காரைக்காலில் ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு.. கொரோனாவுக்கு பெண் பலி!

Apr 03, 2023,02:45 PM IST

காரைக்கால்: புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட காரைக்காலில் ஒரு பெண் கொரோனா தொற்றுக்குப் பலியாகியுள்ளார்.

ஒன்றரை வருடமாக கொரோனாவால் ஏற்படும் உயிர்ப்பலி தவிர்க்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. ஓமைக்ரான் தொற்று அதிகரித்து வருவதால் மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றன. பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. மருத்துவ முகாம்களும் நடந்து வருகின்றன.



இந்த நிலையில் புதுச்சேரிக்கு  உட்பட்ட காரைக்காலில் ஒன்றரை வருட இடைவெளிக்குப் பிறகு இப்போது ஒரு கொரோனா உயிர்ப்பலி ஏற்பட்டுள்ளது.

காரைக்காலைச் சேர்ந்த 35 வயதுப் பெண் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவரது நிலை மோசமானதைத் தொடர்ந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.  அங்கு அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். 

மீண்டும் கொரோனாவுக்கு ஒரு உயிர்ப்பலி ஏற்பட்டிருப்பது புதுச்சேரி யூனியன் பிரதேச மக்களை அதிர வைத்துள்ளது.  புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கடந்த 4 நாட்களில் 20க்கும் மேற்பட்டோருக்கு  கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் உயிரிழப்பு ஏற்பட்டிருப்பதைத் தொடர்ந்து காரைக்கால் முழுவதும் மருத்துவ முகாம்கள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தடுப்பூசி போடுவதையும் சுகாதாரத் துறை அதிகாரிகள் ஊக்குவித்து வருகின்றனர். முகக் கவசம் அணிவதை பொதுமக்கள் கட்டாயம் கடைப்பிடிக்குமாறும் கோரிக்கைவிடுக்கப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

Summer to peak in Tamil Nadu: வெப்பம் அதிகரிக்கும் அபாயம்.. டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு

news

1971 சாதனையை முறியடிக்க இலக்கு: கூட்டணி கட்சிகளுக்கு 'செக்' வைக்கும் திமுக

news

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கண்டனத் தீர்மானம்

news

அரசியல் அலசல்.. அதிமுகவில் காளியம்மாள்.. நல்ல பேச்சாளரை நழுவ விட்ட திமுக, தவெக!

news

சித்ரா பௌர்ணமி நாளில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் இந்திரன்.. அன்னை தடாதகை - 3

news

தைப்பொங்கல்.. காலங்கள் கடந்தும் கரையாத நினைவலைகள்!

news

பேச்சை விட நேர்மையான உணர்வுகளுக்கே முக்கியத்துவம்!

news

என் உடலைப் பேணத் தொடங்கியபோது.. I started taking care of my body when...

news

பழுக்கக் காய்ச்சிய இரும்பை சுத்தியால் அடித்தால்.. The hammer hits the heated steel!

அதிகம் பார்க்கும் செய்திகள்