்கம் மக்களே.. ராமர் சிலையை சூப்பரா நிறுவிட்டாங்க.. நாடே விழாக்கோலத்துல இருக்கு.. எல்லோரும் மகிழ்ச்சியா இருக்காங்க.. எல்லாம் நல்லபடியா நடந்தா சரித்தான்.. சரி, இன்னிக்கி ஈசி குக்கிங்ல நான் உங்களுக்கு சொல்ல போறது என்ன தெரியுமா ? வாங்க பார்க்கலாம்.
சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த சௌசௌ சட்னி பத்திதாங்க இன்னிக்கு சொல்லப் போறேன்.. என்னாது.. சௌசௌல சட்னியா, அது எப்படிங்க நல்லா இருக்குமானு தானே நினைக்கிறீங்க, ரொம்ப நல்லா இருக்குங்க. முதல்ல "செள செள"ல இருக்கிற சத்துக்களை சொல்றேன் கேட்டுக்கோங்க ஃபிரண்ட்ஸ்.
செள செள காயில், நீர்ச்சத்தும் கால்சியம் சத்தும் நிறைந்து இருக்கிறதால, எலும்புகளுக்கு மிகவும் நல்லதுங்க. வளரும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் இந்த சௌசௌ, ரத்த அழுத்தத்தை சீராக வைக்கவும் உதவுதுங்க. இது மாதிரி நிறைய சொல்லிட்டே போகலாம். இப்ப வாங்க சட்னிக்குப் போய்ருவோம் சட்டுப்புட்டென்று!
செள செள சட்னியை எப்படி செய்யணும்.. என்னென்ன பொருட்கள் தேவைன்னு சொல்றேன்.. நோட் பண்ணிக்கோங்க.
தேவையான பொருட்கள்:
செள - செள - 1 (பெரியது)
சின்ன வெங்காயம் - 15
காய்ந்த மிளகாய் - 4
மிளகு - 1 ஸ்பூன்
பூண்டு - 6 பல்
தக்காளி - 2
தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்
வெள்ளை உளுந்து- 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி -சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்
செய்முறை:
முதலில் அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அதில் ஒரு ஸ்பூன் வெள்ளை உளுந்து, மிளகு, வர மிளகாய் போட்டு வதக்கவும். பிறகு சிறு துண்டுகளாக நறுக்கிய சௌசௌ சின்ன வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து நன்கு வதக்கவும்.
பாதி வதங்கியவுடன் நறுக்கிய தக்காளி தேங்காய் துருவல், புளி சேர்த்து சிறிது நேரம் வதக்கிய பின் அடுப்பில் இருந்து இறக்கி, ஆறியவுடன் தேவையான உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அவ்வளவுதாங்க, சுவையான சௌசௌ சட்னி ரெடிங்க.
காய்கறி சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு கூட இந்த சட்னியை வைத்து இட்லியோ, தோசையோ செஞ்சு கொடுங்க. விரும்பி சாப்பிடுவாங்க. டெய்லி என்ன சட்னி அரைப்பது என்று யோசிக்காமல் வித்தியாசமான இந்த சட்னி செஞ்சு அசத்துங்க ஃபிரண்ட்ஸ்.
ஓகேங்க.. மறுபடியும் இன்னொரு ரெசிபியோட வரேன்.. till then, bye bye!
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}